settings icon
share icon
கேள்வி

ஒரு கிறிஸ்தவன் மரபணு பொறியியலை எவ்வாறு பார்க்க வேண்டும்?

பதில்


வேதாகமம் எழுதப்பட்ட காலத்தில் மரபணு பொறியியல் குறித்து ஒன்றும் அறியப்படாததால், அந்த தலைப்பில் குறிப்பிட்டு உறுதியான குறிப்புகளை நிறுவுவது என்பது கடினமாகும். மரபணுப் பொறியியலின் கிறிஸ்தவப் பார்வையைத் தீர்மானிக்க, மரபணுப் பொறியியலைப் பார்ப்பதற்கான கொள்கைகளின் கட்டத்தை நாம் நிறுவ வேண்டும். குளோனிங் பற்றிய கிறிஸ்தவ பார்வையில் உள்ள விவரங்களுக்கு, தயவுசெய்து "குளோனிங் பற்றிய கிறிஸ்தவ பார்வை என்ன?" என்னும் ஆக்கத்தைப் பார்க்கவும்.

மரபணுப் பொறியியலில் உள்ள மிகப் பெரிய அக்கறையின் கூறில், மனித உடலையும் மற்ற படைப்புகளையும் பராமரிக்கும் பொறுப்பில் மனிதகுலம் எவ்வளவு சுதந்திரம் எடுக்க முடியும் என்பதைப் பொறுத்ததாகும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. நீதிமொழிகள் புத்தகம் ஒரு தனிநபரின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது தொடர்பான சில செயல்பாடுகளைக் குறிக்கிறது (நீதிமொழிகள் 12:18). உடலைக் கவனித்துக்கொள்வது நமக்கு ஒரு குறிப்பிட்ட கடமை உள்ளது என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (எபேசியர் 5:29). அவர் தனது சீடரான தீமோத்தேயுவை தனது அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காக, கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள் என ஊக்குவித்தார் (1 தீமோத்தேயு 5:23). பரிசுத்த ஆவியின் ஆலயம் (1 கொரிந்தியர் 6:19, 20) என்பதால், உடலை சரியாகப் பயன்படுத்த விசுவாசிகளுக்குப் பொறுப்பு இருக்கிறது. சரீரத் தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நாம் நமது விசுவாசத்தைக் காட்டுகிறோம் (யாக்கோபு 2:16). எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய மற்றும் மற்றவர்களின் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.

சிருஷ்டிப்பானது மனிதர்களின் பராமரிப்பில் இருக்க வேண்டும் (ஆதியாகமம் 1:28; 2:15-20), ஆனால் சிருஷ்டிப்பு நமது பாவத்தால் பாதிக்கப்பட்டது என்று வேதாகமம் சொல்லுகிறது (ஆதியாகமம் 3:17-19, ரோமர் 8:19-21) மற்றும் பாவத்தின் விளைவுகளிலிருந்து மீட்கப்படுவதை எதிர்பார்க்கிறது. சிருஷ்டிப்பின் பராமரிப்பாளர்களாக, மனிதர்கள் பாவ சாபத்தின் விளைவுகளை "சரிசெய்ய" கடமைப்பட்டுள்ளனர் மற்றும் சாத்தியமான எந்த வழியையும் பயன்படுத்தி காரியங்களை ஒரு சிறந்த சீரமைப்பிற்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்று முடிவு செய்ய முடியும். எனவே, எந்த அறிவியல் முன்னேற்றமும் படைப்பின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படலாம் என சிந்தனை செல்கிறது. இருப்பினும், இந்த நன்மையை நிறைவேற்ற மரபணு பொறியியலைப் பயன்படுத்துவது குறித்து சில கவலைகள் உள்ளன.

1. தேவன் தமது படைப்பின் பொறுப்பாளர்களாக நமக்கு வழங்கியதைத் தாண்டி மரபணு பொறியியல் ஒரு பங்கைப் பெறும் என்ற கவலை உள்ளது. அனைத்து பொருட்களும் தேவனாலும் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டன என்று வேதாகமம் கூறுகிறது (கொலோசெயர் 1:16). தேவன் எல்லா உயிர்களையும் குறிப்பிட்ட "இனங்களுக்கு" பிறகே இனப்பெருக்கம் செய்யும்படிக்கு வடிவமைத்தார் (ஆதியாகமம் 1:11-25). மரபியலின் அதிகப்படியான கையாளுதல் (இனங்களை மாற்றுதல்) வடிவமைப்பாளருக்காக ஒதுக்கப்பட்ட காரியங்களை சேதப்படுத்தலாம்.

2. சிருஷ்டிப்பின் மறுசீரமைப்புக்கான தேவனுடைய திட்டத்தை தடுக்கும் முயற்சியில் மரபணு பொறியியல் இருப்பதாக ஒரு கவலை உள்ளது. ஏற்கனவே கூறியது போல், ஆதியாகமம் 3 இல் (தேவனுடைய திட்டத்திற்கு எதிரான மனிதகுலத்தின் மீறுதல்) பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளால் சிருஷ்டிப்பு பாதிக்கப்பட்டது. மரணம் உலகிற்குள் நுழைந்தது, மேலும் மனிதனின் மரபணு அமைப்பு மற்றும் பிற சிருஷ்டிப்புகள் அழிவை நோக்கி ஒரு மாற்றத்தைத் தொடங்கியது. சில சந்தர்ப்பங்களில், "சாபம்" என்று அழைக்கப்படும் பாவத்தின் இந்த விளைவை செயல்தவிர்க்கும் முயற்சியாக மரபணு பொறியியல் பார்க்கப்படலாம். ரோமர் 8 மற்றும் 1 கொரிந்தியர் 15 -ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இயேசு கிறிஸ்துவின் மூலம் மீட்புக்கான ஒரு தீர்வு தன்னிடம் இருப்பதாக தேவன் கூறியிருக்கிறார். அசலை விட சிறந்த நிலையை மீண்டும் நிலைநாட்டும் தேவனுடைய வாக்குறுதியின் உச்சக்கட்டத்துடன் தொடர்புடைய சிருஷ்டிப்பு புதியதை எதிர்பார்க்கிறது. இந்த செயல்முறையை எதிர்த்துப் போராடுவதற்கு "அதிக தூரம்" செல்வது, மறுசீரமைப்பிற்காக கிறிஸ்துவை நம்புவதற்கு தனிநபர்களின் பொறுப்புடன் போட்டியாக இருக்கலாம் (பிலிப்பியர் 3:21).

3. மரபணு பொறியியல் தேவனால் நியமிக்கப்பட்ட வாழ்க்கை செயல்முறையில் தலையிடக்கூடும் என்ற கவலை உள்ளது. வேதாகமத்தைப் பற்றிய பொதுவான ஆய்வில், வாழ்க்கையின் செயல்முறைக்கு தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக, சங்கீதம் 139 சங்கீதக்காரனுக்கும் அவரது சிருஷ்டிகருக்கும் கருப்பையில் உருவாகுவதில் இருந்து இருக்கும் நெருக்கமான உறவை விவரிக்கிறது. தேவனுடைய திட்டத்திற்கு வெளியே ஜீவனை உருவாக்க மரபணு கையாளுதலைப் பயன்படுத்துவது தேவன் உணர்வுள்ள ஆத்துமாவின் வளர்ச்சியை பாதிக்குமா? பௌதிக வாழ்வின் செயல்பாட்டில் தலையிடுவது ஆவிக்குரிய வாழ்வின் வாய்ப்புகளை பாதிக்குமா? ரோமர் 5:12 ஆதாம் பாவம் செய்ததால் அனைத்து மனித இனமும் பாவம் செய்கிறது என்று கூறுகிறது. எல்லாரும் பாவம் செய்யும் வகையில் பாவ இயல்பு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படுவதை இது உள்ளடக்கியது என்று புரிந்து கொள்ளப்படுகிறது (ரோமர் 3:23). ஆதாமின் பாவத்தை வென்றதன் மூலம் உண்டாயிருக்கும் நித்திய நம்பிக்கையை பவுல் விளக்குகிறார். ஆதாமில் உள்ள அனைவரும் (அவருடைய சந்ததியிலிருந்து) இறந்துவிட்டால், அத்தகைய நிலையில் உள்ளவர்களுக்காக கிறிஸ்து இறந்தால், அந்த "வித்துக்கு" வெளியே உருவாக்கப்பட்ட உயிர் மீட்கப்பட முடியுமா? (1 கொரிந்தியர் 15:22, 23).

4. மரபணுப் பொறியியலில் முன்னேற்றங்களைத் துணிச்சலாகப் பின்தொடர்வது தேவனை மீறிய செயலால் தூண்டப்படுகிறது என்கிற கவலை உள்ளது. ஆதியாகமம் 11:1-9, சிருஷ்டிகருக்கு மேலே சிருஷ்டிப்பு தன்னை உயர்த்த முயற்சிக்கும்போது என்ன நடக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆதியாகமம் 11இல் உள்ள மக்கள் ஒன்றுபட்டனர், ஆயினும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கவில்லை. இதன் விளைவாக, தேவன் அவர்களின் முன்னேற்றத்தை நிறுத்தினார். ஜனங்கள் செல்லும் திசையில் சில ஆபத்துகள் உள்ளதை தேவன் நிச்சயமாக உணர்ந்தார். ரோமர் 1:18-32 இல் இதேபோன்ற எச்சரிக்கை நம்மிடம் உள்ளது. அங்கு தேவன் படைப்பில் மிகவும் ஈர்க்கப்பட்ட நபர்களை விவரிக்கிறார் (உண்மையில் சிருஷ்டிகருக்கு பதிலாக சிருஷ்டியை வணங்குகிறார்கள்) அவர்கள் அழிவுக்கு கொண்டு வரப்பட்டனர். பயம் என்னவென்றால், மரபணு பொறியியல் இதேபோன்ற உந்துதல்களையும், இறுதியில், இதே போன்ற முடிவுகளை வளர்க்கும்.

இவைதான் கேள்விகள் மற்றும் பிரச்சனைகள், தற்போது நம்மிடம் பதில்கள் இல்லை, ஆனால் அவை கவலைகளாகவே இருக்கின்றன, மேலும் அவை மரபணு பொறியியலின் பார்வையை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கும் கிறிஸ்தவர்களால் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

English



முகப்பு பக்கம்

ஒரு கிறிஸ்தவன் மரபணு பொறியியலை எவ்வாறு பார்க்க வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries