settings icon
share icon
கேள்வி

தோப்பு விக்கிரகம் எது?

பதில்


தோப்பு விக்கிரகம், அல்லது அஸ்தோரேத் என்பது பண்டைய சிரியா, பெனிக்கேநாடு மற்றும் கானானில் வழிபடப்பட்ட முக்கியமான பெண் தெய்வத்தின் பெயர். பெனிக்கே நாட்டார்கள் அதனை அஸ்தார்த்தே என்று அழைத்தனர், அசீரியர்கள் அதனை இஷ்தார் என்று வணங்கினர், மேலும் பெலிஸ்தியர்களுக்கு தோப்பு விக்கிரக கோயில் இருந்தது (1 சாமுவேல் 31:10). கானான் தேசத்தை இஸ்ரவேலர் முழுமையாக கைப்பற்றாமல் போனபடியால், யோசுவா மரித்தவுடன் தோப்பு விக்கிரக வழிபாடு தப்பிப் பிழைத்தது மற்றும் இஸ்ரவேலை வெகுவாகப் பாதித்தது (நியாயாதிபதிகள் 2:13).

தோப்பு விக்கிரகம் தரையில் நடப்பட்ட ஒரு மூட்டு இல்லாத மரத்தின் தண்டு மூலம் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. தண்டு பொதுவாக தெய்வத்தின் அடையாளமாக செதுக்கப்பட்டது. செதுக்கப்பட்ட மரங்களுடனான தொடர்பு காரணமாக, தோப்பு விக்கிரக வழிபாட்டு இடங்கள் பொதுவாக "தோப்புகள்" என்று அழைக்கப்பட்டன, மேலும் "தோப்பு விக்கிரகம்" (பன்மை, "தோப்பு விக்கிரகங்கள்") என்ற எபிரேய வார்த்தை தெய்வத்தை அல்லது மரங்களின் தோப்பைக் குறிக்கலாம். மனாசே ராஜாவின் தீய செயல்களில் ஒன்று, "அவன் பண்ணின தோப்புவிக்கிரகத்தை தேவாலயத்தில் வைத்தான்" (2 ராஜாக்கள் 21:7). "செதுக்கப்பட்ட தோப்பு விக்கிரகக் கம்பத்தின்" மற்றொரு மொழிபெயர்ப்பு "தோப்பின் செதுக்கப்பட்ட உருவம்" (KJV).

சந்திரன்-தெய்வமாக கருதப்படும், தோப்பு விக்கிரகம் பெரும்பாலும் சூரியக் கடவுளான பாகாலின் மனைவியாகக் காட்டப்படுகிறது (நியாயாதிபதிகள் 3:7, 6:28, 10:6; 1 சாமுவேல் 7:4, 12:10). தோப்பு விக்கிரகம் காதல் மற்றும் யுத்தத்தின் பெண் தெய்வமாகவும் வணங்கப்படுகிறது, மேலும் சில சமயங்களில் மற்றொரு கானானிய பெண் தெய்வமான அனாத்துடன் இணைக்கப்படுகிறது. தோப்பு விக்கிரகத்தின் வழிபாடு அதன் சிற்றின்பம் மற்றும் சடங்கு விபச்சாரத்திற்காக குறிப்பிடப்பட்டது. தோப்பு விக்கிரகத்தின் ஆசாரியர்கள் மற்றும் பெண் ஆசாரியர்கள் ஜோசியம் மற்றும் குறிசொல்லுதல் ஆகியவற்றைப் பயிற்சி செய்தனர்.

கர்த்தராகிய தேவன், மோசேயின் மூலம், தோப்பு விக்கிரக வழிபாட்டைத் தடை செய்தார். யேகோவாவின் பலிபீடத்திற்கு அருகில் மரங்களின் தோப்பு இருக்கக்கூடாது என்று நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது (உபாகமம் 16:21). தேவனுடைய தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்ரவேலில் தோப்பு விக்கிரக வழிபாடு ஒரு முடிவில்லாத பிரச்சனையாக இருந்தது. சாலமோன் விக்கிரகாராதனையில் நழுவியபோது, அவன் ராஜ்யத்திற்குள் கொண்டுவந்த புறமத தெய்வங்களில் ஒன்று தோப்பு விக்கிரகம், "சீதோனியர்களின் தெய்வம்" (1 ராஜாக்கள் 11:5, 33). பின்னர், யேசபேல் தோப்பு விக்கிரக வழிபாட்டை இன்னும் அதிகமாக்கினாள், தோப்பு விக்கிரகத்தின் 400 தீர்க்கதரிசிகள் அரச ஊதியத்தில் (1 ராஜாக்கள் 18:19). சில சமயங்களில், இஸ்ரவேல் மறுமலர்ச்சியை அனுபவித்தது, மேலும் தோப்பு விக்கிரக வழிபாட்டுக்கு எதிரான குறிப்பிடத்தக்க யுத்தங்களை கிதியோன் தலைமையில் நேரிட்டது (நியாயாதிபதிகள் 6:25-30), மேலும் ராஜாவாகிய ஆசா (1 ராஜாக்கள் 15:13), மற்றும் ராஜாவாகிய யோசியா (2 ராஜாக்கள் 23:1-7) ஆகியோரால் வழிநடத்தப்பட்டன.

English



முகப்பு பக்கம்

தோப்பு விக்கிரகம் எது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries