settings icon
share icon
கேள்வி

சபையின் ஆட்சிமுறையை உருவாக்குவது குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?

பதில்


பூமியில் தேவனுடைய திருச்சபை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் எப்படி நிர்வகிக்கப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை அவரது வார்த்தையில் மிக தெளிவாக இருந்தது. முதலாவதாக, கிறிஸ்துவே திருச்சபைத் தலைவராகவும் அதின் உச்ச அதிகாரமுடையவராகவும் இருக்கிறார் (எபேசியர் 1:22; 4:15; கொலோசெயர் 1:18). இரண்டாவதாக, உள்ளூர் திருச்சபையானது தானாக இயங்கி செயல்படுகிய சுய ஆட்சி உரிமை மற்றும் தனிநபர்களுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ எந்தவிதமான குறுக்கீட்டிற்கும் இடையில் இருந்து விடுபடுவதன் மூலம் எந்தவொரு வெளிப்புற அதிகாரத்திற்கு கீழ்பட்டு அதற்கு கட்டுப்பட்டிராமல் சுயாதீனமாக இருக்க வேண்டும் (தீத்து 1:5). மூன்றாவதாக, திருச்சபையானது இரண்டு பிரதான அலுவல்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்: மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள்.

மோசேயின் காலத்திலிருந்தே "மூப்பர்கள்" இஸ்ரவேலர் மத்தியில் ஒரு முக்கியமான தலைமை அங்கமாக இருந்தார்கள் (2 சாமுவேல் 5:3; 2 சாமுவேல் 17:4, 15), பிந்தைய வரலாற்றில் ராஜாக்களுக்கு ஆலோசனை வழங்குதல் (1 இராஜாக்கள் 20: 7), ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து மக்கள் பிரதிநிதித்துவம் செய்வது (யாத்திராகமம் 7:17; 24:1, 9; எண்ணாகமம் 11:16, 24-25). பழைய ஏற்பாட்டின் ஆரம்பகால கிரேக்க மொழிபெயர்ப்பாகிய செப்டுவஜின்ட் கிரேக்க வார்த்தையான பிரஸ்புட்டேரோஸ் என்னும் சொல்லை "மூப்பர்" என்பதற்கு பயன்படுத்தியது. புதிய ஏற்பாட்டில் அதே கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்படிருக்கிறது, இதுவும் "மூப்பர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருச்சபைத் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய மூப்பர்களைக் குறித்து புதிய ஏற்பாடு பலமுறை குறிப்பிடுகிறது (அப்போஸ்தலர் 14:23; 15:2; 20:17; தீத்து 1:5; யாக்கோபு 5:14) , பயன்படுத்தப்பட்ட வார்த்தையும் பொதுவாக பன்மையிலேயே காணப்படுகிறது. ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் சில காரணங்களுக்காக ஒரு மூப்பர் தனித்து நிற்கும் நிகழ்வைக் குறிக்கிறது (1 தீமோத்தேயு 5:1, 19). எருசலேம் திருச்சபையில், மூப்பர்கள் அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து தலைமைத்துவத்தின் பாகமாக இருந்தனர் (அப்போஸ்தலர் 15:2-16: 4).

மூப்பரின் நிலைப்பாடு எப்பிஸ்கோப்போஸ் என்ற நிலைக்கு சமமானதாக இருந்தது என்று காண்கிறோம், அதாவது "கண்காணி" அல்லது "பிஷப்" (அப்போஸ்தலர் 11:30; 1 தீமோத்தேயு 5:17) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "மூப்பர்" என்கிற வார்த்தை அலுவலின் கண்ணியத்தைக் குறிக்கலாம், அதே நேரத்தில் "பிஷப் / கண்காணி" என்பது அதன் அதிகாரத்தையும் கடமைகளையும் விளக்குகிறது (1 பேதுரு 2:25; 5: 1-4). பிலிப்பியர் 1: 1-ல் பவுல் கண்காணிகளையும் உதவிக்காரர்களையும் வாழ்த்துகிறார், ஆனால் மூப்பர்களைப் பற்றி குறிப்பிடுவதில்லை, ஏனென்றால் மூப்பர்களும் இவர்களும் ஒன்றே. அவ்வாறே, 1 தீமோத்தேயு 3:2, 8 கண்காணிகள் மற்றும் உதவிக்காரர்களின் தகுதிகளைத் தருகிறது, ஆனால் மூப்பர்கள் அல்ல. தீத்து 1:5-7 இந்த இரு சொற்களையும் ஒன்றிணைத்து கூறுவதாக தோன்றுகிறது.

டையக்கனோஸ் என்னும் சொல்லில் இருந்து வருகிற “உதவிக்காரர்” என்ற பதவிக்கு, "அழுக்கின் மூலம்" என்று அர்த்தம், இது சபையின் ஒரு ஊழிய தலைமத்துவமாகும். மூப்பர்களின் தகுதிகள் அநேகம் உதவிக்காரர்களின் தகுதிகளோடு ஒன்றிப்போனாலும் (1 தீமோத்தேயு 3:8-13) இருவரும் தனித்தனியாகவே இருக்கிறார்கள். அப்போஸ்தலர் 6-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, சபைக்கு தேவையுள்ள விஷயங்களில் உதவுகிறது.

ஒரு திருச்சபையின் ஒரு மனிதத் தலைவரைப் பற்றி "போதகர்" என்று மொழிபெயர்க்கப்பட்ட பொய்மன் என்னும் கிரேக்க சொல் எபேசியர் 4:13-ல் தான் புதிய ஏற்பாட்டில் ஒரே ஒருமுறை மட்டுமே காணப்படுகிறது: "சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்." இங்கே ஒற்றுமையாக, ஒரு போதகர்-ஆசிரியரைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட உள்ளூர் திருச்சபை ஆவிக்குரிய மேய்ப்பராக இருந்த போதகர் ஒரு ஆசிரியராக இருக்கிறார்.

மேற்கண்ட வேதப்பகுதியிலிருந்து மூப்பர்கள் எப்பொழுதுமே பன்மையில் தான் இருக்கிறார்கள் என்பதாக தோன்றுகிறது, ஆனால் அது குறிப்பிட்ட மூப்பர்களுக்கு தேவன் அளிக்கிற போதிக்கும் வரத்தையும் மற்றவர்களுக்கு நிர்வகிக்கும் வரத்தையும், ஜெபத்தையும், இன்னும் பல அளிப்பதை எதிர்மறைப் படுத்தவில்லை (ரோமர் 12:3-8; எபேசியர் 4:11). தேவன் அவர்களை அந்த ஊழியத்தில் ஈடுபடுத்தும்படி அழைப்பு விடுத்ததையும் எதிர்மறைப் படுத்தவில்லை (அப்போஸ்தலர் 13:1). இவ்வாறு, ஒரு மூப்பர் "போதகர்" என்கிற நிலையில் வெளிப்படலாம், மற்றொருவர் பார்வையாளர்களில் பெரும்பான்மையினரைச் சந்திப்பார், ஏனெனில் அவர் இரக்கத்தின் பரிசைக் கொண்டிருப்பார், அதே நேரத்தில் நிறுவன விவரங்களை கையாள்வதற்கான உணர்வில் மற்றொருவர் ஆட்சி செய்யலாம். ஒரு போதகர் மற்றும் உதவிக்காரர் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட பல திருச்சபைகள் மூப்பர்களின் பன்மையைச் செயல்படுத்துகின்றன, அவை சபையின் சுமைகளை பகிர்ந்துகொண்டு சில முடிவெடுப்பதில் ஒன்றாக வேலை செய்கின்றனர். வேதவசனத்தில் பல சபை சார்ந்த முடிவுகளும் உள்ளன. (எபி. 1:23, 26, 6: 3, 5, 15:22, 30; 2 கொரிந்தியர் 8:19) . ஆகவே, சபை மக்கள் ஆளுகைக்கு உட்பட்ட சபை என்பது மூப்பர்கள் அல்லது சபைத்தலைவர்களுடைய உள்ளீடுகளுக்கு அல்ல.

சுருக்கமாக, வேதாகமம் ஒரு தலைமை பொறுப்பை வகிக்கும் நபர்களை மூப்பர்கள் (ஆயர்கள் / கண்காணிகள்), என்று பன்மையில் குறிப்பிடுகிறது. சபையுடன் பணியாற்றும் நபர்களில் ஒருவர் "மேய்ப்பர்" பாத்திரத்தில் பணியாற்றிய மூப்பர்களில் ஒருவர் இருப்பதற்கு இது மூப்பர்களின் இந்த பன்முகத்திற்கு முரணானது அல்ல. தேவன் சிலரை "போதகர் / ஆசிரியர்கள்" என்று அழைக்கிறார் (அப்போஸ்தலர் 13-ல் மிஷனரிகளாக சிலர் அழைக்கப்படுவதுபோல்) அவர்களை சபைக்கு ஈவாக அளிக்கிறார் (எபேசியர் 4:11). இவ்வாறு, ஒரு திருச்சபையில் பல மூப்பர்கள் இருக்கலாம், ஆனால் எல்லா மூப்பர்களும் மேய்ப்புப் பணிக்காக சேவை செய்ய அழைக்கப்படுவதில்லை. ஆனால், மூப்பர்களில் ஒருவர், போதகர் அல்லது "போதிக்கும் மூப்பர்" வேறு மூப்பரை விட முடிவெடுப்பதில் அதிக அதிகாரம் உடையவரில்லை.

English



முகப்பு பக்கம்

சபையின் ஆட்சிமுறையை உருவாக்குவது குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries