settings icon
share icon
கேள்வி

கன்னித்தன்மையுடன் இருக்கும் ஒரு கிறிஸ்தவர், கன்னித்தன்மையை இழந்த ஒருவரை திருமணம் செய்யலாமா/செய்ய வேண்டுமா?

பதில்


கிறிஸ்தவ திருமணத்திற்கான சிறந்த சூழ்நிலை என்பது, நிச்சயமாக, இருவரும் கன்னித்தன்மை உள்ளவர்களாக இருக்கும்போது, பாலியல் உறவுகளுக்கு தேவனுடைய பார்வையில் திருமணம் மட்டுமே இடம் என்பதை புரிந்துகொள்வது ஆகும். ஆனால் நாம் ஒரு சிறந்த உலகில் வாழவில்லை. பல சமயங்களில், தெய்வபக்தியுள்ள குடும்பத்தில் வளர்க்கப்பட்டு, குழந்தைப் பருவத்தில் இருந்து இரட்சிக்கப்பட்ட ஒருவர், தனது 20 அல்லது 30 வயதுகளில் இரட்சிக்கப்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நாம் மனந்திரும்புதலிலும் கிறிஸ்துவில் விசுவாசத்திலும் அவரிடத்தில் வரும்போது, மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12), ஜனங்களுக்கு நீண்ட நினைவுகள் இருக்கும், மேலும் ஒருவரின் கடந்த காலத்தை மறப்பது எளிதல்ல. திருமண தம்பதிகளில் ஒருவரின் கடந்த கால தவறுகளை மன்னிக்கவும் மறக்கவும் இயலாமை நிச்சயமாக திருமணத்தை எதிர்மறையாக பாதிக்கும்.

கடந்த கால பாலியல் உறவு கொண்ட ஒருவருடன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, இரட்சிப்பும் பாவ மன்னிப்பும் நமக்கு கிருபையால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8-9). உண்மையிலேயே மன்னிக்கப்படுவது என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது, தேவனுடைய பார்வையின் மூலம் நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம், மேலும் அவர் நம்மை எவ்வளவு நேசிக்க வேண்டும், அது மற்றவர்களை மன்னிக்க உதவுகிறது. மன்னிப்பது என்பது மற்றவரின் கடந்த காலத்தை விட்டுவிட்டு அவனை அல்லது அவளை ஒரு புதிய சிருஷ்டியாக பார்ப்பதாகும் (2 கொரிந்தியர் 5:17). கிறிஸ்து அவனது / அவளது பாவத்திற்காக மரித்தார், மேலும் அந்த பாவத்தின் நினைவில் வாழ முடியுமா முடியாதா என்பதை இப்போது சாத்தியமான துணையானவர் தீர்மானிக்க வேண்டும். இங்குதான் கோட்பாடு தத்துவார்த்தத்திலிருந்து நடைமுறைக்கு நகர்கிறது.

மன்னிப்பு விஷயங்களில், அது எப்போதும் நமது சொந்த கடந்த காலத்தை தேவனுடைய பார்வையில் பார்க்க உதவுகிறது. பாலியல் பாவம் நிச்சயமாக தேவனுக்கு துக்ககரமானது, ஆனால் பொய், ஏமாற்றுதல், கெட்ட எண்ணங்கள், அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்/புகைபிடித்தல், பொறுமையின்மை, பெருமை மற்றும் மன்னியாமை. நம்மில் யார் பாவமில்லாதவர் மற்றும் "முதல் கல்லை எறிய" முடியும்? கிறிஸ்துவிடம் வருவதற்கு முன், நாம் ஒவ்வொருவரும் "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்கள்" மற்றும் தேவனுடைய கிருபையால் மட்டுமே உயிர்ப்பிக்கப்படுகிறோம் (எபேசியர் 2:1-5). கேள்வி என்னவென்றால், கிறிஸ்து நம்மை மன்னித்தது போல் மற்றவர்களை நாம் மன்னிக்க முடியுமா? அவ்வாறு செய்ய முடிவது ஒரு உண்மையான கிறிஸ்தவனின் அடையாளமாகும். நாம் மன்னிக்காவிட்டால், தேவனும் நம்மை மன்னிக்க மாட்டார் என்று இயேசு கூறினார் (மத்தேயு 6:14-15). மற்றவர்களை மன்னிப்பது தேவனுடைய மன்னிப்பைப் பெறுவதற்கான ஒரு வழி என்று அவர் அர்த்தப்படுத்தவில்லை, இது கிருபையால் மட்டுமே என்று நமக்குத் தெரியும், ஆனால் மன்னிக்கும் இருதயம் ஒரு உண்மையான விசுவாசியின் இருதயத்தில் பரிசுத்த ஆவியின் இருப்புக்கான அடையாளம். தொடர்ந்து மன்னிக்காதது கடினமான, மீண்டும் சிருஷ்டிக்கப்படாத இருதயத்தின் அடையாளமாகும்.

கன்னித்தன்மை அல்லாத ஒருவருடன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, அதிக சிந்தனை, ஜெபம் மற்றும் சரியான பரிசோதனை ஆகியவை அவசியம். யாக்கோபு 1:5 நாம் ஞானத்தைத் தேடினால், கேட்கிற அனைவருக்கும் தேவன் அதை இலவசமாகக் கொடுப்பார் என்று நமக்குச் சொல்கிறது. ஒரு தேவபக்தியுள்ள போதகருடன் பேசுவதும் வேதாகமம் கற்பிக்கும் சபையில் ஈடுபடுவதும் முடிவெடுக்கும் செயல்முறைக்கு உதவும். சில திருச்சபைகளில் விவாக நிச்சயத்துக்கு முன்பாக சிறந்த வகுப்புகள் உள்ளன. மேலும், இந்த விஷயங்களைப் பற்றி சாத்தியமான துணையுடன் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பேசுவது கவனிக்கப்பட வேண்டிய மற்றும் மன்னிக்கப்பட வேண்டிய விஷயங்களை வெளிப்படுத்தலாம்.

சிறந்த சூழ்நிலையில் திருமணம் ஒரு சவாலாக உள்ளது மற்றும் அதை வெற்றிகரமாக செய்ய நிறைய உழைக்க வேண்டும். இரு தம்பதிகளும் நிபந்தனையின்றி நேசிக்கப்பட வேண்டும் மற்றும் தகுதியானவர்கள் எனக் கருதப்படவேண்டும். எபேசியர் 5 திருமணத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரின் பங்குகளை விவரிக்கிறது, ஆனால் பத்தியில் இருவருக்குமான மேலான கொள்கையுடன் தொடங்குகிறது: "கிறிஸ்துவுக்கு தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்" (எபேசியர் 5:21). மனமுவந்து தியாகம் செய்வதும், திருமணத்தை மேம்படுத்த ஒரு வேலைக்காரனாகத் தேர்ந்தெடுக்கும் வலிமையும் தேவனுக்குப் பயப்படும் ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்த ஆணும் பெண்ணும் ஆவார்கள். வேதாகமத்தின் குணங்களின் அடிப்படையில் ஒரு மனைவியை ஞானமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம், ஆனால் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய சொந்த ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் நம் வாழ்வில் தேவனுடைய சித்தத்திற்கு நாம் சரணடைவது ஆகும். தேவன் விரும்பும் புருஷனாக இருக்க விரும்பும் ஒரு மனிதன் தன் மனைவியை தேவன் விரும்பும் பெண்ணாக இருக்க உதவ முடியும், மேலும், அவர்களின் கடந்த காலங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் திருமணத்தை தேவனுக்குப் பயப்படும் ஐக்கியத்தில் உருவாக்க முடியும், அது இருவரையும் மகிழ்விக்கிறது.

English



முகப்பு பக்கம்

கன்னித்தன்மையுடன் இருக்கும் ஒரு கிறிஸ்தவர், கன்னித்தன்மையை இழந்த ஒருவரை திருமணம் செய்யலாமா/செய்ய வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries