settings icon
share icon
கேள்வி

கடைசிக்காலங்களுக்கான அடையாளங்கள் யாவை?

பதில்


கடைசிக்காலங்கள் சமீபத்தில் இருக்கிறது என்பதை நிதானித்து அறிந்துகொள்ள மத்தேயு 24:5-8 வரையிலான வசனங்கள நமக்கு முக்கியமான குறிப்புகளை கொடுக்கின்றன: "ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்". கள்ள கிறிஸ்துக்கள், யுத்தங்கள், பஞ்சங்கள், வாதைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஆகியவைகள் பெருகிக்கொண்டே வருகின்றன. இவைகள் யாவும் கடைசிக்காலங்கள் சமீபமாக இருக்கிறது என்பதற்கான அடையாளங்கள் ஆகும். மத்தேயுவின் இந்த வேதபாகம், நமக்கு கடைசி காலங்களைக் குறித்த எச்சரிக்கையை கொடுக்கிறது என்கிற போதிலும், நாம் இப்படிப்பட்ட சம்பவங்களினால் வஞ்சிக்கப்பட்டு போய்விடக்கூடாது. காரணம் இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் மட்டும்தான் முடிவு உடனே வராது. முடிவு இன்னும் வருகிறதாய் இருக்கும்.

சில வேத அறிஞர்கள் பூமியதிர்ச்சி, அரசியல் மாற்றம், மற்றும் இஸ்ரவேலின் மீதான தாக்குதல் ஆகிய ஒவ்வொரு சம்பவத்தையும் கடைசி காலங்கள் சமீபத்தில் இருக்கிறது என்பதற்கு உறுதியான அடையாளங்களாக கருதுகின்றனர். இந்த சம்பவங்கள் யாவும் கடைசி நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன என்பதற்கு அடையாளமாக இருக்கலாம் என்கிறபோதிலும், இவைகள் கடைசிகாலங்கள் வந்துவிட்டது என்பதைக் குறிக்கவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கடைசி நாட்களில் கள்ளப்போதனைகள் அபிரிவிதமாக அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார். ‘‘ஆவியானர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனசாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்” (1 தீமோத்தேயு 4:1). கடைசிநாட்கள் ‘‘கொடியகாலங்கள்” என்று விளக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மனுஷனுடைய தீய சுபாவம் அதிகரித்து, ஜனங்கள் வேண்டுமென்றே “சத்தியத்தை எதிர்ப்பார்கள்” (2 தீமோத்தேயு 3:1-9; 2 தெசலோனிக்கேயர் 2:3).

மற்றொரு அடையாளம், யூதருடைய தேவாலயம் மறுபடியும் எருசலேமில் கட்டப்படும். இஸ்ரேலுக்கு விரோதமாக தாக்குதல்கள் அதிகரிக்கும். “ஒரே உலக அரசு” என்பதை நோக்கி உலகம் நகரும். கடைசிகாலங்களின் மிக முக்கியமான அடையாளமே இஸ்ரவேல் தேசம்தான். கி.பி.70-ஆம் ஆண்டிற்குப்பிறகு 1948-ல் இஸ்ரவேல் தேசம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு சுயாட்சியை துவங்கியது. தேவன் ஆபிராகாமுக்கு அவனுடைய சந்ததி கானானை சுதந்தரித்து அதை என்றென்றைக்குமான நித்திய சுதந்தரமாகக் கொடுத்து வாக்குப்பண்ணினார் (ஆதியாகமம் 17:8). எசேக்கியேல் தீர்க்கதரிசி பௌதிகபிரகாரமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் இஸ்ரவேல் தேசம் மறுபடியும் கட்டப்படும் என்று தீர்க்தரிசனம் உரைத்தார் (எசேக்கியேல் அதிகாரம் 37). இஸ்ரேல் தன் சொந்த ஸ்தலத்தில் தேசமாக இருக்கிற காரியம், கடைசிகால தீர்க்கதரிசனத்திலும் ஒரு வெளிச்சமாக உள்ளது. காரணம் கடைசிக்காலத்தைக் குறித்த படிப்பில் மிக முக்கியமான இடத்தை இஸ்ரவேல் பெற்றுள்ளது (தானியேல் 10:14; வெளிப்படுத்தின விசேஷம் 11:8).

இந்த அடையாளங்களை மனதில்கொண்டு, கடைசிக்காலங்களை எதிர்ப்பார்க்கிற எதிர்ப்பார்ப்பில் நாம் பகுத்தறிந்து ஞானமுள்ளவர்களாக இருக்கமுடியும். இவற்றில் எந்தஒரு சம்பவத்தை வைத்தும் சீக்கிரமாக கடைசி காலங்கள் வருகின்றது என்று நாம் புரிந்துக் கொண்டு வியாக்கியானம் செய்யக்கூடாது. தேவன் நாம் தயாராக இருக்கும்படிக்கு நமக்கு போதுமானத் தகவல்களை அளித்திருக்கிறார், அதற்காகவே நாம் அழைக்கப்பட்டும் இருக்கிறோம்.

English



முகப்பு பக்கம்

கடைசிக்காலங்களுக்கான அடையாளங்கள் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries