settings icon
share icon
கேள்வி

வேசித்தனத்திற்கும் விபச்சாரத்திற்கும் என்ன வித்தியாசம்?

பதில்


நவீன அகராதி வரையறைகள் வேசித்தனம் (“திருமணம் செய்து கொள்ளாத நபர்களிடையே ஒருவருக்கொருவர் தன்னார்வ உடலுறவு கொள்ளுதல், இதில் விபச்சாரமும் அடங்கும்”) மற்றும் விபச்சாரம் (“திருமணமான நபர்கள் மற்றும் சட்டபூர்வமான தங்களுடைய துணையைத் தவிர்த்து வேறு ஒரு துணையுடன் கொள்ளும் தன்னார்வ உடலுறவு”) எளிமையானவை, போதுமானது, ஆனால் இந்த இரண்டு பாலியல் பாவங்களையும் தேவன் எவ்வாறு உணர்கிறார் என்பதைப் பற்றிய சிறந்த நுண்ணறிவை வேதாகமம் நமக்கு வழங்குகிறது. வேதாகமத்தில், இரண்டும் சொல்லர்த்தமாக குறிப்பிடப்படுகின்றன, ஆனால் இரண்டும் விக்கிரகாராதனையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

பழைய ஏற்பாட்டில், அனைத்து பாலியல் பாவங்களும் மோசேயின் நியாயப்பிரமாணம் மற்றும் யூத வழக்கத்தால் தடை செய்யப்பட்டன. இருப்பினும், பழைய ஏற்பாட்டில் "வேசித்தனம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வார்த்தை விக்கிரகாராதனையின் பின்னணியிலும் பயன்படுத்தப்பட்டது மற்றும் ஆவிக்குரிய விபச்சாரம் என்று அழைக்கப்படுகிறது. 2 நாளாகமம் 21:10-14 ல், தேவன் யோராம் ஜனங்களை விக்கிரகாராதனைக்கு வழிநடத்தினபடியினால் அவனை வாதைகள் மற்றும் வியாதிகளால் வாதித்தார். "அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான்" (வசனம் 11) மற்றும் "ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணினான்" (வசனம் 13). ராஜாவாகிய ஆகாப் இஸ்ரவேலர்களை மிக மோசமான விக்கிரகாராதனைக்கு வழிநடத்திய காம தேவதையாகியா பாகாலின் ஆசாரியனாக இருந்த யேசபேலின் கணவர் ஆவார். எசேக்கியேல் 16-இல், எசேக்கியேல் தீர்க்கதரிசி மற்ற தேவர்களுடன் "வேசித்தனம் செய்ய" தேவனுடைய ஜனங்கள் அவரை விட்டு விலகிய வரலாற்றை விரிவாக விவரிக்கிறார். "விக்கிரகாராதனை" என்று பொருள்படும் வேசித்தனம் என்ற வார்த்தை இந்த அதிகாரத்தில் மட்டும் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்கள் அவர்களைச் சுற்றியிருந்த தேசங்களுக்கிடையில் அவர்களுடைய ஞானம், செல்வம், அதிகாரம் ஆகியவற்றால் அறியப்பட்டதால், ஒரு ஸ்திரீயின் அழகு அவளுக்கு ஒரு கண்ணியாக இருந்தது, அவர்கள் தங்கள் அண்டை வீட்டாரால் போற்றப்பட்டார்கள் மற்றும் பாராட்டப்பட்டார்கள், அதனால் அவர்கள் விக்கிரகாராதனையால் ஈர்க்கப்பட்டனர். நடைமுறைகள். வேசித்தனம் என்ற வார்த்தை புறமத விக்கிரகாராதனையுடன் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் புறமத "ஆராதனை" அவர்களின் சடங்குகளில் பாலினத்தை உள்ளடக்கியது. பாகால் மற்றும் பிற பொய்த் தேவர்களை வழிபடுவதில் கோயில் விபச்சாரிகள் பொதுவாக இருந்தனர். அனைத்து வகையான பாலியல் பாவங்களும் இந்த மதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல், வழிபாட்டாளர்களுக்கு, குறிப்பாக அவர்களின் மந்தைகள் மற்றும் பயிர்களின் அதிகரிப்பில் தேவர்களிடமிருந்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வழிமுறையாக ஊக்குவிக்கப்பட்டது.

புதிய ஏற்பாட்டில், வேசித்தனம் என்பது கிரேக்க வார்த்தையான போர்னியா -வில் இருந்து வந்தது, அதன் பொருள் விபச்சாரம் மற்றும் தகாதப் பாலுறவை உள்ளடக்கியது. போர்னியா மற்றொரு கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, அதன் வரையறையில் ஓரினச்சேர்க்கை உட்பட எந்தவொரு சட்டவிரோத காமச்செயலில் ஈடுபடுவதும் அடங்கும். சுவிசேஷங்கள் மற்றும் நிருபங்களில் இந்த வார்த்தையின் பயன்பாடு எப்போதும் பாலியல் பாவத்தைக் குறிக்கிறது, அதேசமயம் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் "வேசித்தனம்" எப்போதும் விக்கிராகாராதனைக் குறிக்கிறது. ஆசியா மைனரின் இரண்டு திருச்சபைகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கர்த்தராகிய இயேசு கண்டனம் செய்கிறார் (வெளிப்படுத்துதல் 2:14, 20), மேலும் அவர் கடைசிக் காலத்தின் "மகா வேசியையும்” குறிப்பிடுகிறார், "மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்கள்" (வெளிப்படுத்துதல் 17:1-2).

விபச்சாரம், மறுபுறம், திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறு ஒருவருடன் கொள்ளும் பாலியல் பாவத்தைக் குறிக்கிறது, மேலும் இந்த வார்த்தை பழைய ஏற்பாட்டில் எழுத்தியல் மற்றும் உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. “விபச்சாரம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் அர்த்தம் “திருமணத்தை முறித்தல்” என்பதாகும். சுவாரஸ்யமாக, தேவன் தம்முடைய ஜனங்கள் தன்னை விட்டு மற்ற தேவர்களை நாடிச் செல்லுவதை விபச்சாரம் என்று விவரிக்கிறார். யூத ஜனங்கள் யேகோவாவின் மனைவியாகக் கருதப்பட்டனர், எனவே அவர்கள் மற்ற தேசங்களின் தேவர்களிடம் சென்றபோது, அவர்கள் விபச்சாரம் செய்து சோரம்போன ஒரு விபச்சாரியுடன் ஒப்பிடப்பட்டனர். பழைய ஏற்பாடு இஸ்ரவேலின் மற்ற தேவர்களை நாடிச்சென்ற விக்கிரக ஆராதனையை மற்ற தேவர்களிடம் "வேசியாக" சென்ற ஒரு விரும்பத்தகாத பெண் என்று குறிப்பிடுகிறது (யாத்திராகமம் 34:15-16; லேவியராகமம் 17:7; எசேக்கியேல் 6:9 KJV). மேலும், ஓசியாவின் முழு புத்தகமும் தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையிலான உறவை தீர்க்கதரிசியாகிய ஓசியா மற்றும் அவரது சோர ஸ்திரீயாகிய மனைவி கோமேர் ஆகியோரின் திருமணத்திற்கு ஒப்பிடுகிறது. ஓசியாவுக்கு எதிரான கோமேரின் செயல்கள் இஸ்ரேலின் பாவம் மற்றும் துரோகத்தின் சித்திரமாகும், இது காலப்போக்கில், மற்ற தேவர்களுடன் ஆவிக்குரிய விபச்சாரம் செய்ய தனது உண்மையான கணவனை (யெகோவாவை) விட்டுவிட்டது.

புதிய ஏற்பாட்டில், "விபச்சாரம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு கிரேக்க வார்த்தைகள் கிட்டத்தட்ட எப்போதும் திருமணமான நபர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் பாவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. தியத்தீரா திருச்சபைக்கு எழுதிய கடிதத்தில் மட்டும் ஒரேஒரு விதிவிலக்கு உள்ளது, இது "தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவளைப்" (வெளிப்படுத்துதல் 2:20) பொறுத்துக்கொண்டதற்காக கண்டனம் செய்யப்பட்டது. இந்த ஸ்திரீ திருச்சபையை ஒழுக்கக்கேடு மற்றும் உருவ வழிபாடுகளுக்குள் ஈர்த்தாள், அவளுடைய தவறான கோட்பாடுகளால் மயக்கப்பட்ட எவரும் அவளுடன் விபச்சாரம் செய்ததாகக் கருதப்பட்டார்கள்.

English


முகப்பு பக்கம்
வேசித்தனத்திற்கும் விபச்சாரத்திற்கும் என்ன வித்தியாசம்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries