settings icon
share icon
கேள்வி

ஆவிகளை இடம் மாற்றுவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


"ஆவிகளை இடம் மாற்றுவது" என்கிற யோசனை என்னவென்றால், யாரோ ஒருவர் அவரைத் தொட்டு அல்லது அருகில் இருப்பதன் மூலம் ஒரு அசுத்த ஆவியை மற்றொரு நபருக்கு மாற்ற முடியும் என்பதாகும். இந்த கருத்தை போதிப்பவர்கள் மற்றவர்களிடம் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள், அவர்கள் அத்தகைய உணர்வை தங்களுக்குள் இடம் மாற்றலாம். மற்றொரு நபரைத் தொடுவதன் மூலம் அல்லது அருகில் இருப்பதன் மூலம் அல்லது வேறு எந்த முறையினாலும் ஆவிகளை இடம் மாற்றும் செய்யும் கருத்துக்கு எந்தவித வேத அடிப்படையும் இல்லை. நிச்சயமாக, மற்றவர்களின் எதிர்மறை மனப்பான்மை அல்லது பாவமான நடத்தைகளால் நாம் பாதிக்கப்படலாம், ஆனால் இவை மற்றவர்களுக்கு இடம் மாற்றப்படக்கூடிய ஆவிகள் என அடையாளம் காண்பது வேதாகமத்திற்கு முரணானது ஆகும்.

வேதாகமம் இரண்டு வகையான ஆவிகளைக் கொண்டுள்ளது, விழுந்துபோகாத, பரிசுத்த தேவதூதர்கள் மற்றும் சாத்தானின் கலகத்தில் அவனைத் பின்தொடர்ந்து வந்த தேவதூதர்கள். பாவம் செய்யாத தேவதூதர்கள் ஊழியஞ்செய்யும் ஆவிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் (எபிரெயர் 1:14), இரட்சிப்பின் வாரிசுகளாக இருப்பவர்களுக்கு, அதாவது கிறிஸ்துவை இரட்சகராக நம்புகிறவர்களுக்கு ஊழியஞ்செய்ய தேவன் அவர்களை அனுப்புகிறார் என்று நமக்கு கூறப்படுகிறது. அவருடைய கிளர்ச்சியில் சாத்தானுடன் கைக்கோர்த்து இணைந்த தேவதூதர்கள் அந்தகாரத்தில் தள்ளப்பட்டனர் (யூதா 1:6) மற்றும் தீமைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆவிக்குரிய பிசாசுகள் கூட்டத்தை உருவாக்குகிறார்கள்.

பிசாசுகள் ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினத்திற்கு இடம் மாற்றப்பட்ட ஒரே ஒரு நிகழ்வை மட்டுமே வேதாகமம் பதிவு செய்கிறது. இயேசு பிசாசுகளின் சேனையைக் கைப்பற்றிய மனிதனிடமிருந்து பன்றிகளின் கூட்டத்திற்கு செல்லும்படியாக மாற்றியபோது அது நடந்தது (மத்தேயு 8:28-34). இயேசு இந்த அற்புதத்தை மீண்டும் செய்யவில்லை, ஆவிகளை இடம் மாற்றுவது பற்றி அவர் தனது சீடர்களுக்கு (அல்லது நமக்கு) ஒருபோதும் எச்சரிக்கை செய்யவில்லை. கிறிஸ்துவில் மறுபடியும் பிறந்த விசுவாசி சாத்தானுக்கோ அல்லது அவனோடு விழுந்துபோன தேவதூதர்களுக்கோ பயப்பட எந்த காரணமும் இல்லை. நாம் அவனை எதிர்த்தால், அவன் நம்மை விட்டு ஓடிவிடுவான். "ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7). உண்மையான விசுவாசிகளாக, நம் சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம். பரிசுத்த ஆவியானவர் அவருடைய ஆலயத்தில் ஒரு பிசாசை குடிக்கொண்டிருக்க சகித்துக் கொள்ள மாட்டார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

English



முகப்பு பக்கம்

ஆவிகளை இடம் மாற்றுவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries