settings icon
share icon
கேள்வி

ஆவியில் ஜெபிப்பது என்றால் என்ன?

பதில்


ஆவியில் ஜெபிப்பது என்பதைக் குறித்து வேதாகமத்தில் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளது. 1 கொரிந்தியர் 14:15, “நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.” எபேசியர் 6:18 கூறுகிறது, “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.” “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி” என்று யூதா 20 கூறுகிறது. ஆகவே, ஆவியில் ஜெபித்தல் என்பது சரியாக என்ன அர்த்தம் கொண்டுள்ளது?

“இல் ஜெபம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கலாம். இது “இதன் மூலம்”, “உதவியுடன்”, “கோளத்தில்”, “தொடர்பில்” என்று பொருள்படும். ஆவியில் ஜெபித்தல் என்பது நாம் சொல்லும் சொற்களைக் குறிக்காது. மாறாக, நாம் எவ்வாறு ஜெபிக்கிறோம் என்பதை இது குறிக்கிறது. ஆவியில் ஜெபிப்பது ஆவியின் வழிநடத்துதலின் படி ஜெபம் செய்வது ஆகும். ஆவியானவர் ஜெபிக்க நம்மை வழிநடத்தும் விஷயங்களுக்காக ஜெபம் செய்கிறதைக் இது குறிக்கிறது. ரோமர் 8:26 நமக்கு சொல்கிறது, “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.”

சிலர், 1 கொரிந்தியர் 14:15-ஐ அடிப்படையாகக் கொண்டு, ஆவியில் ஜெபிப்பதை அந்நியபாஷைகளில் பேசுவதோடு சமன் செய்கிறார்கள். அந்நியபாஷைகளில் பேசும் வரத்தைப் பற்றி விவாதிக்கும் பவுல், “நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம் பண்ணினால் என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்” என்று குறிப்பிடுகிறார். 1 கொரிந்தியர் 14:14ல் ஒரு நபர் அந்நியபாஷைகளில் ஜெபிக்கும்போது, அவர் என்ன சொல்கிறார் என்று அவருக்குத் தெரியாது, ஏனெனில் அது அவருக்குத் தெரியாத மொழியில் பேசப்படுகிறது. மேலும், ஒரு மொழிபெயர்ப்பாளர் இல்லாவிட்டால், வேறு எவராலும் சொல்லப்படுவதைப் புரிந்து கொள்ள முடியாது (1 கொரிந்தியர் 14:27-28). எபேசியர் 6:18 ல் பவுல், “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று நம்மை அறிவுறுத்துகிறார். எல்லா விதமான ஜெபங்களுடனும் வேண்டுகோள்களுடனும் நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டும், பரிசுத்தவான்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஜெபிக்கும் நபர், சொல்லப்படுவதை புரிந்துகொள்கிறாரா? ஆகையால், ஆவியில் ஜெபிப்பது ஆவியின் வல்லமையால் ஜெபிப்பது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆவியின் வழிநடத்துதலால், அவருடைய சித்தத்தின்படி, அந்நியபாஷைகளில் ஜெபிப்பது போல அல்ல.

English



முகப்பு பக்கம்

ஆவியில் ஜெபிப்பது என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries