settings icon
share icon
கேள்வி

சைண்டாலஜி கிறிஸ்தவமா அல்லது ஒரு வழிபாட்டு மரபா?

பதில்


சைண்டாலஜி சுருக்கமாகச் சொல்வதற்கு கடினமான ஒரு மதமாகும். சைண்டாலஜி 1953 ஆம் ஆண்டில் அறிவியல் புனைகதை எழுத்தாளர் எல். ரோன் ஹப்பார்ட் என்பவரால் நிறுவப்பட்டது மற்றும் சில ஹாலிவுட் பிரபலங்கள் அதைத் தழுவியதால் இது மிகவும் பிரபலமடைந்துள்ளது. சைண்டாலஜியை உருவாக்கியதன் விளைவாக ஹப்பார்ட் பல கோடிகளுக்கு அதிபதியானார். உண்மையில், சைண்டாலஜியின் மிகவும் பொதுவான விமர்சனங்களில் ஒன்று, இது ஒரு சிக்கலான பணம் சம்பாதிக்கும் திட்டத்தைத் தவிர வேறில்லை என்பதாகும். ஹப்பார்ட்டினுடைய அமைப்பின் நிதிக் கொள்கை, ஹப்பார்ட்டின் சொந்த வார்த்தைகளில், “பணம் சம்பாதிப்பது, அதிக பணம் சம்பாதிப்பது, பணம் சம்பாதிப்பதற்கு தேவையான பிற தயாரிப்புகளை உருவாக்குங்கள்” (Joel Sappell and Robert W. Welkos. “The Scientology Story, Part 2: The Selling of a Church.” latimes. Monday, 6/25/1990, page A1:1. Los Angeles Times. WEB. 11/23/2015).

மனிதகுலம் ஒரு அழியாத உயிரினம் (தீட்டன் என்று அழைக்கப்படுகிறது) என்றும் முதலில் இந்த கிரகத்திலிருந்து அல்ல என்றும், மனிதன் பொருள், ஆற்றல், இடம் மற்றும் நேரம் (matter, energy, space, and time - MEST) ஆகியவற்றால் சிக்கியிருப்பதாகவும் சைண்டாலஜி கற்பிக்கிறது. ஒரு சைண்டாலஜியை நம்புபவர்களுக்கு இரட்சிப்பு என்பது "தணிக்கை" என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையின் மூலம் வருகிறது, இதன் மூலம் "மணிச்சுவடுகள்" (அடிப்படையில், கடந்த கால வலி மற்றும் ஆற்றல் தடைகளை உருவாக்கும் மயக்கத்தின் நினைவுகள்) அகற்றப்படுகின்றன. தணிக்கை என்பது ஒரு நீண்ட செயல்முறை மற்றும் ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும். அனைத்து மணிச்சுவடுகளும் இறுதியாக அகற்றப்படும்போது, தீட்டன் அதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் MEST-ஐக் கட்டுப்படுத்தலாம். இரட்சிப்பு வரை, ஒவ்வொரு தீட்டனும் தொடர்ந்து மறுபிறவி எடுக்கிறது.

சைண்டாலஜி என்பது பின்பற்றுவதற்கான மிகவும் விலையுயர்ந்த மதமாகும். சைண்டாலஜியின் ஒவ்வொரு அம்சமும் அதனுடன் தொடர்புடைய ஒருவித கட்டணத்தைக் கொண்டுள்ளது. இதனால்தான் சைண்டாலஜியின் “பெஞ்சில்” செல்வந்தர்களால் மட்டுமே நிரப்பப்படுகிறது. இது மிகவும் கண்டிப்பான மதம் மற்றும் அதன் போதனைகள் மற்றும் உறுப்பினர்களை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களுக்கு எதிராக மிகவும் தண்டனைக்குரியது. அதன் "வேதவசனங்கள்" எல். ரோன் ஹப்பார்ட்டின் எழுத்துக்கள் மற்றும் போதனைகளுக்குள் மட்டுமே உட்பட்டதாகும்.

சைண்டாலஜி கொள்கைகாரர்கள் சைண்டாலஜி கிறிஸ்தவத்துடன் ஒத்துப்போகும் என்று கூறுவார்கள் என்றாலும், அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு நம்பிக்கையையும் வேதாகமம் எதிர்க்கிறது. தேவன் பிரபஞ்சத்தின் இறையாண்மையுள்ளவர் மற்றும் ஒரே சிருஷ்டிகர் என்று வேதாகமம் கற்பிக்கிறது (ஆதியாகமம் 1:1); மனிதகுலம் தேவனால் படைக்கப்பட்டது (ஆதியாகமம் 1:27); மனிதனுக்குக் கிடைக்கும் ஒரே இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலையை விசுவாசிப்பதன் மூலம் கிருபையால் வருவதாகும் (பிலிப்பியர் 2:8); இரட்சிப்பு என்பது மனிதனால் சம்பாதிக்க இயலாத மற்றும் எதுவும் செய்ய முடியாத ஒரு இலவச பரிசாகும் (எபேசியர் 2:8-9); இயேசு கிறிஸ்து உயிருடன் இருக்கிறார், இப்போதும் பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார் (அப்போஸ்தலர் 2:33; எபேசியர் 1:20; எபிரெயர் 1:3), அவர் தம் ஜனங்களை கூட்டிச்சேர்க்கும் நேரத்திற்காக காத்திருக்கிறார், பரலோகத்தில் நித்தியம் முழுவதும் அவருடன் இருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் நித்தியகாலமாக தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட ஒரு மெய்யான நரகத்தில் தள்ளப்படுவார்கள் (வெளிப்படுத்துதல் 20:15).

வேதாகமம் கூறும் தேவன், பரலோகம் மற்றும் நரகம் இருப்பதை சைண்டாலஜி திட்டவட்டமாக மறுக்கிறது. ஒரு சைண்டாலஜி கொள்கைகளை நம்புபவரின்படி, இயேசு கிறிஸ்து ஒரு நல்ல போதகராக இருந்தார், அவர் துரதிர்ஷ்டவசமாக தவறாக கொல்லப்பட்டார் என்பதாகும். ஒவ்வொரு முக்கியமான கோட்பாட்டிலும் சைண்டாலஜியின் பார்வை வேதாகமக் கிறிஸ்தவத்திலிருந்து வேறுபடுகிறது. மிக முக்கியமான வேறுபாடுகளில் சில கீழே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன.

தேவன்: பல தேவர்கள் இருப்பதாகவும், சில தேவர்கள் மற்ற தேவர்களை விட உயர்ந்தவை என்றும் சைண்டாலஜி நம்புகிறது. மறுபுறம், வேதாகம கிறிஸ்தவம், வேதாகமத்திலும் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவும் நமக்கு வெளிப்படுத்திய ஒரே உண்மையான தேவனை அங்கீகரிக்கிறது. அவரை மெய்யாகவே நம்புகிறவர்கள் சைண்டாலஜி தவறான கருத்தை கற்பித்ததை நம்பமாட்டார்கள்.

இயேசு கிறிஸ்து: மற்ற வழிபாட்டு மரபுகளைப் போலவே, சைண்டாலஜியும் கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுக்கிறது. கிறிஸ்து யார், அவர் என்ன செய்தார் என்பது பற்றிய வேதாகமக் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, பல ஆண்டுகளாக புகழ்பெற்ற அந்தஸ்தைப் பெற்ற ஒருவித குறைவான தேவனின் பண்புகளை அவர்கள் அவருக்குக் கொடுக்கிறார்கள். இயேசு மாம்சத்தில் வந்த தேவன் என்று வேதாகமம் தெளிவாகக் கற்பிக்கிறது, அவருடைய அவதாரத்தின் மூலம் அவர் நம்முடைய பாவங்களுக்கான பலியாக செயல்பட முடியும். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம்தான் நாம் தேவனோடு நித்திய ஜீவனைப் பெறுவோம் (யோவான் 3:16).

பாவம்: சைண்டாலஜி மனிதனின் உள்ளார்ந்த நன்மையை நம்புகிறது, மேலும் ஒரு மனிதன் மனந்திரும்ப வேண்டும் அல்லது அவன் துன்மார்க்கன் என்று சொல்வது வெறுக்கத்தக்கது மற்றும் முற்றிலும் அவமதிப்புக்கு உட்பட்டது என்று கற்பிக்கிறது. மறுபுறம், மனிதன் ஒரு பாவி என்று வேதாகமம் கற்பிக்கிறது, அவருக்கான ஒரே நம்பிக்கை அவர் கிறிஸ்துவை தனது கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்வதாகும் (ரோமர் 6:23).

இரட்சிப்பு: சைண்டாலஜி மறுபிறவியை நம்புகிறது மற்றும் ஒருவரின் வாழ்நாளில் தனிப்பட்ட இரட்சிப்பு என்பது மறுபிறவியுடன் தொடர்புடைய பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுவது என்று கூறுகிறது. எல்லா மதங்களின் மத நடைமுறையும் ஞானம், புரிதல் மற்றும் இரட்சிப்பின் உலகளாவிய வழி என்று அவர்கள் நம்புகிறார்கள். இதற்கு நேர்மாறாக, இரட்சிப்பின் ஒரே ஒரு வழி இருக்கிறது என்றும் அது இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே இருக்கிறது என்று வேதாகமம் கற்பிக்கிறது. இயேசுவே சொன்னார், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6).

சைண்டாலஜியின் போதனைகளை வேதாகமத்துடன் ஒப்பிடுகையில், இரண்டிற்கும் பொதுவான விஷயங்கள் மிகக் குறைவு என்பதைக் கண்டுகொள்ளலாம். சைண்டாலஜி தேவனிடமிருந்தும் நித்திய ஜீவனிலிருந்தும் விலகிச் செல்கிறது. சைண்டாலஜி, சில சமயங்களில் கிறிஸ்தவ ஆரோக்கியமான மொழியின் சத்தத்தில் அதன் நம்பிக்கைகளை மறைக்கும்போது, உண்மையில் ஒவ்வொரு முக்கிய நம்பிக்கையிலும் கிறிஸ்தவத்தை முற்றிலும் அது எதிர்க்கிறது. சைண்டாலஜி மிகத்தெளிவாக மற்றும் நிச்சயமான நிலையில், கிறிஸ்தவம் அல்ல.

English



முகப்பு பக்கம்

சைண்டாலஜி கிறிஸ்தவமா அல்லது ஒரு வழிபாட்டு மரபா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries