settings icon
share icon
கேள்வி

உங்களுக்கு நிறைய கடன் இருந்தால், கடனை செலுத்தும் போது தசமபாகம் கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்த முடியுமா?

பதில்


கடனைச் செலுத்தும் போது தசமபாகம் கொடுப்பதை நிறுத்துவது அனுமதிக்கப்படுகிறது. கடனை அடைப்பது ஒரு கடமை; தசமபாகம் கொடுப்பது "விரும்பினால்" என்ற எளிய காரணத்திற்காக, தசமபாகம் என்ற கட்டளை மோசேயின் நியாயப்பிரமாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது, மேலும் கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்—கர்த்தருடைய வேலைக்குக் கொடுப்பது மிகவும் முக்கியமானது. தியாகமனதோடு நிதியைக் கொடுப்பது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் தேவனுடைய அழைப்பின் ஒரு பகுதியாகும். கடனை அடைப்பது உண்மையாகவே சாத்தியமற்றது என்றால், அதே நேரத்தில் தசமபாகம் / கொடுப்பதைத் தொடர்வது, கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக கொடுப்பதைக் குறைப்பது அல்லது முழுவதுமாக தற்காலிகமாக நிறுத்துவது தவறல்ல.

மற்றவர்களிடம் நமது மாற்ற முடியாத கடமை என்னவென்றால், நாம் அவர்களை நேசிப்பதும், அவர்கள் நம்முடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு அவர்களுடன் பழகுவதுதான் (மத்தேயு 7:12). ஜனங்கள் நமக்குக் கொடுக்க வேண்டிய கடனை அடைக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம், “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது" (ரோமர் 13:8-10).

பழைய உடன்படிக்கையின் தசமபாகம் கொடுக்கும் நியாயப்பிரமாணம், லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆசாரியர்களின் பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தேவனுடைய ஏற்பாடாகும். தேவாலயத்தில் ஊழியம் செய்வதற்கும் ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களுக்கு நிதி ஆதரவு தேவைப்பட்டது (எண். 18:26; உபாகமம் 26:12-15). எனவே, இஸ்ரவேலர்கள் ஆலயத்தில் தசமபாகம் கொடுக்கத் தவறியபோது, தேவன் அவர்களை எச்சரித்தார், “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே” (மல்கியா 3:8).

தசமபாகம் என்பது ஒரு மனிதனின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்காக இருந்தது: “லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்” (எபிரெயர் 7:5). இயேசுவின் பூமிக்குரிய வாழ்நாள் முழுவதும் லேவிய ஆசாரியத்துவம் ஆலயத்தில் தொடர்ந்து சேவை செய்தது, மேலும் தசமபாகம் தேவைப்பட்டது. ஆனால் கர்த்தராகிய இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்குப் பிறகு, காரியங்கள் முற்றிலும் மாறிவிட்டன: "ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்" (எபிரெயர் 7:12). கிறிஸ்து இப்போது நமது பிரதான ஆசாரியர். கிறிஸ்தவர்கள் இப்போது தேவனுடைய ஆலயமாகவும் அவருடைய ராஜரீக ஆசாரியத்துவமாகவும் உள்ளனர் (எபிரெயர் 4:14-15; 1 கொரிந்தியர் 6:19-20; 1 பேதுரு 2:9-10).

நம்முடைய பிரதான ஆசாரியர் நமக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பதன் மூலம் (எபிரெயர் 12:24; 10:16) புதிய உடன்படிக்கையை நமக்கு (நம் இருதயங்களில் எழுதப்பட்ட தேவனுடைய பிரமாணம்) ஊழியம் செய்கிறார். இந்த பிரமாணம் வல்லமை வாய்ந்ததாக செயல்படுகிறது, ஆவியானவர்-உருவாக்கிய அன்புடன் மற்றவர்களை நேசிக்கச் செய்கிறது (கலாத்தியர் 5:22-23). அதனால்தான் யோவான் இவ்வாறு எழுதுகிறார், “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.” (1 யோவான் 3:17-18). தேவனுடைய அன்பு ஒரு உண்மையான கிறிஸ்தவரைக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறது, ஆனால் புதிய ஏற்பாட்டு நிருபங்கள் எதுவும் கிறிஸ்தவர்கள் தசமபாகம் அல்லது வேறு எந்த சதவீதத்தையும் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடவில்லை அல்லது பரிந்துரைக்கவில்லை. கிரிஸ்துவர்கள் அன்பின் விளைவாக கொடுப்பது கிறிஸ்தவ கொடுத்தல் ஆகும்.

கிறிஸ்தவர்கள், அவர்கள் விரும்பினால், தங்கள் வருமானத்தில் தசமபாகத்தை (பத்தில் ஒரு பங்கை) திருச்சபைக்கு வழங்கலாம், அவர்களின் தேவைப்படும் உலகில் ஆவிக்குரிய மற்றும் பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். சிலர் பத்தில் ஒரு பங்கிற்குக் குறைவாகத் தேர்வு செய்வார்கள்; சிலர் அதிகமாக கொடுக்க தேர்வு செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமை திருச்சபையில் கொடுக்க பவுல் பரிந்துரைக்கிறார்: "உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்" (1 கொரிந்தியர் 16:2).

கிறிஸ்தவர்கள் பதுக்கி வைக்கக்கூடாது, ஆனால் தேவன் கட்டளையிடும் அளவுக்கு கொடுக்க வேண்டும். அது தேவனுடைய பணம். அவரது வெகுமதிகள் செலவை விட அதிகம். “இதை நினைவில் வையுங்கள்: பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:6-8).

English



முகப்பு பக்கம்

உங்களுக்கு நிறைய கடன் இருந்தால், கடனை செலுத்தும் போது தசமபாகம் கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்த முடியுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries