settings icon
share icon
கேள்வி

உள்ளடக்குதல் பற்றிய நற்செய்தி என்றால் என்ன?

பதில்


உள்ளடக்கத்தின் நற்செய்தி என்பது ஒரு புதிய பெயரைக் கொண்ட உலகளாவியவாதத்தின் பழைய கலாபேதங்களுக்கு எதிரான கொள்கையாகும். எல்லா ஜனங்களும் இறுதியில் இரட்சிக்கப்பட்டு பரலோகத்திற்குச் செல்வார்கள் என்கிற நம்பிக்கையே உலகளாவியவாதம் ஆகும். கார்ல்டன் பியர்சன் மற்றும் பிறரால் கற்பிக்கப்படும் உள்ளடக்கத்தின் நற்செய்தி பல தவறான நம்பிக்கைகளை உள்ளடக்கியது:

(1) இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலானது, மனந்திரும்புதல் தேவையில்லாமல் பரலோகத்தில் நித்திய வாழ்வை அனுபவிக்க மனிதகுலம் அனைவருக்கும் விலைக்கிரயம் கொடுத்தது என்று உள்ளடக்கத்தின் நற்செய்தி கூறுகிறது.

(2) உள்ளடக்கத்தின் நற்செய்தி இரட்சிப்பு நிபந்தனையற்றது என்றும், மனித குலத்தின் பாவக் கடனை செலுத்துவதற்காக இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கூட வைக்கத் தேவையில்லை என்றும் போதிக்கிறது.

(3) உள்ளடக்கத்தின் நற்செய்தி அனைத்து மனித இனமும் அவர்கள் உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும் பரலோகத்தில் வாழ்வதற்கு விதிக்கப்பட்டுள்ளது என்று நம்புகிறது.

(4) உள்ளடக்கத்தின் நற்செய்தி, மதச் சார்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனித இனமும் பரலோகத்திற்குச் செல்வதாக அறிவிக்கிறது.

(5) கடைசியாக, தேவனுடைய கிருபையை வேண்டுமென்றே மற்றும் உணர்வுப்பூர்வமாக நிராகரிப்பவர்கள் மட்டுமே-அவருடைய கிருபையின் "கனியை ருசித்தபின்"-தேவனிலிருந்து பிரிந்து நித்தியத்தை கழிப்பார்கள் என்று உள்ளடக்கத்தின் நற்செய்தி கூறுகிறது.

உள்ளடக்கத்தின் நற்செய்தி இயேசு மற்றும் வேதாகமத்தின் தெளிவான போதனைகளுக்கு எதிரானது. யோவானின் நற்செய்தியில், இரட்சிப்புக்கான ஒரே வழி அவர் மூலம் மட்டுமே என்று இயேசு தெளிவாகக் கூறுகிறார் (யோவான் 14:6). பாவத்தில் விழுந்துபோன மனிதகுலத்திற்கு இரட்சிப்பைப் பெற தேவன் இயேசுவை உலகிற்கு அனுப்பினார், ஆனால் அந்த இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் பாவத்திற்கான தேவனுடைய விலைக்கிரயமாக கிடைக்கும் (யோவான் 3:16). அப்போஸ்தலர்கள் இந்த செய்தியை எதிரொலிக்கிறார்கள் (எபேசியர் 2:8-9; 1 பேதுரு 1:8-9; 1 யோவான் 5:13). இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் என்பது கிரியைகளின் அடிப்படையில் இனி இரட்சிப்பைப் பெற முயற்சிப்பதில்லை, மாறாக இரட்சிப்பைப் பெற இயேசு செய்தது போதுமானது என்று நம்புவது ஆகும்.

விசுவாசத்துடன் இணைந்து மனந்திரும்புதல். மனந்திரும்புதல் என்பது உங்கள் பாவத்தைப் பற்றிய மனமாற்றம் மற்றும் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பின் தேவை (அப்போஸ்தலர் 2:38). மனந்திரும்புதல் என்பது, தேவனுக்கு முன்பாக, நாம் இரட்சிப்புக்கான வழியைப் பெற இயலாத பாவிகள் என்பதை ஒப்புக்கொள்கிறோம், எனவே நாம் மனந்திரும்புகிறோம் (“மனந்திரும்பு” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “உங்கள் மனதை மாற்றுவது”) நாம் அவைகளை விட்டு விலகி, விசுவாசத்தினால் கிறிஸ்துவைத் தேடுகிறோம்.

மனந்திரும்பவும் விசுவாசிக்கவும் தயாராக இருக்கும் அனைவருக்கும் இயேசு இரட்சிப்பை வழங்குகிறார் (யோவான் 3:16). இருப்பினும், எல்லோரும் விசுவாசிக்க மாட்டார்கள் என்று இயேசுவே கூறினார் (மத்தேயு 7:13-14; யோவான் 3:19). ஒரு அன்பான மற்றும் கிருபையுள்ள தேவன் ஜனங்களை நரகத்திற்கு அனுப்புவார் என்று யாரும் நினைக்க விரும்புவதில்லை, ஆனால் அதைத்தான் வேதாகமம் கற்பிக்கிறது. ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பது போல, இறுதியில், மனுஷகுமாரன் எல்லா தேசங்களையும் பிரிப்பார் என்று இயேசு கூறுகிறார். செம்மறி ஆடுகள் (இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இரட்சிப்பைப் பெற்றவர்களைக் குறிக்கும்) இயேசுவோடு ராஜ்யத்திற்குச் செல்லுவார்கள். ஆடுகள் (இயேசு வழங்கும் இரட்சிப்பை நிராகரித்தவர்களைக் குறிக்கும்) நரகத்திற்குச் செல்லும், இது நித்தியமான அவியாத அக்கினியாக இருப்பது விவரிக்கப்படுகிறது (மத்தேயு 25:31-46).

இந்த போதனை பலரை புண்படுத்துகிறது, மேலும், சிலர் தங்கள் சிந்தனையை தேவனுடைய வார்த்தையின் தெளிவான போதனைக்கு ஏற்ப மாற்றுவதற்கு பதிலாக, வேதாகமம் சொல்வதை மாற்றி, இந்த தவறான போதனையை பரப்புகிறார்கள். உள்ளடக்கத்தின் நற்செய்தி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

உள்ளடக்கத்தின் நற்செய்திக்கு எதிரான சில கூடுதல் வாதங்கள் இங்கே:

(1) இரட்சிப்பின் பரிசைப் பெற விசுவாசமும் மனந்திரும்புதலும் தேவையில்லை என்றால், ஏன் புதிய ஏற்பாட்டில் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வைக்க வேண்டும் என்கிற அழைப்புகள் நிறைந்துள்ளன?

(2) இரட்சிப்புக்கு கிறிஸ்துவின் சிலுவையில் செய்து முடிந்த வேலையில் விசுவாசம் தேவையில்லை என்றால், இயேசு ஏன் இவ்வளவு அவமானகரமான மற்றும் வேதனைமிக்க மரணத்திற்கு அடிபணிந்தார்? தேவன் அனைவருக்கும் ஒரு "தெய்வீக மன்னிப்பை" வழங்கியிருக்க முடியுமே.

(3) அனைவரும் உணர்ந்தோ அறியாமலோ பரலோகத்திற்குச் செல்லப் போகிறார்களானால், சுய சித்தம் பற்றி என்ன? தேவனையும், வேதாகமத்தையும், இயேசுவையும், கிறிஸ்தவத்தையும் நிராகரித்து வாழ்நாளைக் கழித்த நாத்திகன் தன் விருப்பத்திற்கு மாறாக பரலோகத்திற்கு இழுக்கப்படப் போகிறானா? உள்ளடக்கத்தின் நற்செய்தி, பரலோகம் அங்கு இருக்க விரும்பாதவர்களால் நிரப்பப்படும் என்பதைக் குறிக்கிறது.

(4) முரண்பாடான கூற்றுக்களைக் கொண்ட பல மதங்கள் இருந்தால், மத சார்பற்ற அனைத்து ஜனங்களும் எவ்வாறு பரலோகத்திற்குச் செல்ல முடியும்? உதாரணமாக, மறுபிறவி அல்லது நிர்மூலமாக்கல் (அதாவது, மரணத்தின் போது நாம் மரணத்திற்குப் பிறகு இருப்பதை நிறுத்திவிடுகிறோம் என்ற எண்ணம்) போன்ற, மறுபிறப்பு பற்றி முற்றிலும் மாறுபட்ட விஷயங்களை நம்பும் நபர்களைப் பற்றி என்ன?

(5) இறுதியாக, தேவனுடைய கிருபையை வெளிப்படையாக நிராகரிப்பவர்கள் பரலோகத்திற்குச் செல்லவில்லை என்றால், அது உள்ளடக்கத்தின் நற்செய்தியாக இருப்பது அரிதல்லவா? எல்லா ஜனங்களும் பரலோகத்திற்குச் செல்லவில்லை என்றால், அதை உள்ளடக்கத்தின் நற்செய்தி என்று அழைக்காதீர்கள், ஏனென்றால் அது இன்னும் சிலரை விலக்குகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தியின் செய்தியை "மரணவாசனை" என்று அழைத்தார் (2 கொரிந்தியர் 2:16). இதன் மூலம் அவர் கூறியது என்னவென்றால், நற்செய்தியினுடைய செய்தி பலரை புண்படுத்துவதாக உள்ளது. இது ஜனங்கள் தங்கள் பாவம் மற்றும் கிறிஸ்து இல்லாத நம்பிக்கையற்ற நிலை பற்றிய உண்மையைச் சொல்கிறது. தங்களுக்கும் தேவனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று அது ஜனங்களுக்குச் சொல்கிறது. பல நூற்றாண்டுகளாக, அதிகமான ஜனங்களை திருச்சபையில் உள்ளடக்கத்தின் நற்செய்தியின் செய்தியை மென்மையாக்க முயற்சித்தவர்கள் (நல்ல நோக்கத்துடன் பலர்) உள்ளனர். மேலோட்டமாகப் பார்த்தால், அது புத்திசாலித்தனமான செயலாகத் தோன்றினாலும், இறுதியில் அது ஜனங்களுக்கு ஒரு தவறான பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. தான் பிரசங்கித்த சுவிசேஷத்தை விட வேறொரு வித்தியாசமான சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவன் சபிக்கப்பட்டவன் என்று பவுல் கூறினார் (கலாத்தியர் 1:8). அது வலுவான மொழி, ஆனால் நற்செய்தியின் செய்தி எவ்வளவு இன்றியமையாதது என்பதை நீங்கள் உணர்ந்தவுடன், அதைச் சரியாகப் பெறுவது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நீங்கள் உணருவீர்கள். தவறான நற்செய்தி யாரையும் காப்பாற்றாது. அது செய்யும் அனைத்துமே, அதிகமான ஜனங்களை நரகத்திற்குக் கண்டனம் செய்வதும், உள்ளடக்கத்தின் நற்செய்தியைப் போன்ற பொய்யான கருத்துக்களைக் கூறுபவர்களுக்கு அதிக கண்டனத்தை உருவாக்குவதுமே ஆகும்.

English



முகப்பு பக்கம்

உள்ளடக்குதல் பற்றிய நற்செய்தி என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries