settings icon
share icon
கேள்வி

தேவன் ஏன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார்?

பதில்


யாத்திராகமம் 7:3-4 கூறுகிறது, “நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன். பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.” பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்துவதும், பின்னர் பார்வோன் மற்றும் எகிப்தை தண்டிப்பதும் தேவன் நியாயமற்ற நிலையில் அநியாயமாகச் செயல்பட்டதாகத் தோன்றுகிறது. தேவன் ஏன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார், பின்பு அதனால் எகிப்தை கூடுதல் வாதைகளால் வாதித்து அவர் கடுமையாக தீர்ப்பளிக்க முடிந்தது?

முதலாவதாக, பார்வோன் ஒரு அப்பாவியோ அல்லது தெய்வபயமுள்ள மனிதனோ அல்ல. அவன் இஸ்ரவேலர்களின் மேல் கொடூரமான துஷ்பிரயோகம் மற்றும் அடக்குமுறையை மேற்பார்வையிடும் ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரி, இஸ்ரவேலர்கள் அந்த நேரத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டிருந்தனர். எகிப்திய பார்வோன்கள் 400 ஆண்டுகளாக இஸ்ரவேலரை அடிமைப்படுத்தியிருந்தனர். முந்தைய பார்வோன் – அவன் மெய்யாகவே ஒருவேளை கேள்விக்குரிய பார்வோன் கூட – காரணம் இஸ்ரவேலில் பிறந்த ஆண் குழந்தைகளை பிறக்கும்போதே கொல்லும்படி கட்டளையிட்டார் (யாத்திராகமம் 1:16). தேவன் கடினப்படுத்திய பார்வோன் ஒரு தீய மனிதர், அவர் ஆட்சி செய்த தேசம் அவனுடைய தீய செயல்களை ஒப்புக் கொண்டது, அல்லது குறைந்தபட்சம் எதிர்க்கவில்லை.

இரண்டாவதாக, குறைந்தது இரண்டு சந்தர்ப்பங்களில், இஸ்ரவேலரை விடுவிப்பதை எதிர்த்து பார்வோன் தன் இருதயத்தை கடினப்படுத்தினான்: “இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்” (யாத்திராகமம் 8:15). "பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்" (யாத்திராகமம் 8:32). பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்துவதில் தேவனும் பார்வோனும் ஒருவிதத்தில் அல்லது வேறு வழியில் சுறுசுறுப்பாக இருந்ததாகத் தெரிகிறது. வாதைகள் தொடர்ந்தபோது, வரவிருக்கும் இறுதித் தீர்ப்பைப் பற்றி தேவன் பார்வோனுக்கு கடுமையான எச்சரிக்கைகளை கொடுத்தார். தேவனுடைய கட்டளைகளுக்கு எதிராக தனது சொந்த இருதயத்தை கடினப்படுத்துவதன் மூலம் பார்வோன் தன்னையும் தனது தேசத்தையும் மேலும் நியாயத்தீர்ப்பளிக்கத் தேர்ந்தெடுத்தார்.

பார்வோனின் கடின மனப்பான்மையின் விளைவாக, தேவன் பார்வோனின் இருதயத்தை மேலும் கடினப்படுத்தினார், கடைசி சில வாதைகளை அனுமதித்து, தேவனுடைய முழு மகிமையையும் பார்வைக்குக் கொண்டுவந்தார் (யாத்திராகமம் 9:12; 10:20, 27). பார்வோனும் எகிப்தும் 400 ஆண்டுகால அடிமைத்தனம் மற்றும் படுகொலை மூலம் இந்த தீர்ப்புகளை தங்களுக்குள் கொண்டு வந்தனர். பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23), பார்வோனும் எகிப்தும் தேவனுக்கு எதிராக கடுமையாக பாவம் செய்ததால், தேவன் எகிப்தை முற்றிலுமாக அழித்திருந்தால் அது போதுமானதாக அல்லது நீதியாக இருந்திருக்கும். ஆகையால், பார்வோனின் இருதயத்தை தேவன் கடினப்படுத்தியது அநியாயமானது அல்ல, அதுபோலவே எகிப்துக்கு எதிராக அவர் கூடுதல் வாதைகளை கொண்டு வந்ததும் அநியாயமல்ல. இந்த வாதைகள், எகிப்தை முற்றிலுமாக அழிக்காததில் தேவனுடைய அளவில்லா இரக்கத்தை நிரூபிக்கின்றன, அப்படி ஒருவேளை அவர் எகிப்தை அழித்திருந்தால் அது ஒரு நியாயமான தண்டனையாக இருந்திருக்கும்.

ரோமர் 9:17-18 அறிவிக்கிறது, “மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.” ஒரு மனித கண்ணோட்டத்தில், தேவன் ஒரு நபரை கடினப்படுத்துவதும், பின்னர் அவர் கடினப்படுத்திய நபரை தண்டிப்பதும் தவறு என்று தோன்றுகிறது. ஆயினும், நாம் அனைவரும் தேவனுக்கு எதிராக பாவம் செய்துள்ளோம் (ரோமர் 3:23), அந்த பாவத்திற்கான நியாயமான தண்டனை மரணம் (ரோமர் 6:23). எனவே, தேவன் ஒருவரை கடினப்படுத்துவதும் தண்டிப்பதும் அநியாயமல்ல; அந்த நபருக்கு கிடைக்கவேண்டிய தகுதியானதை ஒப்பிடுகையில் இது உண்மையில் இரக்கமுள்ளதாகும்.

English



முகப்பு பக்கம்

தேவன் ஏன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries