settings icon
share icon
கேள்வி

வேதாகமம் முதலாளித்துவம் யாவை?

பதில்


அகராதி முதலாளித்துவத்தை இவ்வாறு வரையறுக்கிறது, "மூலதனப் பொருட்களின் தனியார் அல்லது கார்ப்பரேட் உரிமையால் வகைப்படுத்தப்படும் ஒரு பொருளாதார அமைப்பு, தனியார் முடிவுகளால் தீர்மானிக்கப்படும் முதலீடுகள் மற்றும் விலைகள், உற்பத்தி மற்றும் பொருட்களின் விநியோகம் ஆகியவற்றால் முக்கியமாக தடையில்லா சந்தையின் போட்டியால் தீர்மானிக்கப்படுகிறது." வேதாகமம் முதலாளித்துவத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அது பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் பேசுகிறது. உதாரணமாக, நீதிமொழிகள் புத்தகத்தின் முழுப் பகுதிகளும், இயேசுவின் பல உவமைகளும் பொருளாதார விஷயங்களைக் கையாளுகின்றன. அதுபோல, ஆஸ்தியைக் குறித்த நமது மனப்பான்மை என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் ஒரு கிறிஸ்தவர் தனது பணத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்கிறோம். சமூகத்தில் ஒரு பொருளாதார அமைப்பின் சாத்தியமான வெற்றி மற்றும் தோல்வியை மதிப்பீடு செய்ய உதவும் நமது மனித இயல்பு பற்றிய விளக்கத்தையும் வேதாகமம் நமக்கு வழங்குகிறது.

பொருளாதாரம் என்பது நமது அன்றாட வாழ்க்கையின் பெருமளவில் நடைபெறும் ஒரு பகுதி என்பதால், அதை நாம் வேதாகமக் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும். நாம் வேதாகமத்தை நமது கட்டமைப்பாகப் பயன்படுத்தும் போது, மனித ஆற்றலை விடுவிக்கும் மற்றும் மனித பாவத்தை கட்டுப்படுத்தும் ஒரு அரசாங்கத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மாதிரியை உருவாக்க ஆரம்பிக்கலாம். ஆதியாகமம் 1:28-ல், நாம் பூமியை ஆண்டுகொண்டு அதன் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று தேவன் கூறுகிறார். இதன் ஒரு அம்சம் என்னவென்றால், மனிதர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடிய சொத்துக்களை வைத்திருக்க முடியும் என்பதாகும். நம்மிடம் விருப்பப்படித் தேர்ந்தெடுத்தல் மற்றும் தனியார் சொத்துரிமைகள் இருப்பதால், சரக்குகள் மற்றும் சேவைகள் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு தடையற்ற சந்தையில் இந்த தனியார் சொத்து உரிமைகளை பரிமாறிக்கொள்ளும் சுதந்திரம் நமக்கு இருக்க வேண்டும் என்று நாம் கருதலாம்.

இருப்பினும், பாவத்தின் அழிவுகளால், உலகின் பல பகுதிகள் சிதைவு மற்றும் பற்றாக்குறை இடங்களாக மாறிவிட்டன. மேலும், தேவன் தமது படைப்பின் மீது நமக்கு ஆதிக்கம் செலுத்த அதிகாரம் கொடுத்திருந்தாலும், நம் வசம் உள்ள மூலங்களுக்கு நல்ல பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும். வரலாற்று ரீதியாக, கட்டற்ற நிறுவன அமைப்பு, இதுவரை உருவாக்கப்பட்ட எந்தப் பொருளாதார அமைப்பிலும் மிகப் பெரிய அளவிலான சுதந்திரத்தையும் மிகவும் பயனுள்ள பொருளாதார ஆதாயங்களையும் வழங்கியுள்ளது. அப்படியிருந்தும், முதலாளித்துவத்தை ஆதரிக்க முடியுமா என்று கிறிஸ்தவர்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். சாராம்சத்தில், சுதந்திரமான முதலாளித்துவ அமைப்பில் சுயநலம் வெகுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் சுவிசேஷம் கூட நமது சுயநலத்திற்கு முறையிடுகிறது, ஏனென்றால் இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்வது நமது சுயநலத்தில் உள்ளது, இதனால் நமது நித்திய விதி உறுதிசெய்யப்படும்.

ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில், தனிப்பட்ட ஆஸ்தியின் அடிப்படையானது நாம் தேவனுடைய சாயலில் உருவாக்கப்படுவதில் இருக்கிறது. சந்தை அமைப்பில் நாம் பரிமாறிக்கொள்ளக்கூடிய ஆஸ்தியின் மீது நாம் தேர்வு செய்யலாம். ஆனால் சில சமயங்களில் தனிச் சொத்துக்கான ஆசை நம் பாவத்திலிருந்து வளர்கிறது. அதற்கேற்ப, நம்முடைய பாவ சுபாவமும் சோம்பேறித்தனம், அலட்சியம், சோம்பல் ஆகியவற்றை உண்டாக்குகிறது. ஒவ்வொரு நபரும் தனது சொந்த உற்பத்தித்திறனைக் கருத்தில் கொண்டால் பொருளாதார நீதியை சிறப்பாக அடைய முடியும் என்பதே உண்மை.

வரலாற்று ரீதியாக, முதலாளித்துவம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது பொருளாதார ஆற்றலை விடுவித்துள்ளது. இது ஒரு பெரிய அளவிலான அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான அடித்தளத்தையும் வழங்கியுள்ளது. அரசாங்கம் சந்தைகளை கட்டுப்படுத்தாத போது, தொழில் முனைவோர் நடவடிக்கைகளில் ஈடுபட பொருளாதார சுதந்திரம் உள்ளது. முதலாளித்துவம் ஒரு பெரிய அளவிலான அரசியல் சுதந்திரத்திற்கும் வழிவகுத்தது, ஏனெனில் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கை நாம் ஒருமுறை மட்டுப்படுத்தினால், மற்ற பகுதிகளில் அரசாங்கத்தின் நோக்கத்தை கட்டுப்படுத்துகிறோம். மிகப் பெரிய அரசியல் சுதந்திரம் உள்ள பெரும்பாலான நாடுகளில் பொதுவாக பொருளாதார சுதந்திரம் அதிகமாக இருப்பது தற்செயலானது அல்ல.

இருப்பினும், முதலாளித்துவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கிறிஸ்தவர்கள் அங்கீகரிக்க முடியாது மற்றும் அங்கீகரிக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக, முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் பலர் வேதாகம பரிபூரணத்தின் கருத்துக்கு எதிரான பயனெறிமுறைக் கோட்பாடு எனப்படும் ஒரு பார்வையைக் கொண்டுள்ளனர். நிச்சயமாக, இந்த தத்துவத்தை நாம் நிராகரிக்க வேண்டும். மேலும், சில பொருளாதார மற்றும் தார்மீக பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஏகபோகங்கள் மற்றும் மாசுபாட்டின் துணை தயாரிப்பு போன்ற முதலாளித்துவத்தின் சில சரியான பொருளாதார விமர்சனங்கள் இருந்தாலும், இவை வரையறுக்கப்பட்ட அரசாங்க கட்டுப்பாட்டின் மூலம் கட்டுப்படுத்தப்படலாம். முதலாளித்துவம் புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்தப்படும் போது, அது அதன் ஜனங்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார செழுமையையும் பொருளாதார சுதந்திரத்தையும் உருவாக்குகிறது.

முதலாளித்துவத்திற்கு எதிரான முக்கிய தார்மீக வாதங்களில் ஒன்று பேராசை ஆகும், அதனால்தான் பல கிறிஸ்தவர்கள் தடையற்ற நிறுவன அமைப்பு பற்றி உறுதியாக தெரியாமல் இருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் விமர்சகர்கள் இந்த அமைப்பு ஜனங்களை பேராசை கொண்டவர்களாக மாற்றுகிறது என்று வாதிடுகின்றனர். ஆனால் முதலாளித்துவம் ஜனங்களை பேராசைக்குள்ளாக்குகிறதா அல்லது முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார சுதந்திரத்தை தங்கள் நோக்கங்களை அடையப் பயன்படுத்தும் பேராசைக்காரர்கள் நம்மிடம் ஏற்கனவே இருக்கிறார்களா என்று நாம் கேட்க வேண்டும். மனித சுபாவத்தின் வேதாகம விளக்கத்தின் வெளிச்சத்தில் (எரேமியா 17:9), பிந்தையது அதிக வாய்ப்புள்ளது. ஜனங்கள் பாவிகள் மற்றும் சுயநலவாதிகள் என்பதால், சிலர் தங்கள் பேராசையைத் திருப்திப்படுத்த முதலாளித்துவ அமைப்பைப் பயன்படுத்தப் போகிறார்கள். ஆனால் அது முதலாளித்துவத்தின் மீதான விமர்சனம் அல்ல, அது மனித நிலையை உணர்தல் ஆகும். முதலாளித்துவத்தின் குறிக்கோள் அல்லது நோக்கம் கெட்டவர்களை மாற்றுவது அல்ல, அவர்களிடமிருந்து நம்மைக் காப்பதுதான். முதலாளித்துவம் என்பது கெட்டவர்கள் குறைந்த தீங்கு செய்யக்கூடிய ஒரு அமைப்பாகும், அதே சமயத்தில் நல்லவர்கள் நல்ல செயல்களைச் செய்ய சுதந்திரம் உண்டு. முதலாளித்துவம் முற்றிலும் தார்மீக நபர்களுடன் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் அது சுயநலம் மற்றும் பேராசை கொண்டவர்களுடன் போதுமான அளவு செயல்படுகிறது.

சுயவிருப்பத்திற்கும் சுயநலத்திற்கும் இடையே வித்தியாசம் இருப்பதை உணர வேண்டியது அவசியம். எல்லா ஜனங்களுக்கும் சுயவிருப்பங்கள் உள்ளன, அவை சுயநலம் இல்லாத வழிகளில் செயல்பட முடியும். உதாரணமாக, ஒரு வேலையைத் தேடி அடைவதும், வருமானம் ஈட்டுவதும் நம் சுயவிருப்பம், அதனால் நம் குடும்பத்தை நாம் போஷித்து ஆதரிக்க முடியும். அதை சுயநலம் இல்லாத வழிகளில் நாம் செய்யலாம். இதற்கு மாறாக, சோசலிசம் போன்ற பிற பொருளாதார அமைப்புகள் மனித இயல்பின் வேதாகம வரையறைகளை புறக்கணிக்கின்றன. இதன் விளைவாக, பொருளாதார சக்தியை மையப்படுத்தவும், பேராசை பிடித்த சிலரின் கைகளில் அதிகாரத்தை குவிக்கவும் அனுமதிக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் நம் வாழ்வில் கொண்டுள்ள செல்வாக்கைப் பற்றி புகார் கூறுபவர்கள் சோசலிச மாற்றீட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும், அங்கு ஒரு சில அரசாங்க அதிகாரத்துவம் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்துகிறது.

பேராசை சில நேரங்களில் முதலாளித்துவ அமைப்பில் தெளிவாகத் தெரிந்தாலும், அது அமைப்பின் காரணமாக அல்ல—பேராசை மனிதனின் பாவ இயல்பின் ஒரு பகுதியாக இருப்பதால் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார அமைப்பை மாற்றுவதில் தீர்வு இல்லை, மாறாக இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் வல்லமையின் மூலம் மனிதனின் இருதயத்தை மாற்றுவதில் உள்ளது.

English



முகப்பு பக்கம்

வேதாகமம் முதலாளித்துவம் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries