settings icon
share icon
கேள்வி

தேவனுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன?

பதில்


தேவனோடு தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பது, அவருக்கான நமது தேவையை நாம் உணரும் தருணத்தில் தொடங்குகிறது, நாம் பாவிகள் என்பதை ஒப்புக்கொள்கிறோம், விசுவாசத்தில் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்கிறோம். நம்முடைய பரலோகத் தகப்பனாகிய தேவன் எப்பொழுதும் நமக்கு நெருக்கமாக இருக்கவும், நம்முடன் உறவு கொள்ளவும் விரும்பினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்வதற்கு முன்பு (ஆதியாகமம் 3 ஆம் அதிகாரம்), அவரும் ஏவாளும் ஒரு நெருக்கமான, தனிப்பட்ட மட்டத்தில் தேவனை அறிந்தார்கள். அவர்கள் அவருடன் ஏதேன் தோட்டத்தில் நடந்து சென்று அவருடன் நேரடியாகப் பேசினார்கள். மனிதனின் பாவத்தின் காரணமாக, நாம் தேவனிடமிருந்து பிரிந்து துண்டிக்கப்பட்டோம்.

பலருக்குத் தெரியாத, உணராத, அக்கறை இல்லாத விஷயம் என்னவென்றால், இயேசு நமக்கு மிக அற்புதமான பரிசைக் கொடுத்தார் என்பதாகும் – ஆம் நாம் தேவனை நம்பினால் நித்தியத்தை தேவனோடு செலவிட வாய்ப்பு உள்ளது. "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23). நம்முடைய பாவத்தை ஏற்றுக்கொள்ளவும், கொல்லப்படவும், பின்னர் மீண்டும் உயிர்த்தெழும்பவும், பாவத்திற்கும் மரணத்திற்கும் எதிரான வெற்றியை நிரூபிக்கவும் தேவன் இயேசு கிறிஸ்துவின் நபராக மனிதரானார். "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" (ரோமர் 8:1). இந்த பரிசை நாம் ஏற்றுக்கொண்டால், நாம் தேவனை ஏற்றுக்கொண்டோம் என்றர்த்தமாகும், அவருடன் உறவும் கொள்ளலாம்.

தேவனுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவனை உட்படுத்துகிறார்கள். அவர்கள் அவரிடம் ஜெபம் செய்கிறார்கள், அவருடைய வார்த்தையைப் படிக்கிறார்கள், மேலும் அவருடைய வசனங்களைத் தியானிக்கிறார்கள். தேவனோடு தனிப்பட்ட உறவைக் கொண்டவர்கள் ஞானத்திற்காக ஜெபிக்கிறார்கள் (யாக்கோபு 1:5), இது நம்மிடம் இருக்கும் மிகவும் மதிப்புமிக்க சொத்து. அவர்கள் தங்கள் வேண்டுகோள்களை அவரிடம் எடுத்துச் செல்கிறார்கள், இயேசுவின் நாமத்தில் கேட்கிறார்கள் (யோவான் 15:16). நமக்காக தம் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நம்மை நேசிப்பவர் இயேசு (ரோமர் 5:8), நமக்கும் தேவனுக்கும் இடையிலான இடைவெளியைக் கட்டுப்படுத்தியவர் அவர்தான்.

பரிசுத்த ஆவியானவர் நம் ஆலோசகராக நமக்கு வழங்கப்பட்டிருக்கிறார். “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்” (யோவான் 14:15-17). இயேசு இறப்பதற்கு முன்பே இதைச் சொன்னார், அவர் இறந்த பிறகு பரிசுத்த ஆவியானவரைப் பெற ஆர்வமுள்ள அனைவருக்கும் கிடைத்தது. அவர் தான் விசுவாசிகளின் இதயங்களில் வாழ்கிறார், ஒருபோதும் அவர்களைவிட்டு விலகுவதில்லை. அவர் நமக்கு ஆலோசனை கூறுகிறார், சத்தியங்களை நமக்குக் கற்பிக்கிறார், நம் இதயங்களை மாற்றுகிறார். இந்த தெய்வீக பரிசுத்த ஆவியானவர் இல்லாவிட்டால், தீமைக்கும் சோதனையுக்கும் எதிராகப் போராடும் திறன் நமக்கு இருக்காது. ஆனால், நாம் அவரைக் கொண்டிருப்பதால், ஆவியானவர் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதன் மூலம் வரும் கனிகளை நாம் உற்பத்தி செய்யத் தொடங்குகிறோம்: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம் (கலாத்தியர் 5:22-23 ).

தேவனுடனான இந்த தனிப்பட்ட உறவு நாம் நினைப்பது போல் கண்டுபிடிப்பது கடினம் அல்ல, அப்படி அதைப் பெறுவதற்கான மர்மமான சூத்திரமும் இல்லை. நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறியவுடன், பரிசுத்த ஆவியானவரைப் பெறுகிறோம், அவர் நம் இருதயங்களில் வந்து வசித்து செயல்படத் தொடங்குவார். நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும், வேதாகமத்தை படிக்க வேண்டும், வேதாகமத்தை நம்பும் திருச்சபையில் இணைத்துக்கொள்ள வேண்டும்; இவை அனைத்தும் நாம் ஆவிக்குரிய ரீதியில் வளர நமக்கு உதவும். ஒவ்வொரு நாளும் நாம் அதைக் கடந்து அதன் ஊடாய் செல்வதற்காக தேவனை நம்புவதும், அவர் நம்முடைய பராமரிப்பாளர் என்று நம்புவதும் அவருடன் உறவு கொள்வதற்கான வழியாகும். நாம் உடனடியாக மாற்றங்களைக் காணவில்லை என்றாலும், காலப்போக்கில் அவற்றைப் பார்க்கத் தொடங்குவோம், மேலும் அனைத்து சத்தியங்களும் தெளிவாகிவிடும்.

English



முகப்பு பக்கம்

தேவனுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries