settings icon
share icon

1 யோவான் புத்தகம்

எழுத்தாளர்: 1, 2, மற்றும் 3 யோவான் ஆகிய மூன்று நிருபங்களும் ஆரம்ப காலத்திலிருந்தே அப்போஸ்தலனாகிய யோவானே எழுதினார் என்றும், அவர் யோவானின் நற்செய்தியையும் எழுதினார் என்று நம்பப்பட்டு வருகிறது. இந்த மூன்று நிருபங்களும் யோவானின் நற்செய்தியைப் போலவே அதே வாசகர்களிடம் உரையாற்றப்பட்டன என்ற முடிவுக்கு அவைகளின் உள்ளடக்கம், பாணி மற்றும் சொற்களஞ்சியம் ஆகியவைகள் உத்திரவாதப்படுத்துகிறது.

எழுதப்பட்ட காலம்: 1 யோவான் புத்தகம் கி.பி. 85-95 க்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்டதன் நோக்கம்: 1 யோவானின் புத்தகம் யோவான் எழுதிய நற்செய்தியைப் பற்றிய வாசகர்களின் அறிவைக் கருதி, கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கான உறுதியை அளிக்கும் சுருக்கமாகத் தெரிகிறது. முதல் நிருபம் வாசகர்கள் ஞானமார்க்கத்தின் பிழையை எதிர்கொண்டதைக் குறிக்கிறது, இது இரண்டாம் நூற்றாண்டில் மிகவும் கடுமையான ஒரு பிரச்சினையாக மாறியது. மதத்தின் ஒரு தத்துவமாக, விஷயமானது தீமை என்றும் ஆவி நல்லது என்றும் அது கூறியது. இந்த இரண்டிற்கும் இடையேயான பதட்டத்திற்கு தீர்வு அறிவு தான், அல்லது க்னோசிஸ் ஆகும், இதன் மூலம் மனிதன் இவ்வுலகத்திலிருந்து ஆவிக்குரிய நிலைக்கு உயர்ந்தான். நற்செய்தி செய்தியில், இது கிறிஸ்துவின் நபரைப் பற்றிய இரண்டு தவறான கோட்பாடுகளுக்கு வழிவகுத்தது, டோசட்டிசிசம் – இயேசுவின் மனிதத்தன்மையை ஒரு பேயாகக் கருதினார்கள் மற்றும் செரிந்தியனிசம் – இது இயேசுவை இரட்டை ஆளுமையுள்ளவராக, அதாவது சில சமயங்களில் மனிதனாகவும், சில சமயங்களில் தெய்வமாகவும் ஆக்குகிறது. 1 யோவானின் முக்கிய நோக்கம் விசுவாசத்தின் உள்ளடக்கத்திற்கு எல்லைகளை நிர்ணயிப்பதும், விசுவாசிகளுக்கு அவர்களின் இரட்சிப்பின் உறுதியை அளிப்பதும் ஆகும்.

திறவுகோல் வசனங்கள்: 1 யோவான் 1:9, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

1 யோவான் 3:6, “அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.”

1 யோவான் 4:4, “பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.”

1 யோவான் 5:13, “உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.”

சுருக்கமான திரட்டு: ஆரம்பகால திருச்சபையில் கள்ள ஆவிக்குரிய போதகர்கள் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தனர். விசுவாசிகள் ஆராய்ந்து குறிப்பிட்டுப் பார்க்கும்படிக்கு ஒரு முழுமையான புதிய ஏற்பாடு இல்லாததால், பல திருச்சபைகள் தங்களது சொந்தக் கருத்துக்களைக் கற்பித்து, தலைவர்களாக முன்னேறிய பாசாங்குக்காரர்களுக்கு இரையாகிவிட்டன. யோவான் இந்த கடிதத்தை சில முக்கியமான விஷயங்களில், குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் அடையாளத்தைப் பற்றி நேரானதாக அமைப்பதற்காக எழுதினார்.

யோவானின் நிருபம் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் அடிப்படைகளைப் பற்றியது என்பதால், அவருடைய வாசகர்கள் தங்கள் விசுவாசத்தை நேர்மையாக பிரதிபலிக்க இது உதவியது. தாங்கள் உண்மையான விசுவாசிகளா? என்ற கேள்விக்கு பதிலளிக்க இது அவர்களுக்கு உதவியது. அவர்களின் செயல்களைப் பார்த்து அவர்கள் சொல்ல முடியும் என்று யோவான் அவர்களிடம் கூறினார். அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு கூறுகிறவர்களாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் தேவன் இருப்பதற்கு சான்றாகும் என்றார். ஆனால் அவர்கள் எப்போதுமே சண்டையிட்டு வழக்கு உண்டாக்கினால் அல்லது சுயநலமாக, ஒருவருக்கொருவர் கவனிக்காமல் இருந்தால், அவர்கள் உண்மையில் தேவனை அறியவில்லை என்று தங்களையே காட்டிக்கொடுக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் பரிபூரணமான நிலையில் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. உண்மையில், விசுவாசம் என்பது நாம் நம்முடைய பாவங்களை ஒப்புக்கொள்வதும் தேவனிடமிருந்து மன்னிப்பைக் கோருவதும் சம்பந்தப்பட்டிருப்பதை யோவான் உணர்ந்தார். குற்றத்திலிருந்து தூய்மைப்படுத்துவதற்காக தேவனைப் பொறுத்து, மற்றவர்களுக்கு எதிரான நமது தவறுகளை ஒப்புக்கொள்வதோடு, திருத்தங்களைச் செய்வதும் தேவனைப் பற்றி அறிந்து கொள்வதில் மற்றொரு முக்கிய பகுதியாகும்.

இணைப்புகள்: பாவத்தைப் பற்றி அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட பகுதிகளில் ஒன்று 1 யோவான் 2:16-ல் காணப்படுகிறது. இந்த வசனத்தில், பாவத்தின் மூன்று அம்சங்களை யோவான் விவரிக்கிறார், இது வேதவாக்கியங்களில் முதல் மற்றும் மிகவும் பூமியை சிதறடிக்கும் சோதனையை நினைவுபடுத்துகிறது. முதல் பாவம்-ஏவாளின் கீழ்ப்படியாமை-ஆதியாகமம் 3:6-ல் நாம் காணும் அதே மூன்று சோதனைகளுக்கு அவள் பலியானதன் விளைவாகும்: மாம்சத்தின் இச்சை (“உணவுக்கு நல்லது”); கண்களின் இச்சை (“கண்ணுக்கு மகிழ்ச்சி”); மற்றும் ஜீவனத்தின் பெருமை (“ஞானத்தைப் பெற விரும்பத்தக்கது”).

நடைமுறை பயன்பாடு: 1 யோவானின் புத்தகம் அன்பு மற்றும் மகிழ்ச்சியின் புத்தகம். மற்றவர்களுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நமக்குள்ள கூட்டுறவின் ஐக்கியத்தை இது விளக்குகிறது. இது மகிழ்ச்சிக்கு இடையில் வேறுபடுகிறது, இது தற்காலிகமானது மற்றும் விரைவானது மற்றும் உண்மையான மகிழ்ச்சி, 1 யோவான் புத்தகம் இந்த மகிழ்ச்சியை எவ்வாறு பெறமுடியும் என்று சொல்லுகிறது. யோவான் எழுதிய சொற்களை எடுத்து, அவற்றை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால், நாம் விரும்பும் உண்மையான அன்பு, அர்ப்பணிப்பு, ஐக்கியம் மற்றும் மகிழ்ச்சி நம்முடையதாக இருக்கும்.

அப்போஸ்தலனாகிய யோவான் கிறிஸ்துவை நன்கு அறிந்திருந்தார். இயேசு கிறிஸ்துவுடன் நாம் அனைவரும் அந்த நெருக்கமான உறவை வைத்திருக்க முடியும் என்று அவர் நமக்குச் சொல்கிறார். அவருடன் நேரடி மற்றும் தனிப்பட்ட தொடர்பு கொண்டிருந்த மனிதர்களின் சாட்சி நம்மிடம் உள்ளது. நற்செய்தி எழுத்தாளர்கள் ஒரு வரலாற்று யதார்த்தத்தின் மீது உறுதியான அடிப்படையிலான சாட்சியங்களை முன்வைக்கின்றனர். இப்போது, அது நம் வாழ்விற்கு எவ்வாறு பொருந்தும்? அவருடைய கிருபை, இரக்கம், அன்பு, ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் அடிப்படையில் நம்முடன் ஒரு ஐக்கியத்தை உருவாக்க இயேசு தேவனுடைய குமாரனாக இங்கு வந்தார் என்று அது நமக்கு விளக்குகிறது. இயேசு ஏதோ தொலைதூர இடத்தில் இருக்கிறார் என்றும் நம்முடைய அன்றாட போராட்டங்கள், பிரச்சினைகள் மற்றும் கவலைகள் குறித்து அவர் கவலைப்படுவதில்லை என்றும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நம்முடைய வாழ்க்கையின் எளிய, சாதாரணமான பகுதிகளிலும், சிக்கலான, ஆத்மாவை திருகிப் பறிக்கும் பகுதிகளிலும் இயேசு இங்கே இருக்கிறார் என்று யோவான் சொல்கிறார். தேவன் மாம்சமாகி மனிதர்களிடையே வாழ்ந்தார் என்பதற்கு யோவான் தனது தனிப்பட்ட அனுபவங்களுக்கு சாட்சியாக சாட்சியமளிக்கிறார். அதாவது கிறிஸ்து நம்முடன் வாழ இங்கே வந்தார், அவர் இன்னும் நம்முடன் வாழ்கிறார். அவர் யோவானுடன் பூமியில் நடந்ததுபோலவே, அவர் ஒவ்வொரு நாளும் நம்முடன் நடந்து செல்கிறார். இந்த உண்மையை நாம் நம் வாழ்வில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இயேசு நமக்கு அருகில் நிற்கிறார் என்பதுபோல நாம் வாழ வேண்டும். இந்த உண்மையை நாம் நடைமுறைக்குக் கொண்டுவந்தால், கிறிஸ்து நம் வாழ்வில் பரிசுத்தத்தைச் சேர்ப்பார், மேலும் அவரைப் போலவே நம்மை மேலும் மேலும் ஆக்குவார்.

English



முகப்பு பக்கம்

1 யோவான் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries