settings icon
share icon
கேள்வி

ஆதாமும் ஏவாளும் தங்களுடன் ஒரு சர்ப்பம் பேசுவதை ஏன் வினோதமாக காணவில்லை?

பதில்


சுவாரஸ்யமாக, சர்ப்பம்/பாம்பு ஆதாம் மற்றும் ஏவாளிடம் பேசுவது வேதாகமத்தில் ஒரு விலங்கு பேசும் ஒரே நிகழ்வு அல்ல. பிலேயாம் தீர்க்கதரிசி அவனுடைய கழுதையால் கண்டிக்கப்பட்டான் (எண்ணாகமம் 22:21-35 பார்க்கவும்). விலங்குகள் பேசும் திறனைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், விலங்குகள் பேசுவதற்கு உதவுவது உட்பட அற்புதங்களைச் செய்யக்கூடிய சக்திவாய்ந்வர்கள் (தேவன், தூதர்கள், சாத்தான், பிசாசுகள்) இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏதேன் தோட்டத்தில் உள்ள சாத்தான் பாம்பு மூலம் பேசுகிறான், பாம்பு தன்னிச்சையாக பேசவில்லை என்று பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, ஆதியாகமம் 3-ன் கணக்கு, பாம்புகள் புத்திசாலித்தனமாக இருந்தன, அவை ஒத்திசைவாக பேசுவதற்கு உதவும் என்று கூறவில்லை.

அப்படியிருந்தும், ஆதாமும் ஏவாளும் தங்களிடம் ஒரு மிருகம் பேசுவதை ஏன் வினோதமாகக் காணவில்லை? ஆதாம் மற்றும் ஏவாளுக்கு விலங்குகள் மீது நாம் காட்டும் அதே கண்ணோட்டம் இருந்திருக்க வாய்ப்பில்லை. நமது சகாப்தத்தில், மனிதர்களைப் போலவே விலங்குகளும் பேச முடியாதவை என்பதை அனுபவத்திலிருந்து நாம் அறிவோம். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் குழந்தைப் பருவம் இல்லை, கற்றுக்கொள்ள மற்ற மனிதர்களும் இல்லை. ஆதாமும் ஏவாளும் சில நாட்களே உயிருடன் இருந்திருப்பதால், சில விலங்குகளுக்காவது பேச்சுத்திறன் இருப்பதாக அவர்கள் நம்புவது நியாயமற்றது அல்ல. ஆதாமும் ஏவாளும் சந்தித்த முதல் பேசும் விலங்கு இதுவல்ல என்பதும் சாத்தியம். ஆதாம் மற்றும் ஏவாளுடன் தொடர்புகொள்வதற்கு சாத்தான் அல்லது தேவனே கூட விலங்குகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆதியாகமக் கணக்கில் மிகக் குறைவான விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன, மேலும் பல காரியங்கள் ஊகங்களுக்கும் அனுமானத்திற்கும் விடப்பட்டுள்ளன.

கடைசியாக, ஏவாள் பாம்புக்குப் பதில் சொல்வது நியாயமற்றது அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, பாம்பு தனக்குப் புரியும் மொழியில் பேசி, புரிந்துகொள்ளக்கூடிய கேள்வியைக் கேட்டது. ஆதாம் அருகில் இருந்திருக்கலாம், மேலும் அவள் எதையும் கற்பனை செய்யவில்லை என்பதை சரிபார்க்க முடியும். பாம்பு பேசுவது அல்ல அவர்களைப் பயமுறுத்தியிருக்க வேண்டும். தேவனுடைய அறிவுறுத்தல்களை அவர்களை சந்தேகிக்கச் செய்ததே (ஆதியாகமம் 3:1), தேவனுக்கு முரண்படுகிறான் (ஆதியாகமம் 3:4), மற்றும் தேவனுடைய நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கினான் (ஆதியாகமம் 3:5). ஏவாளும் ஆதாமும் பாம்புடன் பேசுவதை நிறுத்துவதற்கு அது போதுமானதாக இருந்திருக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

ஆதாமும் ஏவாளும் தங்களுடன் ஒரு சர்ப்பம் பேசுவதை ஏன் வினோதமாக காணவில்லை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries