settings icon
share icon
கேள்வி

நம் போதகர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமா?

பதில்


இந்தக் கேள்விக்கு மிக நேரடியாகப் பதில் கூறும் வசனம் எபிரேயர் 13:17, “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.”

தேவனுடைய ஆலோசனையை மக்கள் புறக்கணிப்பதை கண்டு போதகர்கள் மிகவும் வேதனைப்படுகிறார்கள். தேவனுடைய வார்த்தையை மக்கள் புறக்கணிக்கும்போது, அவர்கள் தங்களுக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள். வாலிபர்கள் தங்கள் மூப்பர்களின் அறிவுரையை புறக்கணித்து, தங்கள் சொந்த ஞானத்தையும் தங்கள் இருதயத்தின் ஆலோசனையையும் நம்புவதில் தவறு செய்கிறார்கள். ஒரு பக்தியுள்ள போதகர் தேவனுடைய வார்த்தையிலிருந்து கட்டளைகளைப் பகிர்ந்துகொள்கிறார், ஏனெனில் அவர் தேவனுக்கு சேவை செய்ய விரும்புகிறார் மற்றும் ஆடுகளுக்கு உணவளிக்க வேண்டும், அதனால் இயேசு வாக்குறுதியளிக்கும் பரிபூரணமான வாழ்க்கையை அவர்கள் அனுபவிப்பார்கள் (யோவான் 10:10).

பக்தியுள்ள போதகருக்கு எதிரானது "கள்ள மேய்ப்பன்" ஆகும், அவர் மந்தையின் நலனை இருதயத்தில் கொண்டிருக்கவில்லை, ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும் அல்லது மற்றவர்கள் மீது ஆளுமையை செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அல்லது தேவனுடைய வார்த்தையைப் போதிக்கத் தவறி தேவனுக்குப்பதிலாக மனிதர்களின் கட்டளைகளைக் கற்பிக்கிறார்கள். இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் "குருடருக்கு வழிகாட்டுகிற குருடராய்" இருந்தனர் (மத்தேயு 15:14). அப்போஸ்தலருடைய நடபடிகள், நிருபங்கள் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகியவற்றில் கள்ளப்போதகர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகள் உள்ளன. இந்த சுயத்தை-தேடும் தலைவர்கள் இருப்பதால், தேவனுக்குக் கீழ்ப்படிவதற்காக நாம் மனிதனுக்குக் கீழ0்ப்படியாத நேரங்கள் இருக்கலாம் (அப். 4:18-20). இருப்பினும், ஒரு சபைத் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் இலகுவாக செய்யப்படுவதில்லை மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகளால் நிரூபிக்கப்பட வேண்டும் (1 தீமோத்தேயு 5:19).

தேவபக்தியுள்ள போதகர்கள் தங்கத்தின் எடைக்கு நிகரான மதிப்புடையவர்கள். அவர்களுக்குப் பொதுவாக அதிக வேலை மற்றும் குறைந்த ஊதியம். எபிரேயர் 13:17 குறிப்பிடுவது போல் அவர்கள் பெரும் பொறுப்பை ஏற்கிறார்கள்—அவர்கள் ஒரு நாள் தேவனுக்கு முன்பாக தங்கள் ஊழியங்களின் கணக்கை கொடுக்க வேண்டும். 1 பேதுரு 5:1-4 அவர்கள் கட்டாயமாய் இருக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டப்படுகிறார்கள், ஆனால் அவர்களின் உதாரணம் மற்றும் ஆரோக்கியமான போதனையால் (1 தீமோத்தேயு 4:16) மனத்தாழ்மையுடன் வழிநடத்த வேண்டும். பவுலைப் போலவே, அவர்கள் தங்கள் பிள்ளைகளை உண்மையாக நேசித்து பாலூட்டும் தாய்மார்களைப் போல இருக்க வேண்டும். தேவபக்தியுள்ள போதகர்கள் தங்கள் மந்தைகளுக்காக தங்களையும் கொடுக்க, மற்றும் மென்மையுடன் ஆட்சி செய்ய தயாராக இருக்கிறார்கள் (1 தெசலோனிக்கேயர் 2:7-12; யோவான் 10:11). அவர்கள் தேவனுடைய வல்லமை மற்றும் ஞானத்தில் ஆட்சி செய்ய மற்றும் ஆரோக்கியமான மற்றும் துடிப்பான கிறிஸ்தவர்களை உருவாக்க சபை ஆவிக்குரிய உணவை வழங்குவதற்காக அவர்கள் வார்த்தை மற்றும் ஜெபம் (அப். 6:4) மீது உண்மையான பக்தியால் வகைப்படுத்தப்படுகிறார்கள். இது உங்கள் போதகரின் விளக்கம் அல்லது அதற்கு அருகில் இருந்தால் (பூமியில் எந்த மனிதரும் சரியானவர் அல்ல), அவர் தேவனுடைய எளிய போதனைகளை அறிவிப்பதால் அவர் "இரட்டிப்பான கனத்திற்கு" மற்றும் கீழ்ப்படிதலுக்கு தகுதியானவர் (1 தீமோத்தேயு 5:17).

எனவே கேள்விக்கான பதில், ஆம், நாம் நம் போதகர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர்களுக்காக நாம் எப்போதும் ஜெபிக்க வேண்டும், ஞானம், பணிவு, மந்தையின் மீது அன்பு, மற்றும் பாதுகாப்பில் இருப்பவர்களை அவர்கள் பாதுகாக்கும்போது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி தேவனிடம் வேண்டுகிறோம்.

English



முகப்பு பக்கம்

நம் போதகர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries