settings icon
share icon
கேள்வி

பரலோகத்தில் நாம் நம்முடைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை பார்க்கவும் அறிந்துகொள்ளவும் முடியுமா?

பதில்


அநேக ஜனங்கள் கூறுகிற காரியம் என்னவெனில், பரலோகத்திற்கு சென்றவுடனே அவர்கள் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால் தங்களை விட்டு பிரிந்து ஏற்கனவே முன்பாக போயுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்ப்பதுதான் என்கிறார்கள். நித்தியத்தில் நாம் நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்க்கவும் அறிந்துகொள்ளவும் அதிக நேரம் நமக்கு இருக்கும். ஆனால், பரலோகத்தில் அது நமது முக்கிய நோக்கமாக இருக்காது. நாம் தேவனை ஆராதிப்பதிலும் பரலோகத்தின் அதிசயங்களை அனுபவிப்பதிலும் அதிக நேரத்தை செலுத்துவோம். நாம் நேசிப்பவர்களோடு மீண்டும் இணையும்போது, நாம் தேவனின் கிருபையையும் மகிமையையும், அவரின் ஆச்சரியமான அன்பையும், மகத்தான செயல்களையும் குறித்து பேசுவோம். நாம் மற்ற விசுவாசிகளோடு, குறிப்பாக நாம் நேசிப்பவர்களோடு, தேவனை துதித்து ஆராதிக்கிறபடியினால் நாம் அதிகமாக சந்தோஷப்படுவோம்.

மறுவாழ்வில் நாம் ஜனங்களை அடையாளம் கண்டுபிடிப்போமா இல்லையா என்பதை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

எந்தோரில் குறி சொல்லுகிற ஒரு ஸ்திரீ சாமுவேலை மரித்தோரிலிருந்து எழுப்பி வரச்செய்தபோது சவுல் அவரை அடையாளம் கண்டுகொண்டான் (1 சாமுவேல் 28:8-17). தாவீதின் மகன் மரித்தபோது, “நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்” (2 சாமுவேல் 12:23). தாவீதின் மகன் குழந்தையாய் இருந்தபோதே மரித்த போதிலும், தாவீது அவன் மகனை பரலோகத்தில் அடையாளம் கண்டுபிடிப்பான் என்று நம்பினான். லூக்கா 16:19-31-ல், மரித்த பிறகும் கூட ஆபிரகாம், லாசரு, மற்றும் ஐசுவரியவான் ஆகிய யாவரும் மரித்தபிறகு அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது என்று பார்க்கிறோம். மறுரூப மலையில், மோசேயையும் எலியாவையும் அடையாளம் கண்டு கொள்ளமுடிந்தது (மத்தேயு 17:3-4). மரித்த பிறகும் கூட மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று இந்த வேதாகம உதாரணங்கள் காண்பிக்கிறது.

நாம் பரலோகத்தை சென்றடையும்போது, இயேசுவைப் “போலவே நாமும் இருப்போம்; அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரை காண்போம்” (1 யோவான் 3:2) என்று வேதம் சொல்லுகிறது. நமது பூமிக்குரிய சரீரங்கள் முதல் மனிதனாகிய ஆதாமைப்போல் இருப்பதுபோல, நமது உயிர்த்தெழபட்ட சரீரங்கள் கிரிஸ்துவைப்போல இருக்கும் (1 கொரிந்தியர் 15:47).” “மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்” (1 கொரிந்தியர் 15:49, 53). இயேசுவை அவர் உயிர்த்தெழுந்த பிறகு, அநேகர் அடையாளம் கண்டு கொண்டார்கள் (யோவான் 20:16, 20; 21:12; 1 கொரிந்தியர் 15:4-7). மகிமையடைந்த சரீரத்தில் இருந்த இயேசுவை அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததென்றால், நாமும் மகிமைபடுத்தபட்ட சரீரத்தில் இருக்கும்போதே அடையாளம் கண்டு கொள்ளபடுவோம். நாம் நேசிப்பவர்களை பரலோகத்தில் பார்போம் என்பது ஒரு மகிமையான காரியமாய் இருந்தாலும், பரலோகம் நம்மை பற்றி இருப்பதை விட அதிகமாய் தேவனை பற்றியதாகும். நாம் நேசிப்பவர்களோடு மீண்டும் இணைக்கபட்டு, அவர்களோடு நித்தியமாய் தேவனை ஆராதிப்போம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது.

English



முகப்பு பக்கம்

பரலோகத்தில் நாம் நம்முடைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை பார்க்கவும் அறிந்துகொள்ளவும் முடியுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries