settings icon
share icon

மத்தேயு எழுதின சுவிசேஷம்

எழுத்தாளர்: இந்த சுவிசேஷப் புத்தகம் மத்தேயு எழுதின சுவிசேஷம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது அதே பெயரில் உள்ள மத்தேயு என்னும் அப்போஸ்தலரால் எழுதப்பட்டதாகும். ஒரு காலத்தில் வரி வசூலித்த ஒரு மனிதரிடம் எதிர்பார்க்கப்படுவதுதான் இந்த புத்தகத்தின் பாணியாகும். மத்தேயு கணக்கியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் (18:23-24; 25:14-15). புத்தகம் மிகவும் ஒழுங்காகவும் சுருக்கமாகவும் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. காலவரிசைப்படி எழுதுவதற்கு பதிலாக, மத்தேயு இந்த சுவிசேஷத்தை ஆறு கலந்துரையாடல்கள் மூலம் ஏற்பாடு செய்கிறார்.

வரி வசூலிப்பவர் என்ற முறையில், மத்தேயு ஒரு திறமையைக் கொண்டிருந்தார், அது அவருடைய எழுத்தை கிறிஸ்தவர்களுக்கு மிகவும் உற்சாகப்படுத்துகிறது. வரி வசூலிப்பவர்கள் சுருக்கெழுத்தின் வடிவத்தில் எழுத முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இதன் பொருள் மத்தேயு ஒரு நபரின் வார்த்தைகளை அவர்கள் பேசும்போது, அதே வார்த்தைக்கான வார்த்தையை துல்லியமாக பதிவு செய்ய முடியும் என்பதாகும். இந்த திறன் என்பது மத்தேயுவின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவை என்பது மட்டுமல்ல, கிறிஸ்துவின் சில பிரசங்கங்களின் உண்மையான பிரதியெடுத்தலையும் குறிக்க வேண்டும். உதாரணமாக, 5-7 வரையிலுள்ள அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, மலைப்பிரசங்கம், நிச்சயமாக அந்த சிறந்த மாபெரும் செய்தியின் சரியான மற்றும் தெளிவான பதிவாகும்.

எழுதப்பட்ட காலம்: ஒரு அப்போஸ்தலராக, மத்தேயு இந்த புத்தகத்தை திருச்சபையின் ஆரம்ப காலத்தில் எழுதினார், அநேகமாக கி.பி. 50-ல் இந்த புத்தகத்தை அவர் எழுதினார். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் யூத மதத்திற்கு மதமாற்றம் செய்த காலமாக இது இருந்தது, எனவே இந்த நற்செய்தியில் யூதர்களின் பார்வையில் மத்தேயு அதிக கவனம் செலுத்துவது புரிந்துகொள்ளத்தக்கது.

எழுதப்பட்டதன் நோக்கம்: இயேசு கிறிஸ்து வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை யூதர்களுக்கு நிரூபிக்க மத்தேயு விரும்புகிறார். வேறு எந்த நற்செய்தியையும் விட, யூத தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார் என்பதைக் காட்ட பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறார் அப்போஸ்தலனாகிய மத்தேயு. மத்தேயு தாவீதிடமிருந்து இயேசுவின் வம்சாவளியை/பரம்பரையை விரிவாக விவரிக்கிறார், மற்றும் யூதர்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும் நிலையில் பல வகையான உருவகப் பேச்சுகளைப் பயன்படுத்துகிறார். நற்செய்தி விவரணங்களை சொல்வதற்கான அவரது நுணுக்கமான அணுகுமுறையின் மூலம் மத்தேயுவின் மக்கள் மீதுள்ள கொண்டுள்ள அவருடைய அன்பும் அக்கறையும் தெளிவாகத் தெரிகிறது.

திறவுகோல் வசனங்கள்: மத்தேயு 5:17: “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.”

மத்தேயு 5:43-44: “உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.”

மத்தேயு 6:9-13: “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.”

மத்தேயு 16:26: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”

மத்தேயு 22:37-40: “இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.”

மத்தேயு 27:31: “அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.”

மத்தேயு 28:5-6: “தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.”

மத்தேயு 28:19-20: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.”

சுருக்கமான திரட்டு: முதல் இரண்டு அதிகாரங்களில் கிறிஸ்துவின் வம்சாவளி, பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்க்கை குறித்து மத்தேயு கலந்துரையாடுகிறார். அங்கிருந்து, புத்தகம் இயேசுவின் ஊழியத்தைப் பற்றி கலந்துரையாடுகிறது. கிறிஸ்துவின் போதனைகளின் விளக்கங்கள் 5 முதல் 7 அதிகாரங்களில் உள்ள மலைப்பிரசங்கம் போன்ற “சொற்பொழிவுகளை” சுற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. 10-ஆம் அதிகாரம் சீஷர்களின் ஊழியம் மற்றும் நோக்கத்தை உள்ளடக்கியது; 13-வது அதிகாரம் உவமைகளின் தொகுப்பு; 18-வது அதிகாரம் திருச்சபையைப் பற்றி கலந்துரையாடுகிறது; 23-ஆம் அதிகாரம் மாய்மாலத்தனம் மற்றும் எதிர்காலம் பற்றிய ஒரு சொற்பொழிவைத் தொடங்குகிறது. 21 முதல் 27 வரையிலுள்ள அதிகாரங்கள் இயேசுவைக் கைது செய்தல், சித்திரவதை செய்தல் மற்றும் சிலுவையில் மரணதண்டனை அடைதல் பற்றி மிகவும் தெளிவாக விரிவாக விவாதிக்கின்றன. இறுதி அதிகாரம் (28-ஆம் அதிகாரம்) இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் அவர் அளிக்கும் பிரதான ஆணையத்தை விவரிக்கிறது.

இணைப்புகள்: இயேசு கிறிஸ்துவை இஸ்ரவேலின் ராஜாவாகவும் மேசியாவாகவும் முன்வைப்பதே மத்தேயுவின் பிரதான நோக்கம் என்பதால், அவர் மற்ற மூன்று சுவிசேஷ புத்தகங்களின் எழுத்தாளர்களைக் காட்டிலும் பழைய ஏற்பாட்டில் இருந்து அதிக்கப்படியான காரியங்களை மேற்கோள் காட்டுகிறார். அப்போஸ்தலனாகிய மத்தேயு பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன பத்திகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட முறைகள் மேற்கோள் காட்டி, இயேசு அவற்றை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை நிரூபிக்கிறார். அவர் இயேசுவின் வம்சாவளியைக் கொண்டு தனது நற்செய்தியைத் தொடங்குகிறார், யூதர்களின் முற்பிதாக்களான ஆபிரகாமிடம் இருந்து துவங்குகிறார். அங்கிருந்து, மத்தேயு தீர்க்கதரிசிகளிடமிருந்து விரிவாக மேற்கோள் காட்டுகிறார், "தீர்க்கதரிசி (கள்) மூலம் பேசப்பட்டதைப் போல" (மத்தேயு 1:22-23, 2:5-6, 2:15, 4:13-16, 8:16-17, 13:35, 21:4-5). இந்த வசனங்கள் பெத்லகேமில் (மீகா 5:2), கன்னிப் பிறப்பின் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களைக் குறிக்கின்றன (ஏசாயா 7:14), ஏரோது இறந்தபின் எகிப்திலிருந்து அவர் திரும்பினது (ஓசியா 11:1), புறஜாதியினருக்கு அவர் செய்த ஊழியம் (ஏசாயா 9:1-2; 60:1-3), சரீரம் மற்றும் ஆத்துமா இரண்டையும் அவர் அற்புதமாகக் குணப்படுத்துகிறார் (ஏசாயா 53:4), அவர் உவமைகளில் பேசுதல் (சங்கீதம் 78:2), எருசலேமுக்கு அவர் வெற்றிகரமாக பவனி வந்து நுழைதல் (சகரியா 9:9) போன்றவைகள் இதில் அடங்கும்.

நடைமுறை பயன்பாடு: மத்தேயு நற்செய்தி கிறிஸ்தவத்தின் முக்கிய போதனைகளுக்கு ஒரு சிறந்த அறிமுகமாகும். தர்க்கரீதியான திட்டவரைவு பாணி பல்வேறு தலைப்புகளின் விவாதங்களைக் கண்டறிவதை எளிதாக்குகிறது. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாக கிறிஸ்துவின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள மத்தேயு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மத்தேயுவின் கருத்தில் கொண்ட வாசகர்கள் அவருடைய சக யூதர்கள் ஆகும், அவர்களில் பலர் - குறிப்பாக பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் ஆகும் - இயேசுவை தங்கள் மேசியாவாக ஏற்றுக்கொள்வதற்கு பிடிவாதமாக மறுத்துவிட்டனர். பழைய ஏற்பாட்டைப் பல நூற்றாண்டுகள் படித்து படித்து அதில் ஊறிப்போனவர்களாக அவர்கள் இருந்தபோதிலும், இயேசு யார் என்ற உண்மையை அறிந்துகொள்ளும் விஷயத்தில் சரிவர புரிந்துகொள்ள முடியாமல் அவர்களின் கண்கள் கண்மூடி மறைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவர்களுடைய கடினமான இருதயங்களுக்காகவும், அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்ததாகக் கருதப்பட்டவரை அடையாளம் காண மறுத்ததற்காகவும் இயேசு அவர்களை வன்மையாகக் கண்டித்தார் (யோவான் 5:38-40). அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி விளங்கும் ஒரு மேசியாவையே விரும்பினர், அவர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை நிறைவேற்றி, அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைமட்டுமே செய்தார்கள். நம்முடைய சொந்த சொற்களில் நாம் எத்தனை முறை தேவனை நாடுகிறோம்? நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகக் கருதப்படும் பண்புகளை, அவரின் அன்பு, இரக்கம், கிருபை போன்றவற்றை மட்டுமே அவரிடம் குறிப்பிடுவதன் மூலம் மற்றும் அதேவேளையில் அவருடைய கோபம், நியாயம் மற்றும் பரிசுத்த கோபத்தையும் நிராகரிக்க வேண்டாமா? பரிசேயர்களின் அதே தவறை நாமும் செய்யத் துணியவில்லை, தேவனை நம்முடைய சாயலில் படைத்து, பின்னர் அவர் நம்முடைய தரத்திற்கு ஏற்ப வாழ்வார் என்று எதிர்பார்க்கிறோம். அத்தகைய தேவன் ஒரு விக்கிரகத்தைத் தவிர வேறில்லை. நம்முடைய ஆராதனைக்கும் கீழ்ப்படிதலுக்கும் உத்தரவாதமளிக்க தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான தன்மை மற்றும் அடையாளம் பற்றிய போதுமான தகவல்களை வேதாகமம் நமக்கு அளிக்கிறது.

English



முகப்பு பக்கம்

மத்தேயு எழுதின சுவிசேஷம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries