settings icon
share icon
கேள்வி

தேவன் சர்வவியாபி என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


ஒம்னி என்ற முன்னொட்டு லத்தீன் மொழியில் "அனைத்து" என்று பொருள்படும். எனவே, தேவன் சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று கூறுவது தேவன் எங்கும் இருக்கிறார் என்று கூறுவதாகும். பல மதங்களில், தேவன் எங்கும் நிறைந்தவராகக் கருதப்படுகிறார், அதேசமயம் யூத மதம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய இரண்டிலும், இந்தக் கண்ணோட்டம் தேவனுடைய எல்லைக்கடந்த நிலை மற்றும் அருகில் உள்ள நிலைக்கு உட்பட்டது ஆகும். தேவன் படைப்பின் (பாந்தீயிசம்) கட்டமைப்பில் முழுமையாக மூழ்கவில்லை என்றாலும், அவர் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.

எல்லா சிருஷ்டிப்புகளிலும் தேவனுடைய பிரசன்னம் தொடர்ச்சியாக உள்ளது, இருப்பினும் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு ஒரே நேரத்தில் அது வெளிப்படுத்தப்படாமல் போகலாம். சில சமயங்களில், அவர் ஒரு சூழ்நிலையில் சுறுசுறுப்பாக இருக்கக்கூடும், அதே நேரத்தில் அவர் வேறு சில பகுதிகளில் வேறு சூழ்நிலையில் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். தேவன் ஒரு நபருக்கு வெளிப்படையான முறையில் (சங்கீதம் 46:1; ஏசாயா 57:15) இருக்க முடியும் என்பதையும், மேலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் சிருஷ்டிப்பின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இருக்கிறார் என்பதையும் (சங்கீதம் 33:13-14) வேதாகமம் வெளிப்படுத்துகிறது. சர்வவியாபி என்பது நேரம் மற்றும் இடத்தின் அனைத்து வரம்புகளிலும் இருப்பதற்கான தேவனின் முறையாகும். தேவன் எல்லா நேரத்திலும் இடத்திலும் இருந்தாலும், தேவன் எந்த நேரத்திலும் அல்லது இடத்திலும் மட்டுப்படுத்தப்படவில்லை. தேவன் எல்லா இடங்களிலும் மற்றும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறார். எந்த மூலக்கூறோ அல்லது அணுத் துகளோ தேவன் அதற்கு முழுமையாக இல்லாதபடிக்கு மிகச் சிறியதாக இல்லை, மற்றும் எந்த விண்மீன்களின் பேரண்டமும் தேவன் அதைச் சுற்றி வரமுடியாதபடிக்கு பெரியதுமில்லை. ஆனால் நாம் சிருஷ்டிப்பை அகற்றினால், தேவன் அதை இன்னும் அறிந்திருப்பார், ஏனென்றால் அவை உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லா சாத்தியக்கூறுகளையும் அவர் அறிவார்.

தேவன் இயற்கையாகவே பொருட்களின் இயற்கை ஒழுங்கின் ஒவ்வொரு அம்சத்திலும், ஒவ்வொரு விதத்திலும், நேரத்திலும் இடத்திலும் இருக்கிறார் (ஏசாயா 40:12; நாகூம் 1:3). மனித விவகாரங்களின் வருங்கால வழிகாட்டியாக வரலாற்றில் ஒவ்வொரு நிகழ்விலும் தேவன் வேறு விதமாக இருக்கிறார் (சங்கீதம் 48:7; 2 நாளாகமம் 20:37; தானியேல் 5:5-6). தேவன் தனது பெயரை அழைப்பவர்களுக்கும், மற்றவர்களுக்காகப் பரிந்து பேசுவோருக்கும், தேவனை வணங்குகிறவர்களுக்கும், மன்றாடுபவர்களுக்கும், மன்னிப்புக்காக மனமுவந்து ஜெபிப்பவர்களுக்கும் விசேஷித்த வழியில் இருக்கிறார் (சங்கீதம் 46:1). உச்சபட்சமாக, அவர் தனது குமாரன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் (கொலோசெயர் 2:19) நபராக ஆள்தன்மையுள்ளவராய் இருக்கிறார், மேலும் பூமியை உள்ளடக்கிய உலகளாவிய திருச்சபையில் விசித்திரமாய் இருக்கிறார் மற்றும் அதற்கு எதிராக எந்த பாதாளத்தின் வாசல்களும் மேற்கொள்ளுவதில்லை.

மனித மனதின் வரம்புகளால் தேவனுடைய சர்வஞானம் வெளிப்படையான முரண்பாடுகளை அனுபவிப்பது போல, தேவனுடைய சர்வ வியாபித்த தன்மையும் பாதிக்கப்படுகிறது. இந்த முரண்பாடுகளில் ஒன்று முக்கியமானது: அதாவது நரகத்தில் தேவனுடைய இருப்பு, துன்மார்க்கர்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்களின் பாவத்தின் காரணமாக வரம்பற்ற மற்றும் இடைவிடாத தேவனின் கோபத்தை அனுபவிக்கிறார்கள். நரகம் தேவனிடமிருந்து பிரிந்து செல்லும் இடம் என்று பலர் வாதிடுகின்றனர் (மத்தேயு 25:41) அப்படியானால், தேவன் அவரிடமிருந்து பிரிக்கப்பட்ட இடத்தில் இருப்பதாக கூற முடியாது. இருப்பினும், நரகத்தில் உள்ள துன்மார்க்கர்கள் அவருடைய நித்திய கோபத்தை சகித்துக்கொள்கிறார்கள், ஏனென்றால் வெளிப்படுத்தல் 14:10 ஆட்டுக்குட்டியானவரின் சமூகத்தில் துன்மார்க்கரின் வேதனையை பற்றி பேசுகிறது. துன்மார்க்கர்கள் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படும் இடத்தில் தேவன் இருக்க வேண்டும் என்பது சில அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்த முரண்பாடு தேவன் இருக்க முடியும் என்ற உண்மையால் விளக்கப்படலாம் - ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் தனது பிரசன்னத்தால் நிரப்புகிறார் (கொலோசெயர் 1:17) மற்றும் அவருடைய வல்லமையின் வார்த்தையால் எல்லாவற்றையும் நிலைநிறுத்துகிறார் (எபிரேயர் 1:3) - ஆனாலும் அவர் எல்லா இடங்களிலும் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதில்லை.

பாவத்தின் காரணமாக தேவன் சில சமயங்களில் தனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்து செல்வது போல் (ஏசாயா 52:9), அவர் தீயவர்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறார் (நீதிமொழிகள் 15:29) நித்திய தண்டனை, தேவன் இன்னும் நடுவில் இருக்கிறார். இப்போது நரகத்தில் இருக்கும் அந்த ஆத்துமா கஷ்டப்படுவதை அவர் அறிவார்; அவர் அவர்களின் வேதனை, அவர்களின் அழுகை, அவர்களின் கண்ணீர் மற்றும் நித்திய நிலைக்கான துக்கம் ஆகியவற்றை அவர் அறிந்திருக்கிறார். எல்லா விதமான ஆசீர்வாதங்களிலிருந்தும் ஒரு இடைவெளியை உருவாக்கிய அவர்களுடைய பாவத்தை அவர் எப்போதும் நினைவூட்டுகிறார். அவர் எல்லா வகையிலும் இருக்கிறார், ஆனால் அவர் தனது கோபத்தைத் தவிர வேறு எந்தப் பண்பையும் காட்டவில்லை.

அதுபோல, அவரும் பரலோகத்திலும் இருப்பார், நாம் இங்கு புரிந்துகொள்ளத் தொடங்காத ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் வெளிப்படுத்துகிறார்; அவர் தனது பன்முக ஆசீர்வாதம், அவரது பன்முக அன்பு மற்றும் அவரது பன்முக இரக்கம் ஆகியவற்றைக் காண்பிப்பார் -உண்மையில் அவருடைய கோபத்தைத் தவிர மற்ற அனைத்தும். தேவனுடைய சர்வ வியாபித்துவம் பாவம் செய்யும்போது தேவனிடமிருந்து மறைக்க முடியாது என்பதை நமக்கு நினைவூட்ட வேண்டும் (சங்கீதம் 139:11-12), இருப்பினும் நாம் மனந்திரும்புதலுடனும் விசுவாசத்துடனும் தேவனிடம் திரும்ப முடியும் (ஏசாயா 57:16).

English



முகப்பு பக்கம்

தேவன் சர்வவியாபி என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries