settings icon
share icon
கேள்வி

ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன?

பதில்


ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் இடையிலான தொடர்பு வேதத்தில் குறிப்பாக விவரிக்கப்படவில்லை என்றாலும், இரண்டையும் இணைக்கும் ஒரு பொதுவான நூல் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஜெபம் மற்றும் உபவாசத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் இயங்குவது தெளிவாகத் தெரிகிறது. பழைய ஏற்பாட்டில், ஜெபத்துடன் உபவாசம் இருப்பது தேவை மற்றும் சார்ந்திருத்தல், மற்றும் உண்மையான அல்லது எதிர்பார்க்கப்பட்ட பேரழிவின் போது மோசமான உதவியற்ற தன்மை ஆகியவற்றுடன் செய்ய வேண்டியிருந்ததாய் காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் துக்கம், மனந்திரும்புதல் மற்றும் ஆழ்ந்த ஆவிக்குரியத் தேவை ஆகியவற்றில் ஜெபமும் உபவாசமும் இணைக்கப்படுகின்றன.

எருசலேம் பாழடைந்துவிட்டது என்ற செய்தியைப் பற்றி ஆழ்ந்த துயரத்தின் காரணமாக நெகேமியா ஜெபிப்பதையும் உபவாசம் இருப்பதையும் நெகேமியாவின் முதல் அதிகாரம் விவரிக்கிறது. அவரது பல நாட்கள் ஜெபம் கண்ணீர், உபவாசம், அவருடைய ஜனங்கள் சார்பாக ஏறெடுக்கப்படும் பாவ அறிக்கை மற்றும் கிருபைக்காக தேவனிடம் மன்றாடியது போன்றவைகளை காணலாம். சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் அத்தகைய ஜெபத்தின் நடுவில் அவர் "ஓய்வு எடுக்க" முடியும் என்பது அவரது எண்ணங்களின் வெளிப்பாடு மிகவும் தீவிரமானதாக இருந்தது. எருசலேமுக்கு ஏற்பட்ட பேரழிவு இதேபோன்ற ஒரு தோரணையை ஏற்கத் தானியேலைத் தூண்டியது: “நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி அவரிடம் மன்றாடினேன்” (தானியேல் 9:3). நெகேமியாவைப் போலவே, தானியேலும் உபவாசம் இருந்து தேவன் ஜனங்கள் மீது இரக்கம் காட்டும்படி ஜெபித்தார், “நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்” (வசனம் 5).

பழைய ஏற்பாட்டின் பல நிகழ்வுகளில், உபவாசமானது மத்தியஸ்த ஜெபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தாவீது தனது நோய்வாய்ப்பட்ட குழந்தைக்காக ஜெபித்து உபவாசம் இருந்தார் (2 சாமுவேல் 12:16), கர்த்தருக்கு முன்பாக ஊக்கமான பரிந்துரையுடன் அழுதார் (வசனங்கள் 21-22). எஸ்தர் மொர்தெகாயையும் யூதர்களையும் தன் கணவன் ராஜாவின் முன்பாக செல்ல திட்டமிட்டதால் அவளுக்காக உபவாசம் இருக்கும்படி கேட்டுக்கொண்டார் (எஸ்தர் 4:16). தெளிவாக, உபவாசம் மற்றும் விண்ணப்பம் ஆகியவை நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

புதிய ஏற்பாட்டில் ஜெபம் மற்றும் உபவாசத்தின் நிகழ்வுகள் உள்ளன, ஆனால் அவை மனந்திரும்புதலுடனோ அல்லது பாவ அறிக்கையுடனோ இணைக்கப்படவில்லை. தீர்க்கதரிசி அன்னாள் “தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்” (லூக்கா 2:37). 84 வயதில், அவளுடைய ஜெபமும் உபவாசமும் இஸ்ரவேலின் வாக்குறுதியளிக்கப்பட்ட இரட்சகராகக் காத்திருந்தபோது, அவருடைய ஆலயத்தில் கர்த்தருக்கு அவர் செய்த சேவையின் ஒரு பகுதியாகும். புதிய ஏற்பாட்டில், சவுலையும் பர்னபாவையும் கர்த்தருடைய வேலைக்கு நியமிப்பது பற்றி பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் பேசியபோது, அந்தியோக்கியாவில் உள்ள திருச்சபை அவர்களின் வழிபாட்டுடன் உபவாசமும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், அவர்கள் ஜெபித்து உபவாசமாய் இருந்து இருவரின் மீதும் கைகளை வைத்து அனுப்பி வைத்தார்கள். ஆகவே, ஜெபம் மற்றும் உபவாசத்தின் இந்த எடுத்துக்காட்டுகளை தேவனை வணங்குவதற்கும் அவருடைய தயவைத் தேடுவதற்குமாகும் என்பதை நாம் காண்கிறோம். எவ்வாறாயினும், இப்படி உபவாசம் இருத்தல் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிப்பார் என்பதற்கான எந்தக் குறிப்பும் எங்கும் இல்லை. மாறாக, ஜெபத்துடன் உபவாசம் இருப்பது ஜனங்கள் ஜெபிப்பதன் நேர்மையையும் அவர்கள் தங்களைக் கண்டுபிடிக்கும் சூழ்நிலைகளின் முக்கியமான தன்மையையும் குறிக்கிறது.

ஒன்று தெளிவாக உள்ளது: உபவாசத்தின் இறையியல் என்பது முன்னுரிமைகளின் ஒரு இறையியல் ஆகும், இதில் விசுவாசிகள் தேவனுக்கும் ஆவிக்குரிய வாழ்க்கையின் கவலைகளுக்கும் ஒரு பிரிக்கப்படாத மற்றும் தீவிரமான பக்தியில் தங்களை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நம்முடைய பிதாவுடன் தடையின்றி ஒற்றுமையின் நேரத்தை அனுபவிப்பதற்காக, உணவு மற்றும் பானம் போன்ற சாதாரண மற்றும் நல்ல விஷயங்களிலிருந்து சிறிது நேரம் விலகியதன் மூலம் இந்த பக்தி வெளிப்படுத்தப்படும். நம்முடைய “நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்” (எபிரெயர் 10:19), உபவாசம் இருந்தாலும், உபவாசம் இல்லாவிட்டாலும், நம்முடைய இந்த “சிறந்த காரியத்தின்” மிக மகிழ்ச்சியான பகுதிகளில் ஒன்றாகும். ஜெபமும் உபவாசமும் ஒரு சுமையாகவோ அல்லது கடமையாகவோ இருக்கக்கூடாது, மாறாக தேவனின் நற்குணத்தையும் அவருடைய பிள்ளைகளுக்கு காண்பிக்கும் கருணையையும் கொண்டாடும் காரியமாக இருக்கவேண்டும்.

English



முகப்பு பக்கம்

ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries