settings icon
share icon
கேள்வி

வேதாகமத்தில் உள்ள அற்புதங்கள் எழுத்தியல் பிரகாரம் எடுத்துக்கொள்ளப்படவேண்டுமா?

பதில்


ஆம், வேதாகமத்தில் உள்ள அற்புதங்கள் எழுத்தியல் பிரகாரம் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். குறியீடாக இருக்க வேண்டிய பகுதிகளைத் தவிர, வேதவாக்கியங்களெல்லாம் எழுத்தியல் பிரகாரம் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். குறியீடாகக் கொடுக்கப்பட்டுள்ளதன் உதாரணம் சங்கீதம் 17:8. நாம் உண்மையில் தேவனுடைய கண்ணில் மணிகள் அல்ல, தேவனுக்கு உண்மையில் இறக்கைகள் இல்லை. ஆனால் அற்புதங்கள் அடையாள நிகழ்வுகள் அல்ல; அவை உண்மையில் நடந்த உண்மையான நிகழ்வுகள். வேதாகமத்தில் உள்ள அற்புதங்கள் ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்திற்காக செயல்பட்டு, வேறு எந்த வகையிலும் சாதிக்க முடியாத ஒன்றை சாதித்தன.

எல்லாவற்றுக்கும் முந்தைய மற்றும் ஆழமான அதிசயம் சிருஷ்டிப்பு. தேவன் எல்லாவற்றையும் எக்ஸ் நிஹிலோ—ஒன்றுமில்லாமையில் இருந்து உருவாக்கினார்—அடுத்தடுத்த ஒவ்வொரு அதிசயமும் அவரது நம்பமுடியாத வல்லமையை வலுப்படுத்தியது. யாத்திராகமம் புத்தகம் தேவன் தனது சித்தத்தை கொண்டுவர பயன்படுத்திய அற்புத நிகழ்வுகளால் நிரம்பியுள்ளது. நைல் நதி இரத்தமாக மாறியது தொடங்கி (யாத்திராகமம் 7:17) மற்றும் எகிப்தின் தலைப்பிள்ளைகளின் மரணத்துடன் முடிவடையும் (யாத்திராகமம் 12:12) எகிப்து மீதான வாதைகள், உண்மையில் பார்வோனை இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கச் செய்தது. வாதைகள் நடக்கவில்லை என்றால், பார்வோன் ஏன் மக்களை செல்லும்படி விடுவித்தார்? தலைப்பிள்ளை மரணம் ஒருபோதும் நடக்கவில்லை என்றால், அன்றிரவு தேவன் எகிப்தின் வழியாக கடந்துபோகவில்லை, அல்லது இஸ்ரவேலர்கள் தங்கள் வீட்டு வாசல்களில் இரத்தத்தைப் பூசுவதற்கு எந்த காரணமும் இல்லை. அப்படியானால், சிலுவையில் இயேசுவின் இரத்தம் சிந்துவதை முன்னறிவிப்பது பிரயோஜனமற்றது என்றாகிவிடும், இது சிலுவையில் அறையப்படுவதை சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. எந்தவொரு அதிசயத்தின் உண்மையையும் நாம் சந்தேகிக்கத் தொடங்கியவுடன், அந்த அதிசயத்தின் விளைவாக வேதாகமம் சொல்லும் அனைத்தையும் நாம் புறந்தள்ள வேண்டும், இது இறுதியில் வேதத்தை முழுவதையும் சந்தேகத்தில் ஆழ்த்துகிறது.

நன்கு அறியப்பட்ட பழைய ஏற்பாட்டு அதிசயங்களில் செங்கடலை இரண்டாகப் பிளத்தல் ஆகும் (யாத்திராகமம் 14), அந்த சமயத்தில் பார்வோனும் அவனது படையும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த சம்பவம் எழுத்தியல் பூர்வமாக இல்லாமல் உருவக அடையாளமாக இருந்தால், மீதமுள்ள கதையை நாம் நம்பலாமா? இஸ்ரவேலர்கள் உண்மையில் எகிப்தை விட்டு வெளியேறினார்களா? பார்வோனின் இராணுவம் உண்மையில் அவர்களைப் பின்தொடர்ந்ததா, அப்படியானால், இஸ்ரவேலர்கள் எவ்வாறு எகிப்திலிருந்து தப்பித்தனர்? சங்கீதம் 78 இஸ்ரவேலர்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதில் அவர் செய்த அற்புதங்களை நினைவுபடுத்தும் பல வேதப்பகுதிகளில் ஒன்றாகும். இந்த அற்புதங்கள் தேவனாகிய யெகோவாவைக் குறித்து சுற்றியுள்ள நாடுகளின் விழிப்புணர்வை அதிகரித்தது மற்றும் அவர் ஒரு உண்மையான தேவன் என்பதை நிரூபித்தது (யோசுவா 2:10). அவர்களின் புறமத விசுவாசம் மரம் மற்றும் கல் சிலைகள் ஆகியவற்றால் அத்தகைய அதிசயங்களை நடப்பிக்க முடியவில்லை.

புதிய ஏற்பாட்டில், இயேசு பல அற்புதங்களை நிகழ்த்தினார், கானாவில் நடந்த திருமணத்தில் அவர் தண்ணீரை மதுரமுள்ள திராட்சரசமாக மாற்றினார் (யோவான் 2:1-10). லாசருவை அவன் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரோடு எழுப்பியது அவரது அதிசயங்களில் மிக முக்கியமான அதிசயம் (யோவான் 11). இயேசு செய்த அற்புதங்கள் அனைத்தும் அவர் தான் தேவனுடைய குமாரன் என்று சொன்னதை நிரூபிப்பதாகும். அவர் மத்தேயு 8 இல் புயலை அமைதிப்படுத்தியபோது, சீடர்கள் கூட ஆச்சரியமடைந்தனர்: "அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்!” இயேசுவின் அற்புதங்கள் உண்மையானவை அல்ல என்றால், இயேசுவின் குணப்படுத்துதல்கள் பற்றிய நற்செய்தி நூல்களின் பதிவுகள் வெறும் நல்ல கதைகளாகும், மேலும் அந்த மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு, அவருடைய இரக்கத்தைப் பெற்றதையும் சந்தேகத்திற்குள்ளாக்குகிறது (மத்தேயு 14:14; 10:34; மாற்கு 1:41). அவர் உண்மையில் சில அப்பங்கள் மற்றும் மீன்களால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கவில்லை என்றால், அந்த மக்கள் பசியுடன் இருந்தார்கள் மற்றும் இயேசுவின் வார்த்தைகள் "நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 6:26) என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் இயேசு குணமாக்கினார், ஆயிரக்கணக்கானோருக்கு உணவளித்தார், தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார், லாசருவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பினார். அற்புதங்கள் காரணமாக பலர் அவரை நம்பியதாக யோவான் 2:23 கூறுகிறது.

எல்லா அற்புதங்களுக்கும் ஒரு குறிக்கோள் இருந்தது—தேவன் வேறு யாரையும் போல இல்லை என்பதை நிரூபிக்க, சிருஷ்டிப்பின் மீது அவருக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது, மேலும் இந்த அற்புதங்களை எல்லாம் அவரால் செய்ய முடிந்தால், நம் வாழ்வில் எதையும் அவர் கையாள கடினனது ஒன்றும் இல்லை. நாம் அவரை நம்பி நம் வாழ்விலும் அற்புதங்களைச் செய்ய முடியும் என்பதை அவர் அறிய விரும்புகிறார். அற்புதங்கள் நடக்கவில்லை என்றால், வேதாகமம் சொல்லும் எதையும் நாம் எப்படி நம்புவது? கிறிஸ்துவின் மூலம் நித்திய ஜீவனைப் பற்றிய பைபிளின் நற்செய்தியை நாம் எப்படி விசுவாசிப்பது? வேதாகமத்தின் எந்தப் பகுதியையும் நாம் சந்தேகத்திற்குள்ளாக்கத் தொடங்கும் போது, தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் சந்தேகிக்கப்படுகின்றன, மேலும் சாத்தானின் பொய்கள் மற்றும் சீர்கேடுகளுக்கு கதவைத் திறக்கிறோம், அவன் நம் நம்பிக்கையை அழிக்க முற்படுகிறான் (1 பேதுரு 5:8). வேதாகமமானது அதிசயங்களின் கணக்குகள் உட்பட வாசித்து புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

English



முகப்பு பக்கம்

வேதாகமத்தில் உள்ள அற்புதங்கள் எழுத்தியல் பிரகாரம் எடுத்துக்கொள்ளப்படவேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries