settings icon
share icon
கேள்வி

பிதாவாகிய தேவன் குறித்த கருத்தை நான் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?

பதில்


"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை" (1 யோவான் 3:1). இந்த வசனம் "பாருங்கள்" என்ற கட்டளையுடன் தொடங்குகிறது. பிதாவின் அன்பின் வெளிப்பாடுகளை நாம் கவனிக்க வேண்டும் என்று யோவான் விரும்புகிறார். அவர் முந்தைய அதிகாரத்தில் (1 யோவான் 2:5, 15) தேவனின் அன்பைப் பற்றி அறிமுகப்படுத்தியுள்ளார், அதை சுருக்கமாக இங்கே விவாதித்து, நான்காவது அதிகாரத்தில் முழுமையாக விளக்கியுள்ளார். யோவானின் நோக்கம் தகப்பன் தனது பிள்ளைகளுக்கு கொடுக்கும் "எவ்வளவு பெரிய அன்பு" என்று அன்பை விவரிப்பது ஆகும். "எவ்வளவு பெரியது" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை புதிய ஏற்பாட்டில் ஆறு முறை மட்டுமே காணப்படுகிறது மற்றும் அவை எப்போதும் ஆச்சரியத்தையும் போற்றுதலையும் குறிக்கிறது.

இங்கே கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், "பிதா நம்மை நேசிக்கிறார்" என்று யோவான் சொல்லவில்லை. அவ்வாறு செய்யும்போது, அவர் ஒரு நிபந்தனையை விவரிப்பதாக இருக்கும். அதற்கு பதிலாக, பிதா நம்மீது தமது அன்பை "பாராட்டினார்" என்று அவர் நம்மிடம் கூறுகிறார், இது தேவனின் செயலையும் அவரது அன்பின் அளவையும் சித்தரிக்கிறது. யோவான் "பிதா" என்ற வார்த்தையை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வார்த்தை தகப்பன்-பிள்ளைக்கு உள்ள உறவைக் குறிக்கிறது. இருப்பினும், தேவன் நம்மை பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டபோது தகப்பன் ஆகவில்லை. தேவனின் பிதாத்துவம் நித்தியமானது. அவர் நித்தியமாக இயேசு கிறிஸ்துவின் பிதா, மற்றும் இயேசு மூலம் அவர் நம்முடைய பிதா. இயேசுவின் மூலம் நாம் பிதாவின் அன்பைப் பெற்று "தேவனின் பிள்ளைகள்" என்று அழைக்கப்படுகிறோம்.

தேவன் நம்மை அவருடைய பிள்ளைகள் என்று அழைப்பது மற்றும் அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவுடன் வாரிசுகள் மற்றும் இணை வாரிசுகள் என்று உறுதியளிப்பது எவ்வளவு கனமுள்ளதாய் இருக்கிறது (ரோமர் 8:17). யோவான் தனது நற்செய்தியில், விசுவாசத்தில் கிறிஸ்துவை கர்த்தராகவும் இரட்சகராகவும் பெற்ற அனைவருக்கும் தேவனின் பிள்ளைகளாகும் அதிகாரத்தை தேவன் கொடுக்கிறார் என்றும் கூறுகிறார். (யோவான் 1:12) தேவன் தமது அன்பை தனது குமாரன் இயேசு கிறிஸ்துவுக்கும், அவர் மூலம், தத்தெடுக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் நீட்டிக்கிறார்.

யோவான் நம்மிடம் கூறும்போது "அதுதான் நாம்!" அவர் நம் நிலையின் யதார்த்தத்தை அறிவிக்கிறார். இப்போது, இந்த தருணத்தில், நாம் அவருடைய பிள்ளைகள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது எதிர்காலத்தில் தேவன் நிறைவேற்றவிருக்கும் ஒரு வாக்குறுதி அல்ல. அப்படி இல்லை, நாம் ஏற்கனவே தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம். தேவனை நாம் நம்முடைய தகப்பனாக அறிந்திருப்பதால், தத்தெடுக்கப்பட்ட நாம் அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறோம். அவருடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய அன்பை அனுபவிக்கிறோம். அவருடைய பிள்ளைகளாகிய நாம் அவரை நம் தகப்பனாக ஒப்புக்கொள்கிறோம், ஏனென்றால் நமக்கு தேவன் பற்றிய அனுபவ அறிவு உள்ளது. நம்மை நேசிப்பவர், நமக்கு வழங்குபவர், மற்றும் நமது பூமிக்குரிய தகப்பன்கள் செய்ய வேண்டியதைப் போல நம்மைப் பாதுகாப்பவர் மீது நாம் நம்பிக்கையும் விசுவாசத்தையும் வைக்கிறோம். பூமிக்குரிய தகப்பன்கள் செய்ய வேண்டியதைப் போல, தேவன் அவருடைய பிள்ளைகள் கீழ்ப்படியாதபோது அல்லது அவருடைய கட்டளைகளைப் புறக்கணிக்கும்போது அவர்களை ஒழுங்குபடுத்துகிறார் மற்றும் சீர்பொருந்தப் பண்ணுகிறார். அவர் நம் நன்மைக்காக இதைச் செய்கிறார், அதனால் "அவருடைய பரிசுத்தத்தில் நாமும் பங்குள்ளவர்களாக வேண்டும்" (எபிரெயர் 12:10).

தேவனை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிபவர்களை வேதம் விவரிப்பதற்கு பல வழிகள் உள்ளன. நாம் தேவனின் வாரிசுகள் மற்றும் கிறிஸ்துவுடன் இணை வாரிசுகள் (ரோமர் 8:17); நாம் பரிசுத்த ஆசாரியர்கள் (1 பேதுரு 2:5); நாம் புதிய சிருஷ்டிப்புகள் (2 கொரிந்தியர் 5:17); நாம் திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்கள் (2 பேதுரு 1:4). ஆனாலும் மேலே உள்ள எந்தவொரு தலைப்பையும் அல்லது பதவியையும் விட நாம் தேவனுடைய பிள்ளைகள் மற்றும் அவர் நம் பரலோகப் பிதா என்பது எளிமையான உண்மை.

English



முகப்பு பக்கம்

பிதாவாகிய தேவன் குறித்த கருத்தை நான் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries