settings icon
share icon
கேள்வி

இருத்தலியல் யாவை?

பதில்


இருத்தலியல் என்பது தத்துவத்தின் முறையான அமைப்பு அல்ல, அது தத்துவம் சார்ந்தப் பிரச்சினைகளுக்கு பொதுவான நோக்குநிலையாகும். இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. மனிதப் பகுத்தறிவில் அறிவொளியின் அதீத நம்பிக்கையின் விளைவாக இது இருந்தது. கிறிஸ்தவ நம்பிக்கையைப் பகுத்தறிவு முன்மொழிவுகளின் தொகுப்பாகக் குறைக்க முடியாது, ஆனால் அது பரந்த உணர்ச்சி மற்றும் தொடர்புடைய தாக்கங்களையும் உள்ளடக்கியது என்ற கீர்கேகார்டின் நுண்ணறிவு அதைக் கவர்ச்சிகரமானதாக மாற்றிய சில தாக்கங்களில் அடங்கும். இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், முதலாம் உலகப் போரின் பேரழிவு, 1920-கள் மற்றும் 1930-களின் பொருளாதாரச் சரிவுகள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் பயங்கரங்கள் போன்ற வரலாற்று நிகழ்வுகள் மனிதப் பகுத்தறிவு எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் என்ற நவீனத்துவத்தின் தவறான நம்பிக்கையை வெளிப்படுத்தின.

இருத்தலியல், அதன்படி, மனித பகுத்தறிவின் திறனைக் குறைத்து மதிப்பிடுகிறது. ஒரு பகுத்தறிவு, ஒழுங்குபடுத்தப்பட்ட பிரபஞ்சத்தில் ஒருவரின் இடத்தைக் குறிப்பதில் இது தனிப்பட்ட மற்றும் வகுப்புவாத முக்கியத்துவத்தைக் கண்டறிவதில் நம்பிக்கையற்றது ஆகும். இருத்தலியல்வாதிகளுக்கு பகுத்தறிவு ஒழுங்கே சந்தேகத்திற்குரியது. எனவே, பகுத்தறிவு விளக்கம் அர்த்தத்தை கண்டறிவதற்கான பிற அணுகுமுறைகளுக்கு பின்னாக உள்ள நிலையை கொண்டிருக்கிறது. சில இருத்தலியல்வாதிகள், ஒரு தனிநபரின் சூழ்நிலைகளை மீறுவதில் அவர்கள் பெற்ற சாதனைகளின் அடிப்படையில் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். மற்றவர்கள் மனித அனுபவத்தை மற்றவர்களுடன் இணைப்பதன் மூலமும் தொடர்புகொள்வதன் மூலமும் வரும் அர்த்தத்தின் அடிப்படையில் அதை வெளிப்படுத்துகிறார்கள். அனுபவத்தோடு இருத்தலே கவனம் கொள்கிறது. பகுத்தறிவு விளக்கம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இருத்தலியல்வாதத்தின் கூற்றுகளுக்கு ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு உதவிகரமாக பதிலளிக்க முடியும்? ஒருபுறம், ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் மனித பகுத்தறிவின் திறனில் நவீனத்துவம் தவறான நம்பிக்கையைக் கொண்டுள்ளது என்பதை ஒரு கிறிஸ்தவன் ஒப்புக் கொள்ளலாம். உண்மையில், வேதாகமப் போதனைகளின்படி, மனித பாவம் மற்றும் மரணத்தின் பிரச்சினைகள் உட்பட, தேவனுடைய கிருபையால் மட்டுமே வெல்லப்படும் பல காரியங்கள் உள்ளன. மேலும், மனித பகுத்தறிவால் கண்டுபிடிக்க முடியாத பல காரியங்கள் உள்ளன என்பதையும், அவற்றை தேவன் வெளிப்படுத்த விரும்பினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதையும் கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மறுபுறம், ஒரு கிறிஸ்தவன் இருத்தலியல்வாதத்தின் நம்பிக்கையற்ற உணர்வோடு உடன்படுவதில்லை. கிறிஸ்தவம் எதிர்காலத்தின் இரண்டு அம்சங்களை மிகவும் வலியுறுத்துகிறது. முதலாவதாக, கிறிஸ்தவம் கடைசி நியாயத்தீர்ப்பை உறுதிப்படுத்துகிறது, அதில் தவறு, ஒழுங்கற்ற மற்றும் உடைந்த அனைத்தும் இறுதியாக சரி செய்யப்படும், ஏனெனில் கிறிஸ்து பிரபஞ்சத்திலிருந்து அனைத்து தீமைகளையும் வென்று அனைத்திலும் ஆட்சி செய்ய கடைசிக் காலத்தில் திரும்புவார். இரண்டாவதாக, கிறிஸ்துவை நம்பும் அனைவருக்கும், உயிர்த்தெழுதல், நித்திய வாழ்வு மற்றும் பரிசுத்தத்தின் முழுமையான நிறைவு ஆகியவற்றின் அனுபவம், இவை அனைத்தும் தேவனுடைய கிருபையால் ஈவாகக் கொடுக்கப்பட்ட நம்பிக்கையான எதிர்கால யதார்த்தத்தை கிறிஸ்தவம் உறுதிப்படுத்துகிறது. எதிர்காலத்தின் இந்த இரண்டு அம்சங்களைப் பற்றி பல வேதாகமப் பகுதிகளை மேற்கோள் காட்டலாம். பலவற்றில் ஒன்று, ரோமர் 6:23: "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்."

English



முகப்பு பக்கம்

இருத்தலியல் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries