settings icon
share icon
கேள்வி

தாராளவாத கிறிஸ்தவ இறையியல் என்றால் என்ன?

பதில்


"தாராளவாத கிரிஸ்துவப்" போதனையில், மனிதனின் காரணம் வலியுறுத்தப்பட்டு இறுதி அதிகாரமாக கருதப்படுகிறது, இது கிறிஸ்தவம் அல்ல. தாராளவாத இறையியலாளர்கள் கிறிஸ்தவத்தை மதச்சார்பற்ற அறிவியல் மற்றும் "நவீன சிந்தனையுடன்" சமரசம் செய்ய முயல்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் அறிவியலை அனைத்தையும் அறிந்தவர்களாகவும், வேதாகமத்தை கட்டுக்கதைகள் நிறைந்ததாகவும் பொய்யாகவும் கருதுகின்றனர். ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்கள் கவிதையாகவோ அல்லது கற்பனையாகவோ குறைக்கப்படுகின்றன, அதில் ஒரு செய்தி உள்ளது, ஆனால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது (இயேசு அந்த ஆரம்ப அதிகாரங்களைப் பற்றி சொல்லர்த்தமாகப் பேசியிருந்தாலும்). மனிதகுலம் முற்றிலும் சீரழிந்ததாகக் காணப்படவில்லை, எனவே தாராளவாத இறையியலாளர்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான பார்வையைக் கொண்டுள்ளனர். சமூக நற்செய்தியும் வலியுறுத்தப்படுகிறது, அதே நேரத்தில் பாவத்தில் விழுந்துபோன மனிதனால் அதை நிறைவேற்ற இயலாமையை மறுக்கிறது. ஒரு நபர் அவர்களின் பாவத்திலிருந்தும் நரகத்தில் அனுபவிக்கும் அதன் தண்டனையிலிருந்தும் இரட்சிக்கப்படுகிறாரா என்பது இனி பிரச்சினை அல்ல; மனிதன் தன் சக மனிதனை எப்படி நடத்துகிறான் என்பதே முக்கிய விஷயம். நம் சக மனிதனின் "அன்பு" வரையறுக்கும் பிரச்சினையாகிறது. தாராளவாத இறையியலாளர்களின் இந்த பகுத்தறிவின் விளைவாக, பின்வரும் கோட்பாடுகள் தாராளவாத குவாசி-கிறிஸ்தவ இறையியலாளர்களால் கற்பிக்கப்படுகின்றன:

1) வேதாகமம் "தேவனால் சுவாசித்தது" அல்ல, மற்றும் பிழைகள் உள்ளன. இந்த நம்பிக்கையின் காரணமாக, மனிதன் (தாராளவாத இறையியலாளர்கள்) எந்த போதனைகள் சரியானவை, எது சரியானதில்லை என்பதை தீர்மானிக்க வேண்டும். வேதாகமம் தேவனால் "ஏவப்பட்டது" (அந்த வார்த்தையின் அசல் அர்த்தத்தில்) என்பது எளிமையானவர்களால் மட்டுமே நம்பப்படுகிறது. இது 2 தீமோத்தேயு 3:16-17க்கு நேரடியாக முரண்படுகிறது: "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது."

2) கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு ஒரு புராணக்கதை அது ஒரு பொய்யான போதனை. இது ஏசாயா 7:14 மற்றும் லூக்கா 2க்கு நேரடியாக முரண்படுகிறது.

3) இயேசு கல்லறையிலிருந்து மீண்டும் சரீரத்தில் உயிரோடு எழுந்திருக்கவில்லை. இது நான்கு சுவிசேஷங்களிலும் முழு புதிய ஏற்பாட்டிலும் உள்ள உயிர்த்தெழுதல் குறித்த குறிப்புகளுக்கு முரணானது.

4) இயேசு ஒரு நல்ல தார்மீக போதகராக இருந்தார், ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களும் அவரைப் பின்பற்றுகிறவர்களைப் பின்பற்றுபவர்களும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை வேதாகமத்தில் பதிவுசெய்துள்ளபடி சுதந்திரமாக விருப்பப்படி எழுதுவதற்கு தள்ளப்பட்டனர் (அதாவது "அமானுஷ்ய" அற்புதங்கள் எதுவும் இல்லை), சுவிசேஷங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டு வெறுமனே கூறப்படுகின்றன. ஆரம்பகால சீடர்களுக்கு அவர்களின் போதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக இப்படி எழுதப்பட்டது. இது 2 தீமோத்தேயு வேதப்பகுதிக்கும், தேவனால் வேதத்தை இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் தெய்வீகமாக பாதுகாக்கப்பட்டது என்கிற கோட்பாட்டிற்கும் முரண்படுகிறது.

5) நரகம் உண்மையானது அல்ல. மனிதன் பாவத்தில் தொலைந்து போகவில்லை, விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவுடன் உறவு கொள்ளாமல் எதிர்காலத்தில் நியாயத்தீர்ப்புக்கு ஆளாககுவதில்லை. மனிதன் தனக்குத்தானே உதவ முடியும்; அன்பான தேவன் ஜனங்களை நரகம் போன்ற இடத்திற்கு அனுப்ப மாட்டார் என்பதாலும், மனிதன் பாவத்தில் பிறக்காததாலும் கிறிஸ்துவின் சிலுவை மரணம் தேவையில்லை. இது இயேசு தாமே, தம்மைப் பாவநிவிர்த்தி செய்வதற்கு தனது மரணத்தின் மூலம் தேவனுக்குச் செல்லும் வழி என்று அறிவித்ததற்கு முற்றிலும் முரண்பட்டது (யோவான் 14:6).

6) வேதாகமத்தின் பெரும்பாலான மனித எழுத்தாளர்கள் அவர்கள் பாரம்பரியமாக நம்பப்படும் நபர்கள் அல்ல. உதாரணமாக, வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களை மோசே எழுதவில்லை. தானியேல் புத்தகம் இரண்டு ஆசிரியர்களைக் கொண்டிருந்தது, ஏனெனில் பிந்தைய அதிகாரங்களின் விரிவான "தீர்க்கதரிசனங்கள்" முன்னதாகவே அறியப்பட்டிருக்க வாய்ப்பில்லை; அவை சம்பவித்தப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். அதே சிந்தனை புதிய ஏற்பாட்டு புத்தகங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கருத்துக்கள் வேதாகமத்திற்கு மட்டுமல்ல, தாராளவாதிகள் மறுக்கும் அனைத்து ஜனங்களின் இருப்பை சரிபார்க்கும் வரலாற்று ஆவணங்களுக்கும் முரணானது.

7) மனிதன் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் அயலாகத்தாரை "சிநேகிப்பது". எந்த சூழ்நிலையிலும் அன்பான காரியம் செய்வது வேதாகமம் நல்லது என்று சொல்வதல்ல, ஆனால் தாராளவாத இறையியலாளர்கள் முடிவு செய்வது நல்லது. கிறிஸ்துவால் மீட்கப்பட்டு, ஒரு புதிய இயல்பு (2 கொரிந்தியர் 5:17) வழங்கப்படும் வரை, மனிதன் நன்மையும் அன்பும் கொண்ட எதையும் செய்ய இயலாது (எரேமியா 17:9) என்று கூறும் முழுமையான சீரழிவின் கோட்பாட்டை இது மறுக்கிறது.

கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுப்பவர்களுக்கு எதிராக வேதாகமத்தின் பல அறிவிப்புகள் உள்ளன (2 பேதுரு 2:1) (தாராளவாத கிறிஸ்தவம் செய்கிறது); அப்போஸ்தலரால் பிரசங்கிக்கப்பட்டதை விட வேறொரு நற்செய்தியை யார் பிரசங்கிப்பார்கள் (கலாத்தியர் 1:8) (கிறிஸ்துவின் பாவநிவிர்த்தி மரணத்தின் அவசியத்தை தாராளவாத இறையியலாளர்கள் மறுத்து அதன் இடத்தில் ஒரு சமூக நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்). வேதாகமம் நல்லதை தீமை என்றும் மற்றும் தீமையை நல்லது என்றும் அழைப்பவர்களைக் கண்டிக்கிறது (ஏசாயா 5:20) (ஓரினச்சேர்க்கையை மாற்று வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்வதன் மூலம் சில தாராளவாத திருச்சபைகள் செய்கின்றன, அதே நேரத்தில் வேதாகமம் அதன் நடைமுறையை மீண்டும் மீண்டும் கண்டிக்கிறது).

சமாதானம் இல்லாதபோது "சமாதானம், சமாதானம்" என்று கூக்குரலிடுபவர்களுக்கு எதிராக வேதம் பேசுகிறது (எரேமியா 6:14) (கிறிஸ்து சிலுவையில் பலி செலுத்தாமல் தேவனுடன் சமாதானத்தை அடைய முடியும் என்றும் மனிதன் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தாராளவாத இறையியலாளர்கள் கூறுகிறார்கள். தேவனுக்கு முன்பாக எதிர்கால நியாயத்தீர்ப்பு பற்றி). தேவனுடைய வார்த்தை மனிதர்களுக்கு ஒரு வகையான தெய்வீகத்தன்மை இருக்கும், ஆனால் அதன் வல்லமையை மறுக்கும் ஒரு காலத்தைப் பற்றி பேசுகிறது (2 தீமோத்தேயு 3:5) (இதில் தாராளவாத இறையியல் என்ன செய்கிறது, அது மனிதனில் சில உள் நன்மைகள் இருப்பதாகக் கூறுகிறது. கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவரால் மறுபிறப்பு தேவையில்லை). மேலும் அது ஒரே மெய்யான தேவனுக்குப் பதிலாக விக்கிரகங்களைச் சேவிப்பவர்களுக்கு எதிராகப் பேசுகிறது (1 நாளாகமம் 16:26) (தாராளவாத கிறிஸ்தவம், தேவனை முழுவதுமாக வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி ஆராதிப்பதை விட, தனது சொந்த விருப்பப்படி ஒரு பொய்யான கடவுளை உருவாக்குகிறது).

English



முகப்பு பக்கம்

தாராளவாத கிறிஸ்தவ இறையியல் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries