settings icon
share icon
கேள்வி

பரிசுத்தமாக்கப்படுதல் என்றால் என்ன? கிறிஸ்தவ பரிசுத்தமாக்கப்படுதலின் வரையறை என்ன?

பதில்


யோவான் 17-ல் பரிசுத்தமாக்கப்படுவது பற்றி இயேசு நிறைய சொல்லியிருக்கிறார். 16 வது வசனத்தில் கர்த்தர் கூறுகிறார், "நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல", இது அவருடைய வேண்டுகோளுக்கு முன்: "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்." பரிசுத்தமாக்குதல் என்பது தேவனுக்காக வேறுபடுத்தும் ஒரு நிலை; எல்லா விசுவாசிகளும் தேவனால் பிறந்தபோது இந்த நிலைக்குள் பிரவேசிக்கிறார்கள்: "நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்" (1 கொரிந்தியர் 1:30). இது தேவனுக்கு நித்தியமாக என்றென்றுமாய் ஒரு முறை வேறுபிரித்தல் ஆகும். இது நம்முடைய இரட்சிப்பின் ஒரு சிக்கலான பகுதியாகும், கிறிஸ்துவுடனான நமது தொடர்பு (எபிரெயர் 10:10).

பரிசுத்தமாக்கப்படுதல் என்பது தேவனுக்கு இந்த வேறுபடுத்தலின் நடைமுறை அனுபவத்தைக் குறிக்கிறது, இது ஒருவரின் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதன் விளைவு மற்றும் விசுவாசியால் முக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டும் (1 பேதுரு 1:15; எபிரெயர் 12:14). யோவான் 17 இல் கர்த்தர் ஜெபித்ததைப் போலவே, பரிசுத்தமாக்கப்படுதல் விசுவாசிகளை உலகத்திற்குள் அனுப்பும் நோக்கத்திற்காக அவர்களை வேறுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: “நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன் அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்” (வசனம் 18, 19). அவர் எதற்காக அனுப்பப்பட்டார் என்பதற்காக அவர் தன்னை வேறுபடுத்தி வைத்தார் என்பதே அடிப்படை மற்றும் நாம் அனுப்பப்படும் நிபந்தனை ஆகிய இரண்டிற்கும் அடிப்படையாகும் (யோவான் 10:36). அவருடைய பரிசுத்தமாக்குதல் நம்முடைய மாதிரி மற்றும் வல்லமை. அனுப்புவதும் பரிசுத்தப்படுத்துவதும் பிரிக்க முடியாதவை. இந்தக் கருத்தில், விசுவாசிகள் பரிசுத்தாவான்கள், ஹாகியோய் என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படுகிறார்கள்: "பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்." முன்னதாக அவர்களின் நடத்தை தேவனிடமிருந்து வேறுபிரிந்து உலகில் அவர்கள் நிலைத்திருப்பதற்கு சாட்சியாக இருந்தது, இப்போது அவர்களுடைய நடத்தை உலகத்திலிருந்து வேறுபிரிந்து தேவனுக்கு முன்பாக அவர்கள் நிலைநிற்கிறது என்பதற்கு சாட்சியாக இருக்க வேண்டும்.

வேதத்தில் "பரிசுத்தமாக்கப்படுதல்" என்ற வார்த்தை இன்னும் ஒரு உணர்வு உள்ளது. பவுல் 1 தெசலோனிக்கேயர் 5:23 இல் ஜெபிக்கிறார், “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக." பவுல் கொலோசெயரில் "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்” (கொலோசெயர் 1:5). அவர் பின்னர் கிறிஸ்துவைப் பற்றி "மகிமையின் நம்பிக்கை" என்று பேசுகிறார் (கொலோசெயர் 1:27) பின்னர் "நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்" என்று அவர் கூறும்போது அந்த நம்பிக்கையின் உண்மையைக் குறிப்பிடுகிறார். (கொலோசெயர் 3:4). இந்த மகிமைப்படுத்தப்பட்ட நிலை பாவத்திலிருந்து நமது முடிவான பிரிவாகும், ஒவ்வொரு அம்சத்திலும் முழுமையான பரிசுத்தமாக்குதல். “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 3:2).

சுருக்கமாக, பரிசுத்தமாக்கப்படுதல் என்பது பரிசுத்தத்திற்கு ஒத்ததாக இருக்கிறது, இரண்டிற்கும் கிரேக்க வார்த்தையில் "வேறுபடுத்துதல்" என்று அர்த்தமாகும், முதலில் நம் இரட்சிப்பில் கிறிஸ்துவுக்கு ஒரு முறை எல்லா இடங்களிலும் வேறுபிரித்தல்; இரண்டாவதாக, கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கும்போது ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ஒரு நடைமுறை முற்போக்கான பரிசுத்தம், இறுதியாக, நாம் பரலோகத்தை அடையும் போது பாவத்திலிருந்து என்றென்றும் ஒரு வேறுபடுதல்.

English



முகப்பு பக்கம்

பரிசுத்தமாக்கப்படுதல் என்றால் என்ன? கிறிஸ்தவ பரிசுத்தமாக்கப்படுதலின் வரையறை என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries