settings icon
share icon
கேள்வி

ஒரு ஜோடி திருமணமாவதற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?

பதில்


திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது நம் சமூகத்தில் மிகவும் சாதாரணமாகிவிட்டது, எதிர்பார்க்கும் அளவிற்கு கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர் அதை பாவம் என்று கூட கருதுவதில்லை. திருமணம் வரை தூரமாய் இருப்பதற்குத் தேவையான அளவு சுயக்கட்டுப்பாடு ஜனங்களிடம் இல்லை என்று நமது கலாச்சாரம் கருதுகிறது, எனவே இந்த யோசனை நம்பத்தகாததாகிவிட்டது. இருப்பினும், தேவனுடைய வார்த்தை மாறாது, திருமணத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளும் உடலுறவு ஒழுக்கக்கேடானது என்று வேதாகமம் சொல்கிறது (மத்தேயு 15:19; 1 கொரிந்தியர் 6:9, 6:13, 7:2; 2 கொரிந்தியர் 12:21; கலாத்தியர் 5:19 ; எபேசியர் 5:3).

கிறிஸ்து மீது விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வைக்கும் மீண்டும் பிறந்த கிறிஸ்தவராக மாறிய எந்தவொரு நபரும் இனி தனக்கு சொந்தமானவர் அல்ல. 1 கொரிந்தியர் 6:18-20 கூறுகிறது, “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்."

திருமணம், பாலுறவு மற்றும் குடும்பத்திற்கான தேவனுடைய திட்டத்தைப் புறக்கணிப்பது எப்போதுமே இந்த வகையான ஆவிக்குரிய அல்லது உடல்ரீதியான விளைவுகளை ஏற்படுத்துகிறது: பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துதல் (எபேசியர் 4:30), குற்ற உணர்வு, அவமானம், வருத்தம், சுய மரியாதை இழப்பு, குடும்பங்களில் பிளவு மற்றும் விசுவாசிகளுக்கு இடையே, மோசமான முன்மாதிரி, எதிர்கால வாழ்க்கைத் துணைகளுக்கு வலியுண்டாக்குதல், தேவையற்ற கர்ப்பம், கருக்கலைப்பு மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள். அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் நெருக்கமான வெளிப்பாடாக பாலுறவு இருக்க வேண்டும் என்றும், கணவன் மனைவிக்கு இடையே மட்டுமே அது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். வெறும் உடல் இன்பத்திற்காக உடலுறவு கொள்வது நமது ஆவிக்குரிய வாழ்க்கையை கெடுத்து, தேவனுடனான உறவில் இருந்து நம்மை விலக்கி விடுகிறது.

திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்ளும் தவறைச் செய்த எவரும், அந்தத் தவறு திட்டமிடப்படாத கர்ப்பத்தை விளைவித்தாலும் மன்னிக்கப்படலாம். 1 யோவான் 1:9 கூறுகிறது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” நம்முடைய செயல்களின் விளைவுகளை அவர் அழித்துவிடுவார் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்புவதன் மூலம் நாம் ஆவிக்குரிய ரீதியில் மீட்டெடுக்கப்பட முடியும் என்பதாகும். நமது பாவங்களிலிருந்து விலகி, கிறிஸ்துவை நேசிப்பதற்கும் சேவிப்பதற்கும் அர்ப்பணிப்பை மேற்கொள்வதை இது குறிக்கிறது.

சில சமயங்களில் குழந்தை பிறக்கும் முன்பே திருமணம் செய்து கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். ஏற்கனவே திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்த ஒரு உறுதியான தம்பதியினர் விபச்சாரத்தில் ஈடுபட்டால், அது கர்ப்பத்தை விளைவித்தால், அது குடும்பத்திற்கும் குழந்தைக்கும் அது பிறப்பதற்கு முன்பே திருமணம் செய்வதை எளிதாக்கும். ஆனால் சமர்ப்பணம் இல்லாத ஒரு ஜோடி அதே பாவத்தைச் செய்தால், திருமணம் செய்துகொள்வது தேவனுடைய பார்வையில் அவர்களைச் சரியாநவர்களாக மாற்றாது. அத்தகைய சூழ்நிலையில், திருமணம் செய்வது திருமண தோல்விக்கு மட்டுமே அவர்களுக்கு வழிவகுக்கும். இந்த சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்று வேதாகமம் ஜனங்களுக்கு அறிவுறுத்துவதில்லை, இருப்பினும் பெற்றோர் இருவரும் குழந்தையை உணர்ச்சி ரீதியாகவும், ஆவிக்குரிய நிலையிலும் மற்றும் நிதி ரீதியாகவும் ஆதரிக்க கடமைப்பட்டுள்ளனர்.

நம்மில் எவரும் கிரியைகளினால் தேவனால் நீதிமானாக்கப்படுவதில்லை. விசுவாசத்தினால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுகிறோம், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம். வேதாகமம் கூறுகிறது, "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23). நம்முடைய தவறுகளை நாமே சரிசெய்துகொள்ள முயலுவதை தேவன் விரும்பவில்லை; நம் இதயங்களை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம்முடைய சொந்த விருப்பத்தை முன்வைத்து, தேவனுடைய இறையாண்மைக்கு அடிபணிவதன் மூலம், பூமியில் நிறைவான வாழ்க்கையையும் நித்தியத்திற்கும் பரலோகத்தில் வாழ்வதற்கான ஒரு இடத்தையும் பெறுவோம்.

English



முகப்பு பக்கம்

ஒரு ஜோடி திருமணமாவதற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries