settings icon
share icon
கேள்வி

உங்களுடைய பணத்தைக் கையாளுவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


பணத்தை சரியாக நிர்வகிப்பது அல்லது கையாளுவதைக் குறித்து சொல்லுவதற்கு வேதாகமத்தில் எண்ணற்ற காரியங்கள் உள்ளன. கடன் வாங்குவதற்கு பொதுவாகவே விரோதமாக/எதிரான ஆலோசனையைத்தான் வேதாகமத்தில் பார்க்கலாம். காண்க: நீதிமொழிகள் 6:1-5; 20:16; 22:7, 26-27 (“ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்: கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை… கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களின் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே”). செல்வத் திரட்சிக்கு எதிராக மீண்டும் மீண்டுமாக வேதாகமம் எச்சரிக்கிறது, இதற்குப் பதிலாக ஆவிக்குரிய செல்வத்தை நாட நம்மை ஊக்குவிக்கிறது. நீதிமொழிகள் 28:20: “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.” மேலும் நீதிமொழிகள் 10:15; 11:4; 18:11; 23:5 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.

நீதிமொழிகள் 6:6-11 சொம்பேறித்தனத்தைப்பற்றிய ஞானத்தையும் அதன் விளைவாக ஏற்படும் தவிர்க்க முடியாத செல்வத்தின் அழிவையும் குறித்து வாசிக்கிறோம். நாம் எறும்பினிடத்தில் போய் அது எப்படி தனக்கு ஆகாரத்தை சேர்த்துவைக்கிறது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வேதப்பகுதி ஆதாயம் ஈட்டத்தக்க ஏதேனும் ஒன்றைச்செய்வதை விட்டுவிட்டு தூங்குவதற்கு எதிராகவும் சொல்லப்பட்டிருக்கிறது. “மந்தன்” ஒரு சோம்பேறியாக இருக்கிறான், அப்படிப்பட்ட சோம்பேறிகள் ஓய்வெடுப்பார்களே அல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். நிச்சயமாய் அவர்களுடைய முடிவு வருமை மற்றும் இல்லாமையாகத்தான் இருக்கும். மற்றொரு புறம் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற மனஉறுதியுடன் இருப்பவர்களை பார்க்கலாம். பிரசங்கி 5:10-ன் படி அப்படிபட்டவர்கள் பணத்தினால் திருப்தியடைவதில்லை தொடர்ந்து மென்மேலும் சாம்பதிக்கவே நினைப்பார்கள். 1 தீமோத்தேயு 6:6-11, பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று எச்சரிக்கிறது.

செல்வத்தை நாம் திரளாக்க விரும்பி சேர்ப்பதை வேதாகமம் முக்கியபடுத்தவில்லை. வாங்குவது அல்ல கொடுப்பதே வேதாகமத்தின் கோட்பாடு ஆகும். “இதை நினைவுகூறுங்கள்: சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:6-7). தேவன் நமக்கு கொடுத்தவைகளுக்கு நாம் நல்ல உக்கிராணக்காரர்களாக இருக்க உற்சாகப் படுத்தப்படுகிறோம். லூக்கா 16:1-13ல் நேர்மையற்ற உக்கிராணக்காரனை குறித்த உவமை தவறான உக்கிராணக்காரனுக்கு எச்சரிக்கையாக இயேசுகிறிஸ்து சொன்னார். இக்கதையின் ஒழுக்க நெறி என்னவெனில், “அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?” என்பதாகும் (வசனம் 11). நமக்கு நம்முடைய சொந்த வீட்டாரை விசாரிக்க வேண்டிய பொறுப்புள்ளது, 1 தீமோத்தேயு 5:8 நினைவூட்டுகிறது “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”

சுருக்கமாக பணத்தை கையாளுவது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? இதனுடை பதிலை ஞானம் என்று ஒரே வரியில் சுருக்கமாக சொல்லலாம். நம்முடைய பணத்தை ஞானமாக கையாள வேண்டும். நாம் பணத்தை சேமிக்க வேண்டும் ஆனால் குவித்துக்கொள்ள கூடாது. விவேகம் மற்றும் கட்டுப்பாடோடு பணத்தை செலவுச் செய்ய வேண்டும். நாம் தேவனுக்கு சந்தோஷமாக தியாகமனதுடனே திரும்ப கொடுக்க வேண்டும். நாம் நம்முடைய பணத்தை பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் ஆனால் அதை விவேகமாக மற்றும் தேவ ஆவியினுடைய வழிநடத்துதலோடு செய்ய வேண்டும். ஏழையாக இருப்பது தவறல்ல ஆனால் பணத்தை அனாவசியமாக செலவிடுவது தவறாகும். பணத்தை கையாள்வதில் ஞானமாய் இருக்க வேண்டும் என்பதே வேதாகமத்தின் நிலையான செய்தியாகும்.

English



முகப்பு பக்கம்

உங்களுடைய பணத்தைக் கையாளுவது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries