settings icon
share icon
கேள்வி

கிழக்கத்திய வைதீகமான திருச்சபை என்றால் என்ன மற்றும் வைதீகமான திருச்சபை கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் என்ன?

பதில்


கிழக்கத்திய வைதீகமான திருச்சபை ஒரு தனிப்பட்ட திருச்சபை அல்ல, மாறாக 13 சுயராஜ்ய அமைப்புகளைக் கொண்ட ஒரு குடும்பமாகும், அவைகள் அமைந்துள்ள தேசத்தால் குறிப்பிடப்படுகின்றன (உதாரணமாக, கிரேக்க வைதீகமான திருச்சபை, ரஷ்ய வைதீகமான திருச்சபை). ஆசரிப்புகள், உபதேசம், வழிபாட்டு முறை மற்றும் திருச்சபை அரசாங்கத்தைப் பற்றிய புரிதலில் அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர், ஆனால் ஒவ்வொன்றும் அதன் சொந்த விவகாரங்களை தனிப்பட்ட முறையில் நிர்வகிக்கின்றன.

ஒவ்வொரு வைதீகமான திருச்சபையின் தலைவரும் "குலபதி" அல்லது "பெருநகர்" என்று அழைக்கப்படுகிறார். கான்ஸ்டான்டினோபிளின் (இஸ்தான்புல், துருக்கி) குலபதி எல்லாவற்றையும் உட்படுத்திய அல்லது உலகளாவிய - குலபதியாக கருதப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் போப்பாண்டவருக்கு மிக நெருக்கமான விஷயம் அவர். வைகாரியஸ் ஃபிலியஸ் டேய் (தேவனுடைய குமாரனின் மத்தியஸ்தர்) என்று அழைக்கப்படும் போப்பைப் போலல்லாமல், கான்ஸ்டான்டினோபிளின் பிஷப் பிரிமஸ் இன்டர் பாரேஸ் (சமமானவர்களில் முதல்வர்) என்று அழைக்கப்படுகிறார். அவர் சிறப்பு மரியாதை பெறுகிறார், ஆனால் மற்ற 12 வைதீகமான திருச்சபைகள் ஒற்றுமைகளில் தலையிட அவருக்கு அதிகாரம் இல்லை.

வைதீகமான திருச்சபை கிறிஸ்துவின் ஒரு உண்மையான திருச்சபை என்று கூறுகிறது, மேலும் அதன் தோற்றத்தை அசல் அப்போஸ்தலர்களிடம் இருந்து முறியடிக்கப்படாத அப்போஸ்தல சங்கிலி மூலம் கண்டுபிடிக்க முயல்கிறது. வைதீகமான சிந்தனையாளர்கள் ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் புராட்டஸ்டன்ட்டுகளின் ஆவிக்குரிய நிலையை விவாதிக்கிறார்கள், இன்னும் சிலர் அவர்களை வேறே மத மரபாக கருதுகின்றனர். ஆயினும், கத்தோலிக்கர்கள் மற்றும் புராட்டஸ்டன்ட்டுகளைப் போலவே, வைதீகமான திருச்சபை விசுவாசிகளும் திரித்துவத்தையும், வேதாகமம் தேவனுடைய வார்த்தையாகவும், இயேசு தேவனுடைய குமாரனாகவும், பல வேதாகமக் கோட்பாடுகளையும் உறுதிப்படுத்துகின்றனர். இருப்பினும், கோட்பாட்டில், அவர்கள் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுடன் ஒப்பிடுகையில் ரோமன் கத்தோலிக்கர்களுடன் மிகவும் பொதுவானவர்கள்.

துரதிர்ஷ்டவசமாக, விசுவாசத்தால் நீதிமானாக்கப்படுதல் என்ற கோட்பாடு வைதீகமான திருச்சபையின் வரலாறு மற்றும் இறையியலிலிருந்து கிட்டத்தட்ட இல்லை. மாறாக, வைதீகமானது தியோசிஸை வலியுறுத்துகிறது (அதாவது, “தெய்வமயமாக்கல்”), படிப்படியாக கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் போல ஆகிவிடுகிறார்கள். வைதீகமான திருச்சபை பாரம்பரியத்தில் பலர் புரிந்து கொள்ளத் தவறியது என்னவென்றால், "தெய்வமயமாக்கல்" என்பது இரட்சிப்பின் முற்போக்கான விளைவாகும், இரட்சிப்பின் அவசியமல்ல என்பதாகும். வேதாகமத்துடன் முரண்படும் பிற வைதீகமான திருச்சபை தனித்துவங்கள் பின்வருமாறு:

திருச்சபை பாரம்பரியம் மற்றும் வேதாகமத்திற்கு சம அதிகாரம்
பாரம்பரியத்தைத் தவிர்த்து வேதாகமத்தை வியாக்கியானம் செய்யும் தனிப்பட்ட நபர்களின் ஊக்கமளிக்காத நிலை
மரியாளின் நிரந்தர கன்னித்தன்மை
இறந்தவர்களுக்காக ஜெபம் செய்தல்
தனிப்பட்ட பொறுப்பு மற்றும் விசுவாசத்தைக் குறிப்பிடாமல் குழந்தைகளின் ஞானஸ்நானம்
மரணத்திற்குப் பிறகு இரட்சிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு
இரட்சிப்பை இழக்கும் வாய்ப்பு

கிழக்கு வைதீகமான திருச்சபையின் சில பெரிய சப்தங்களைக் கூறியுள்ள நிலையில், இயேசு கிறிஸ்துவுடன் உண்மையான இரட்சிப்பின் உறவைக் கொண்ட வைதீகமான பாரம்பரியத்தில் பலர் இருக்கும்போது, வைதீகமான திருச்சபையே ஒரு தெளிவான செய்தியுடன் கிறிஸ்துவின் வேதாகம நற்செய்தியைப் பேசவில்லை. சீர்திருத்தவாதிகளின் அழைப்பு "வேதாகமம் மட்டும், விசுவாசம் மட்டும், கிருபை மட்டும், மற்றும் கிறிஸ்து மட்டும்" போன்றவை கிழக்கு வைதீகமான திருச்சபையில் காணவில்லை, அது இல்லாமல் செய்ய முடியாத ஒரு பொக்கிஷம் ஆகும்.

English



முகப்பு பக்கம்

கிழக்கத்திய வைதீகமான திருச்சபை என்றால் என்ன மற்றும் வைதீகமான திருச்சபை கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries