settings icon
share icon
கேள்வி

உறவுகளில் இருக்கும் வயது வித்தியாசங்களைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?

பதில்


உறவுகளில் இருக்கும் வயது வித்தியாசங்கள் என்ற சொற்றொடரை நீங்கள் வேதாகமத்தில் தேடினால், நீங்கள் சரியாக 0 முடிவுகளைக் காண்பீர்கள். உண்மையில், உறவைப் பொருத்தமட்டில் ஒரு நபரின் வயது குறித்து வேதத்தில் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது, இது வேதாகமத்தில் திருமணமான தம்பதிகளுக்கு உண்மையாக உள்ளது. வேதாகமத்தில் தம்பதிகளின் வயது வித்தியாசங்கள் நமக்குத் தெரியாது.

ஆபிரகாமும் சாராவும் விதிவிலக்கு; இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் நமக்குத் தெரியும். ஆபிரகாமும் சாராவும் பல தேசங்களின் ஆரம்பமாக இருப்பார்கள் என்று தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணினபோது, “அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு?’’ (ஆதியாகமம் 17:17). ஆபிரகாமின் மகிழ்ச்சியான கேள்விகளின் அடிப்படையில், அவருக்கும் சாராவுக்கும் பத்து வயது வித்தியாசம் இருந்தது-பெரிய வயது வித்தியாசம் இல்லை, ஆனால் குறிப்பிடத்தக்கது. வேதாகமத்தில் இருவரின் வயதும் கொடுக்கப்பட்ட வேறு தம்பதிகள் இல்லை.

போவாஸ் ரூத்தை விட மிகவும் வயதானவர் என்று அடிக்கடி கருதப்படுகிறது. இது ரூத் 3-ல் உள்ள ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. ரூத் போவாஸிடம் தன் சுதந்திரவாளி-மீட்பாளராக இருக்கும்படி கேட்டபோது, போவாஸ் பதிலளித்தார், “மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது" (வசனம் 10). ரூத், மோவாபிலோ அல்லது இஸ்ரேலிலோ தனது சொந்த வயதிற்கு நெருக்கமானவர்களிடையே கணவனைத் தேடுவதற்குப் பதிலாக, யூத வழக்கத்தைப் பின்பற்றி தன்னை மிகவும் முதிர்ந்த போவாஸின் பாதுகாப்பில் வைக்க முயன்றார் என்பது இதன் உட்குறிப்பு. யூதர்களின் மிஷ்னாவில் போவாஸின் வயதை 80 என்றும் ரூத்தின் வயது 40 என்றும் நிர்ணயித்துள்ளது (ரூத் ரப்பா 7:4; ரூத் சூடா 4:13), ஆனால் இது முற்றிலும் ஒரு ஊகம் மட்டுமே, ஏனெனில் வேதாகமம் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை வெளிப்படுத்தவில்லை.

யோசேப்பு மரியாளை விட மிகவும் வயதானவர் என்று பொதுவாக கருதப்படுகிறது. இருப்பினும், அதைக் குறிப்பிடுவதற்கு வேதாகமத்தில் முற்றிலும் ஆதாரம் எதுவும் இல்லை.

இந்தப் பிரச்சினையில் வேதாகமத்தின் மௌனத்தைக் கருத்தில் கொண்டு, முடிவில், உறவுகளில் வயது வேறுபாடுகள் தேவனுக்கு ஒரு பெரிய கவலை இல்லை என்று நாம் கூறலாம். நிச்சயமாக, திருமணத்தில் வயது முக்கியமானதாக இருக்கலாம், ஆனால் இரட்சிப்பு, ஆவிக்குரிய முதிர்ச்சி, இணக்கத்தன்மை போன்ற பிற காரியங்களை விட இது மிகவும் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனங்கள் வயதாகும்போது, வயது வித்தியாசங்கள் குறைவாகவும் குறைவாகவும் இருக்கும். வெளிப்படையாக, 40 வயதான ஒருவர் 18 வயது இளைஞனை திருமணம் செய்துகொள்வது சிலருடைய புருவங்களை உயர்த்தும், ஆனால் 82 வயதான ஒரு 60 வயது முதியவரை திருமணம் செய்வது பற்றி யாரும் இருமுறை யோசிப்பதில்லை.

நாம் திருமணம் செய்து கொள்ளும் நபர் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் (ஆதியாகமம் 2:21-25), மேலும் அவர் கிறிஸ்துவில் விசுவாசியாக இருக்க வேண்டும் (2 கொரிந்தியர் 6:14). மற்றும், நிச்சயமாக, நாம் சரியான காரணங்களுக்காக திருமணம் செய்ய வேண்டும் (காமம் மற்றும் பேராசை முறையற்ற காரணங்கள்). அந்த வழிகாட்டுதல்களுக்கு அப்பால், நாம் யாரை திருமணம் செய்வது என்பது குறித்து நமக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் உள்ளது. வயது வித்தியாசங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம், வித்தியாசம் அதிகமாக இருக்கும்போது நாம் நிச்சயமாக தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்க வேண்டும் (யாக்கோபு 1:5), ஆனால் வேதாகமம் வயது வித்தியாசங்களை தார்மீக அல்லது ஆவிக்குரிய பிரச்சினையாகக் கருதவில்லை.

English



முகப்பு பக்கம்

உறவுகளில் இருக்கும் வயது வித்தியாசங்களைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries