settings icon
share icon
கேள்வி

பொருட்சுருக்க பிரச்சினை என்றால் என்ன?

பதில்


முதல் மூன்று சுவிசேஷப் புத்தகங்களான மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகியவைகளை ஒன்றுக்கொன்று ஒப்பிடும்போது, எவ்வித சந்தேகமுமில்லாமல் அவைகளின் உள்ளடக்கங்கள் மற்றும் வெளிப்பாடுகளில் ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்திருக்கின்றன. இதன் விளைவாக, மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகியோர் “பொருட் சுருக்கமான நற்செய்தி நூல்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன. சினோப்டிக் (synoptic) என்ற வார்த்தை அடிப்படையில் "ஒரு பொதுவான பார்வையுடன் ஒன்றாகப் பார்ப்பது" என்று பொருள்படும். அதிலிருந்து அவர்கள் தங்கள் நற்செய்திகளுக்கான பொருளைப் பெற்றார்கள். பொருட் சுருக்கமான நற்செய்திகளிடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை எவ்வாறு விளக்குவது என்ற கேள்விதான் பொருட்சுருக்க பிரச்சினை (Synoptic Problem) என்று அழைக்கப்படுகிறது.

மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகிய சுவிசேஷ புத்தகங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்திருக்கின்றன என்று சிலர் வாதிடுகிறார்கள், சுவிசேஷ புத்தகங்களின் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் நற்செய்தி நூல்களையோ அல்லது மூன்று பேருக்கும் அறிந்திருக்கிற மற்றொரு பொதுவான மூல ஆதாரத்தையோ பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார்கள். மூன்று சுவிசேஷ எழுத்தாளர்கள் பயன்படுத்தியதாக கூறும் இந்த “மூல ஆதாரம்”, ஜெர்மன் வார்த்தையான குவெல்லேயிலிருந்து வருகிற முதல் எழுத்தினைக் கொண்டு “Q” என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது, குவெல்லே என்பதற்கு “மூல ஆதாரம்” என்று அர்த்தம். “Q” ஆவணத்திற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? இல்லை அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. “Q” ஆவணத்தின் எந்த ஒரு பகுதியோ அல்லது துண்டு பாகமோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்பகால சபைப் பிதாக்கள் யாரும் தங்கள் எழுத்துக்களில் இப்படி ஒரு நற்செய்தி “மூல ஆதாரத்தை” குறிப்பிடவில்லை. "Q" என்பது வேதாகமத்தின் உந்தப்படுதலை மறுக்கும் தாராளவாத "அறிஞர்களின்" கண்டுபிடிப்பு ஆகும். வேதாகமம் வெறுமனே ஒரு இலக்கிய படைப்பேத் தவிர வேறொன்றுமில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள், மற்ற இலக்கியப் படைப்புகளுக்கும் கொடுக்கப்பட்ட அதே திறனாய்விற்கு உட்பட்டதாகும். மீண்டும், “Q” ஆவணத்திற்கு வேதாகம ரீதியாகவோ, இறையியல் ரீதியாகவோ அல்லது வரலாற்று ரீதியாகவோ எந்த ஆதாரமும் இல்லை.

மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா இப்படி ஒரு “Q” ஆவணத்தைப் பயன்படுத்தவில்லை என்றால், அவர்களின் நற்செய்தி நூல்கள் ஏன் மிகவும் ஒன்றுபோல ஒத்திருக்கின்றன? இதற்கு பல சாத்தியமான விளக்கங்கள் உள்ளன. எந்த நற்செய்தி முதலில் எழுதப்பட்டிருந்தாலும் (ஒருவேளை மாற்கு எழுதின சுவிசேஷம், மத்தேயு முதலில் எழுதப்பட்டதாக திருச்சபை பிதாக்கள் தெரிவிக்கிறார்கள்), மற்ற நற்செய்தி எழுத்தாளர்கள் மெய்யாகவே அதை காணும்படியாக மற்றும் வாசிக்கும்படியாகவும் வாய்ப்பைக் கொண்டிருந்திருக்கலாம். மத்தேயு மற்றும் / அல்லது லூக்கா மாற்குவின் நற்செய்தி நூலிலிருந்து சில பகுதிகளை நகலெடுத்து தங்கள் நற்செய்தி நூல்களில் பயன்படுத்தினர் என்ற எண்ணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை லூக்காவுக்கு மாற்கு மற்றும் மத்தேயு ஆகியோரின் சுவிசேஷ நூல்களின் அணுகல் இருந்திருக்கலாம், மேலும் அவர்கள் இருவரின் நூல்களிலிருந்து சிலவற்றை தனது சொந்த நற்செய்தி நூலில் பயன்படுத்தியிருக்கலாம். லூக்கா 1:1-4 நமக்கு சொல்கிறது, “மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.”

இறுதியில், பொருட்சுருக்க பிரச்சினை என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை, சிலர் அதை உருவாக்க முயற்சிக்கிறார்கள். பொருட்சுருக்க நற்செய்திகள் ஏன் மிகவும் ஒத்திருக்கின்றன என்பதற்கான விளக்கம் என்னவென்றால், அவை அனைத்தும் ஒரே பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவை, அவை அனைத்தும் ஒரே நிகழ்வுகளைக் கண்ட அல்லது சொல்லப்பட்ட மக்களால் எழுதப்பட்டவை. மத்தேயு நற்செய்தி நூல் இயேசுவைப் பின்பற்றின, அவரால் நியமிக்கப்பட்ட பன்னிரண்டு பேரில் ஒருவரான மத்தேயு என்னும் அப்போஸ்தலரால் எழுதப்பட்டது. மாற்கு நற்செய்தி நூல், பன்னிரண்டு பேரில் இன்னொருவர் அப்போஸ்தலனாகிய பேதுருவின் நெருங்கிய கூட்டாளியான யோவான் மாற்கு எழுதியது. லூக்காவின் நற்செய்தி நூல், அப்போஸ்தலனாகிய பவுலின் நெருங்கிய கூட்டாளியான லூக்காவால் எழுதப்பட்டது. அவர்களின் கணக்குகள் ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்ததாக இருக்கும் என்று நாம் ஏன் எதிர்பார்க்க மாட்டோம்? ஒவ்வொரு நற்செய்திகளும் இறுதியில் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவை (2 தீமோத்தேயு 3:16–17; 2 பேதுரு 1:20–21). எனவே, இந்த சுவிசேஷப் புத்தகங்களில் நாம் ஒத்திசைவு மற்றும் ஒற்றுமையை எதிர்பார்க்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

பொருட்சுருக்க பிரச்சினை என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries