settings icon
share icon
கேள்வி

பிசாசுகள் தங்களை உயிரற்ற/ஜீவனற்ற பொருட்களுடன் இணைத்துக்கொள்ள முடியுமா?

பதில்


பிசாசுகள் தங்களை உயிரற்ற பொருட்களுடன் இணைத்துக்கொள்ளலாம் என்கிற கருத்துக்கு வேதாகம ஆதரவு இல்லை. இந்த நம்பிக்கை உண்மையில் மூடநம்பிக்கையை சேர்ந்த நடைமுறைகள் மற்றும் அமானுஷ்ய கலாச்சாரங்களில் மற்றும் அமானுஷ்யத்தை செய்பவர்களிடையே காணப்படும் அமானுஷ்ய நம்பிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

முன்னாள் மந்திரவாதிகள் தங்கள் மந்திரப் புத்தகங்களை எரித்த சம்பவத்தை குறிப்பிடுகிற அப்போஸ்தலர் 19:19 போன்ற வசனங்கள், பொருட்களுக்குள் பிசாசுகள் இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அந்த வேதப்பகுதி அப்படிச் சொல்லவில்லை. இந்த புதிய விசுவாசிகள் பொய்கள் பரவுவதைத் தடுக்கவும், அவர்கள் இப்போது இயேசுவை விசுவாசிக்கிற விசுவாசிகளாகக் காட்டவும் தங்கள் மந்திரப் புத்தகங்களை எரித்திருக்க வாய்ப்புள்ளது.

பிசாசுகள் அவிசுவாசமுள்ள ஜனங்களை துன்புறுத்தும் அல்லது ஆட்கொண்டு வைத்திருக்கும் கதைகளை வேதாகமம் பதிவு செய்கிறது. ஆனால் அவை பிசாசுகள் உயிரற்ற பொருட்களுக்குள் இணைக்கப்பட்டிருப்பது குறித்த கதைகள் அல்ல, மேலும் பிசாசுகள் தங்களை பொருட்களுடன் இணைப்பது பற்றி வேதாகமம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை. அமானுஷ்ய நடைமுறைகள் பொல்லாத சக்திகளை ஈர்க்கக்கூடும், மேலும், அந்த நடைமுறைகளில் சில பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், பிசாசுகள் பொருட்களுக்குள் ஈர்க்கப்பட்டதாகத் தோன்றலாம்; இருப்பினும், பிசாசுகள் பொருட்களில் உள்ளன என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. அமானுஷ்ய நடவடிக்கையே அவர்களை ஈர்க்கிறது. அமானுஷ்யத்தில் ஈடுபட்டுள்ள ஜனங்கள் கிறிஸ்துவிடம் வரும்போது, அவர்கள் பெரும்பாலும் தங்கள் அமானுஷ்ய புத்தகங்கள் மற்றும் பொருட்களிலிருந்து விடுபடவே அறிவுறுத்தப்படுகிறார்கள், அந்தப் பொருட்களில் பிசாசுகள் இருப்பதால் அல்ல, ஆனால் புத்தகங்கள் மற்றும் பொருட்கள் எதிர்கால சோதனைகளுக்கு ஆதாரமாக இருக்கும்.

கிறிஸ்துவின் விசுவாசிகள் பிசாசுகளுக்கு பயப்பட வேண்டாம், இருப்பினும் நாம் அவைகளின் சோதனைகளுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் (1 பேதுரு 5:8). தேவனுக்கு அடிபணிவதும், கிறிஸ்துவின் சத்தியத்தில் அனுதினமும் நடப்பதும் முக்கியம்: "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7). கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் பயப்பட ஒன்றுமில்லை, அப்போஸ்தலனாகிய யோவான் விளக்கினார், "அன்பான பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து மற்றும் அவர்களை [சாத்தான் மற்றும் அவனது கள்ளத்தீர்க்கதரிசிகளை] ஜெயித்தீர்கள், ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" (1 யோவான் 4:4).

English



முகப்பு பக்கம்

பிசாசுகள் தங்களை உயிரற்ற/ஜீவனற்ற பொருட்களுடன் இணைத்துக்கொள்ள முடியுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries