settings icon
share icon
கேள்வி

ஏன் ஊழல் குற்றங்களில் பல சுவிசேஷ கிறிஸ்தவ தலைவர்கள் பிடிபடுகின்றனர்?

பதில்


முதலாவதாக, இவற்றுள் பல துல்லியமான தன்மை அல்ல என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். பல சுவிசேஷ கிறிஸ்தவ தலைவர்கள் மோசடிகளில் சிக்கியிருப்பதைப் போல இது தோன்றலாம், ஆனால் இது போன்ற மோசடிகளின் கவனத்தை மிகப்பெரிய அளவிற்குக் கொடுக்கும். ஏராளமான சுவிசேஷ கிறிஸ்தவத் தலைவர்கள், போதகர்கள், பேராசிரியர்கள், மிஷனரிகள், எழுத்தாளர்கள் மற்றும் சுவிசேஷகர்கள் ஆகியோரும் எவ்விதத்திலும் பங்கேற்கவில்லை. பெரும்பாலான சுவிசேஷ கிறிஸ்தவ தலைவர்கள் ஆண்களும் பெண்களும் கடவுளை நேசிப்பவர்கள், தங்கள் மனைவிகளுக்கும் குடும்பங்களுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள், தங்கள் செயல்களை மிகத்தெளிவான நேர்மையுடன், கண்ணியத்துடன் நடத்துகிறார்கள். ஒரு சிலரின் தோல்விகள் அனைவரது தன்மையையும் தாக்க பயன்படுத்தப்படக்கூடாது.

இவ்வளவு காரியங்கள் கூறிய நிலையில், ஊழல் சில நேரங்களில் தங்களை சுவிசேஷ கிறிஸ்தவர்கள் என்று கூறிகொள்ளும் அந்த மத்தியில் ஏற்படும் பிரச்சனை இன்னும் உள்ளது. விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கு அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முக்கிய கிறிஸ்தவ தலைவர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். சில சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் வரி மோசடி மற்றும் பிற நிதி சட்டவிரோதங்களைக் கண்டனம் செய்துள்ளனர். இது ஏன் நடக்கிறது? குறைந்தபட்சம் மூன்று முக்கிய விளக்கங்கள் உள்ளன: 1) சுவிசேஷக் கிறிஸ்தவர்களாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சிலர் அவிசுவாசப் புரளிவித்தைக்காரர்கள், 2) சில சுவிசேஷ கிறிஸ்தவ தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை பெருமைப்படுத்த செயல்படுகிறார்கள், மற்றும் 3) சாத்தானும் அவனுடைய பேய்களும் கிறிஸ்தவ தலைவர்களை இன்னும் தீவிரமாகத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் ஒரு தலைவர் சம்பந்தப்பட்ட ஒரு ஊழல் கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

1) மோசடிகளில் சிக்கிய சில "சுவிசேஷக் கிறிஸ்தவர்கள்" விடுவிக்கப்பட முடியாத அளவிற்கு புரளிவித்தைகள் காண்பிக்கிறவர்களாகவும் கள்ளத்தீர்க்கதரிசிகளாக இருக்கிறார்கள். இயேசு எச்சரித்தார், “கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத்தேயு 7:15-20). கள்ளத்தீர்க்கதரிசிகள் தேவபக்தியுள்ள ஆண்கள மற்றும் பெண்களாக காண்பித்துக்கொண்டு பாசாங்கு செய்கிறார்கள், மேலும் வலுவான சுவிசேஷ தலைவர்களாகவும் தோன்றுகிறார்கள். இருப்பினும், அவர்களின் "கனி" (மோசடிகள்) இறுதியில் அவர்கள் கூறியிருப்பதற்கு எதிர்மாறாக அவற்றை வெளிப்படுத்துகின்றன. இதில், அவர்கள் சாத்தானின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள், “அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும்.” (2 கொரிந்தியர் 11:14-15).

2) “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என்று வேதாகமம் தெளிவுபடுத்துகிறது (நீதிமொழிகள் 16:18). "தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று" என்று யாக்கோபு 4:6 நமக்கு நினைப்பூட்டுகிறது. பெருமைக்கு எதிராக வேதாகமம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறது. பல கிறிஸ்தவ தலைவர்கள் மனத்தாழ்மையுள்ள ஆவியோடு மற்றும் தேவன் மீது நம்பியிருக்கும் நிலையோடு தங்கள் ஊழியத்தை ஆரம்பிக்கிறார்கள், ஆனால் ஊழியம் வளர்ந்து செழித்துவரும்போது, அவர்கள் இந்த மகிமையில் சிலவற்றை தங்களுக்கே எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். சில சுவிசேஷ கிறிஸ்தவ தலைவர்கள், தேவனுக்கு வெறுமனே உதட்டுச்சேவையை செலுத்திவிட்டு, தங்கள் சொந்த பலத்திலும் ஞானத்திலும் முழுமையாக சார்ந்து ஊழியத்தை நிர்வகிக்கவும் கட்டியெழுப்பவும் முயற்சி செய்கிறார்கள். இந்த வகை பெருமை ஒரு வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. தேவன் ஓசியா தீர்க்கதரிசியின் மூலம் எச்சரிகிறார், “தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்” (ஓசியா 13:6).

3) ஒரு சுவிசேஷ கிறிஸ்தவத் தலைவனுடன் ஒரு ஊழலை தூண்டிவிடுவதன் மூலம் அவருக்கு சக்திவாய்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சாத்தானுக்கு மிக நன்றாகத் தெரியும். தாவீது ராஜா பத்சேபாளுடன் விபச்சாரம் செய்து, அவளது கணவனாகிய உரியாவின் கொலைக்கு ஏற்பாடு செய்ததன் நிமித்தம் தாவீதின் குடும்பத்தாரையும் இஸ்ரவேல் தேசத்தாரையும் பெரும் பாதிப்பிற்கு உட்படுத்தியதுபோலவே, அநேக சபைகள் அல்லது ஊழியங்கள் அதன் தலைவரின் தார்மீகத் தோல்விகள் மூலம் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன. பல கிறிஸ்தவர்கள் ஒரு கிறிஸ்தவ தலைவரின் வீழ்ச்சியைப் பார்த்து அதன் விளைவாக பலவீனமான அவர்களின் நம்பிக்கை வலுவிழந்துபோனது. கிறிஸ்தவரல்லாத அவிசுவாசிகள் கிறிஸ்தவத்தை நிராகரிக்க "கிறிஸ்தவ" தலைவர்கள் தோல்விகளைப் பயன்படுத்தி அதை ஒரு காரணமாக காண்பிக்கிறார்கள். சாத்தானும் அவனுடைய பேய்களும் இதை அறிந்திருக்கிறார்கள், எனவே தலைமை தாங்குபவர்களுக்கு எதிராக தங்கள் தாக்குதல்களை இன்னும் அதிகமாக்குகிறார்கள். வேதாகமம் எல்லாரையும் எச்சரிக்கிறது: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8).

ஒரு சுவிசேஷக் கிறிஸ்தவத் தலைவர் குற்றம் சாட்டப்பட்டார் அல்லது சிக்கலில் சிக்கியபோது நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? 1) சரியான காரணம் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கேட்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ கூடாது (நீதிமொழிகள் 18:8, 17; 1 தீமோத்தேயு 5:19). 2) பாவம் செய்கிறவர்களை கண்டிப்பதற்காக பொருத்தமான வேதாகம நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள் (மத்தேயு 18:15-17; 1 தீமோத்தேயு 5:20). பாவம் நிரூபிக்கப்பட்டாலும் கடுமையானதாலும், ஊழியத் தலைமையிலிருந்து நிரந்தர நீக்கம் செய்யப்பட வேண்டும் (1 தீமோத்தேயு 3: 1-13). 3) பாவம் செய்கிறவர்களை மன்னியுங்கள் (எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13), மனந்திரும்புதல் நிரூபிக்கப்பட்டால், அவர்களை ஐக்கியத்திற்குள் மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் (கலாத்தியர் 6:1, 1 பேதுரு 4:8) ஆனால் தலைமை பொறுப்பிற்கு அல்ல. 4) நம் தலைவர்களுக்காக ஜெபிப்பதில் உண்மையுள்ளவர்களாய் இருங்கள். அவர்கள் சமாளிக்கும் பிரச்சினைகளை அறிந்துகொள்ளவும், அவர்கள் தாக்கப்படுகிற சோதனைகளை மேற்கொள்ளவும், மற்றும் அவர்கள் தாங்க வேண்டிய மன அழுத்தம், போன்றவைகளை நினைவுகூர்ந்து நம் தலைவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும், தேவன் அவர்களை வலுப்படுத்தவும், அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் ஜெபிக்க வேண்டும். 5) மிக முக்கியமாக, ஒரு சுவிசேஷக கிறிஸ்தவ தலைவர் தோல்வியை ஒரு நினைவூட்டலாக எடுத்துக்கொண்டு, உங்களுடைய நம்பிக்கையை தேவன்மேல் தேவன் ஒருவர்மேல் மட்டுமே வையுங்கள். தேவன் ஒருபோதும் கைவிடுவதில்லை, ஒருபோதும் தவறியதில்லை, ஒருபோதும் பாவங்கள் செய்ய மாட்டார், ஒருபோதும் பொய்சொல்வதுமில்லை. “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது" (ஏசாயா 6:3).

English



முகப்பு பக்கம்

ஏன் ஊழல் குற்றங்களில் பல சுவிசேஷ கிறிஸ்தவ தலைவர்கள் பிடிபடுகின்றனர்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries