settings icon
share icon
கேள்வி

ஒரு கிறிஸ்தவன் கடன்பட்டுப்போகிற காரியத்தைக்குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? ஒரு கிறிஸ்தவன் பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாமா அல்லது கொடுக்கலாமா?

பதில்


அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 13:8-ல், அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் என்று கூறுகிற அறிவுறுத்தல், உரிய காலத்தில் செலுத்தப்படாத எல்லா வகையிலான கடன்களுக்கான தேவனுடைய வெறுப்பை நினைவுபடுத்துகிறது (காண்க சங்கீதம் 37:21). அதே நேரத்தில் வேதாகமம் வெளிப்படையாக எல்லா விதமான கடன்களைக் குறித்தும் கட்டளையிடவில்லை. வேதாகமம் கடனுக்கு விரோதமாக எச்சரிக்கிறது மற்றும் கடனுக்குள் சிக்காதவர்களின் ஒழுக்க நெறியை பாராட்டுகிறது, ஆனால் கடனைத் தடைசெய்யவில்லை. வேதாகமம் கடன் கொடுத்தவர்கள் கடன் பெற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதை கடுமையாக கண்டனம் செய்கிறது, ஆனால் கடனாளியை கண்டனம் செய்கிறதில்லை.

சிலர் கடனுக்கு வட்டி வாங்கலாமா என்று கேட்கின்றனர், ஆனால் கடனுக்கு நியாயமான வட்டி வாங்குவது சரி என்று அநேக நேரங்களில் வேதாகமத்தில் வாசிக்கிறோம் (நீதிமொழிகள் 28:8; மத்தேயு 25:27). பண்டைய இஸ்ரவேலின் நியாயப்பிரமாணம் ஒரு குறிப்பிட்ட வகையினரிடம் மட்டும் கடனுக்கு வட்டி வசூலிக்கக்கூடாது என்று தடைவிதிக்கிறது – அதாவது ஏழைகளிடம் வழங்கப்பட்ட கடனுக்கு வட்டி வாங்குவதை மட்டுமே நியாயப்பிரமாணம் தடைசெய்கிறது (லேவியராகமம் 25:35-38). இந்த நியாயப்பிரமாணம் அநேக சமூக, நிதிநிலை, மற்றும் ஆவிக்குரிய காரியங்களில் தாக்கங்களை கொண்டிருந்தது, ஆனால் இரண்டு காரியங்கள் இங்கு குறிப்பிடுவது தகுதியானவைகள் ஆகும். முதலாவது இந்த நியாயப்பிரமாணம் தரித்திரருடைய நிலமையை இன்னும் மோசமாகாதபடி அவர்களுக்கு உதவியது. வறுமையில் விழுந்ததே பரிதாபத்திற்குரியது ஆகும் மற்றும் உதவியை நாடுவது என்பது இன்னும் அவமானகரமான காரியமாக இருக்கும். ஆனால் கடனை செலுத்துவதோடு நசுக்கக் கூடிய வட்டியையும் செலுத்துவது என்னும் காரியம் தரித்திரருக்கு உதவியாக இருப்பதை விட புண்படுத்துவதாகவே இருக்கும்.

இரண்டாவதாக, நியாயப்பிரமாணம் ஒரு முக்கியமான ஆவிக்குரிய பாடத்தை போதிக்கிறது. தரித்திரருக்கு கொடுத்த கடனுக்கான வட்டியை வாங்காமல் விடுவது கடன் கொடுத்தவரின் கருணையுள்ள செயலாகும். அவர் கடனாக கொடுத்த பணத்தை, கடன் கொடுக்கப்பட்ட காலத்தில் அந்த பணத்தைப் பயன்படுத்த முடியாமல் இழந்திருப்பார். தேவன் தன்னுடைய கிருபை எந்த வித வட்டியும் இல்லாமல் நமக்கு கொடுத்ததற்காக அவருக்கு நன்றியை வெளிப்படுத்த ஒரு உறுதியான வழியாகும். இஸ்ரவேலரை தரித்திரராக அடிமைகளாய் எகிப்த்திலிருந்தபோது தேவன் கிருபையாய் அவர்களை புறப்பட செய்து கானான் தேசத்தை அவர்களுக்கு கொடுத்தது போலவே (லேவியராகமம் 25:38), அவர்களும் தங்களுடைய தரித்திரத்தில் இருக்கும் சகோதரருக்கும் இரக்கம் செய்யவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

கிறிஸ்தவர்களும் இதற்கு ஒத்த சூழலில் தான் இருக்கின்றனர். இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்தெழுதல் தேவனிடத்தில் நம்முடைய பாவத்திற்கான கடனை செலுத்துகிறது. இப்பொழுது நம்முடைய தருணம் நாம் பிறருக்கு, குறிப்பாக சக விசுவாச சகோதரருக்கு அவர்களுடைய பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்தாதபடிக்கு அவர்களுக்கு கடனைக் கொடுத்து உதவ முடியும். இதனோடு தொடர்புடைய இரண்டு கடனாளிகள் மற்றும் அவர்களின் மன்னிக்கும் மனப்பான்மையை பற்றிய உவமையை இயேசு போதித்ததை பார்க்க முடியும் (மத்தேயு 18:23-35).

வேதாகமம் ஒரு போதும் பணத்தை கடனாக வாங்குவதைத் தடைசெய்யவுமில்லை கடிந்துகொள்ளவுமில்லை. கடன் வாங்குவது என்பது இயல்பாகவே ஒரு நல்ல காரியமல்ல என்று வேதாகமத்தின் ஞானம் நமக்கு போதிக்கிறது. கடனானது நமக்கு கடன் கொடுத்தவரிடத்தில் நம்மை அடிமையாக்குகிறது. அதே நேரத்தில் சில வேளைகளில் கடன்படுவது ஒரு “தேவையான தீமை” ஆகும். பணம் ஞானமாய் கையாளப்படுகிற வரையில் மற்றும் செலுத்தக் கூடிய கடன் தொகை சமாளிக்க கூடியாதாக இருக்கிற வரையில், தவிர்க்கமுடியாத முற்றிலும் அவசியமானால் மட்டும் ஒரு கிறிஸ்தவன் பாரமான நிதிக்கடனை வங்கலாம்.

English



முகப்பு பக்கம்

ஒரு கிறிஸ்தவன் கடன்பட்டுப்போகிற காரியத்தைக்குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? ஒரு கிறிஸ்தவன் பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாமா அல்லது கொடுக்கலாமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries