settings icon
share icon
கேள்வி

இயேசு மெய்யாகவே ஜீவித்திருந்தாரா? இயேசு ஜீவித்திருந்தார் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதேனும் உண்டா?

பதில்


இந்த கேள்வி பொதுவாக கேட்கப்படும்போதே இதை கேட்கிறவர் “வேதாகமத்திற்குப் புறம்பே” இருந்துதான் இந்த கேள்வியை கேட்கிறார். இயேசு ஜீவித்திருந்தார் என்பதற்கான ஆதாரத்தை வேதாகமத்தில் இருந்து குறிப்பிடுவது ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளவே முடியாது என்பதான கருத்தை நாம் கொடுப்பதில்லை. புதிய ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான வசனங்களில் இயேசுவைக் குறிப்பிட்டு மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. சிலர் சுவிஷேச புத்தகங்களை இரண்டாம் நூற்றாண்டில் அதாவது கிறிஸ்துவின் மரணத்திற்கு 100 ஆண்டுகள் கழித்துதான் எழுதப்பட்டது என்று கூறுகிறார்கள். இது இப்படியாக இருந்தாலும் (நாம் அதை முழுவதுமாக எதிர்க்கிறோம்). பண்டையக் காலச் சான்றுகளை உறுதிப்படுத்த தீர்மானிக்கும் வரையறை வைத்து பார்க்கும்போது, இருநூறு ஆண்டுகள் வரைக்கும் உள்ள காலஅளவில் எழுதப்பட்ட காரியங்களை நம்பப்படுகிற சான்றுகளாக எடுத்துக்கொண்டார்கள். மேலும் பெரும்பாலான அறிஞர்கள் (கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவரல்லாதவர்கள்) பவுலின் நிருபங்களை பவுல் முதலாம் நூற்றாண்டில், அதாவது இயேசு மரித்ததிலிருந்து எழுந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் எழுதியிருக்க வேண்டும் என்று ஒத்துக்கொள்கிறார்கள். இப்படியிருக்க, பண்டைக்காலத்து கையெழுத்துப்பிரதிகளின் சான்றுகளின்படி, இயேசு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதர் இஸ்ரவேலில் முதலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தார் என்பதற்கு வலுவானச் சான்றுகள் உள்ளன.

கி.பி. 70ல் ரோமர்கள் எருசலேமின்மேல் படையெடுத்து வந்து இஸ்ரவேல் முழுவதையும் அழித்தார்கள், அதில் வாழந்தவர்களையும் கொன்றுப் போட்டார்கள், பட்டணங்கள் தரைமட்டமாய் தீக்கிரையாக்கப் பட்டது. இயேசு வாழந்ததற்கான சான்றுகள் அழிக்கப்பட்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் இயேசுவைக் கண்ணால் கண்ட சாட்சிகள் எண்ணற்றோர் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த உண்மை இயேசுவைக் நேரில் கண்ட சாட்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம்.

இயேசு கிறிஸ்து ரோமருடைய அதிகாரத்திற்குக் கீழிருந்த சில முக்கியமில்லாத இடங்களில் ஊழியம் செய்ததாக இருக்க, இயேசுவைக் குறித்த காரியங்கள் அந்தக்காலத்திலிருந்த வரலாற்றுச் சான்றுகளிலிருந்தே கொணரலாம். இயேசுவைக் குறித்த வரலாற்றுச்சான்றுகளில் சில மிக முக்கியமானவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த டாக்கிடஸ் (Tacitus) என்னும் மிகத்துல்லியமான வரலாற்று ஆசிரியரான இவர் தன்னுடைய எழுத்துக்களில் ‘‘கிறிஸ்தவர்கள்’’ (கிற்ஸ்தஸ் என்பது இலத்தீன் வார்த்தை) திபேரியாவை ஆண்ட பொந்தியு பிலாத்துவின்கீழ் பாடனுபவித்தார்கள் என்று எழுதியிருக்கிறார். சுடோனியஸ், ராஜா ஆத்ரியன் என்பவருக்கு காரியதரிசியாயிருந்தவர் இப்படியாக எழுதுகிறார், கிறெஸ்டஸ் (கிறிஸ்து) என்ற பெயருடைய ஒரு மனிதர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று எழுதியிருக்கிறார் (Annals 15:44).

ஃபிளேவியஸ் ஜொசிபஸ் என்பவர் பிரபலமான யூத வரலாற்று ஆசரியர். அவருடைய ஆண்டிகுட்டீஸில் (Antiquities) “அவருடைய சகோதரரான இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவர்” என்று யாக்கோப்புக்கு எழுதியுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய ஒரு வசனம் இருக்கின்றது, அது சொல்லுகிறது (18:3), இந்த காலத்தில் இயேசு என்னும் ஒரு ஞானவான், அவரை மனிதன் என்று கூறுவது நியாயமானதாக இருக்காது. அவர்தான் அநேகரை ஆச்சரியப்பட வைத்தவர்... அவர்தான் கிறிஸ்து... அவர் மூன்றாவது நாளிலே உயிரோடு அவர்களுக்கு தரிசனமானார். தீர்க்கதரிசிகள் இவைகளையும் மற்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அற்புதமான காரியங்களையும் அவரைக் குறித்து கூறியிருக்கிறார்கள் என்றார். மற்றொரு பதிப்பில் அந்த காலத்தில் இயேசு என்று பெயர் கொண்ட ஒரு ஞானமான மனுஷர் இருந்தார். அவர் நல்ல நடத்தை உள்ளவரும் நற்குணமுள்ளவராக இருந்தார். யூதர்கள் அநேகரும் மற்ற தேசத்து மக்களும் அவருக்கு சீஷரானார்கள். பிலாத்து அவரை குற்றப்படுத்தி சிலுவையிலறைந்துக் கொன்றான். ஆனால் அவருடைய சீஷர்கள் சீஷத்துவத்தைவிட்டு விலகவில்லை. அவர்களுக்கு அவர் சிலுவைமரணத்திற்குக்குப்பிறகு மூன்றுநாள் கழித்து தரிசனமானார் என்றும் அவர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர்தான் மேசியா, தீர்க்கதரிசிகள் இவரைக்குறித்துதான் உரைத்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.”

ஜீலியஸ் ஆப்பிரிகானஸ், வரலாற்று ஆசிரியர் தாலஸ் கூறிய காரியங்களை குறிப்பிடுகிறார்: கிறிஸ்து சிலுவையிலறையப்பட்ட பின்பு உண்டான அந்தகாரத்தைக் குறித்து எழுதியிருக்கிறார் (Extant Writings, 18).

இளையவனாகிய பிளினி, அவருடைய லெட்டர்ஸில் (Letters 10:96), அவருடைய குறிப்பில் ஆதி கிறிஸ்தவ ஆராதனை பழக்கவழக்கங்களைக் குறித்தும், கிறிஸ்தவர்கள் இயேசுவைக் தேவனாக வணங்கியதையும், சீராக அன்பின் ஐக்கியத்தைக் குறித்தும், அப்பம் பிட்குதலையும் குறித்து எழுதியிருக்கிறார்.

பாபிலோனியன் தால்மூதில் (Sanhedrin 43a), பஸ்கா பண்டிகை நாட்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை உறுதிச் செய்கிறது. மேலும், இயேசு மந்திரஜால வித்தையை பயன்படுத்தி யூதர்களை விசுவாசத்தை விட்டு வழிவிலகி போகும்படி செய்தார் என அவர்மேல் குற்றஞ்சுமத்தப்பட்டதையும் குறிப்பிடுகிறது.

இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த சமோசாடாவைச் சேர்ந்த லூசியன் என்ற கிரேக்க எழுத்தாளர், கிறிஸ்தவர்களால் இயேசு வணங்கப்பட்டார், புதிய உபதேசங்களை கொண்டு வந்தார், மற்றும் சிலுவையிலறையப்பட்டார் என்றும் ஒப்புக்கொள்கிறார். இயேசுவின் போதனைகள், விசுவாசிகளின் சகோதரத்துவத்தைப்பற்றியும், மனந்திரும்புதலைப்பற்றியும் மற்ற தெய்வங்களை வெறுத்து தள்ளுவதை குறித்தும் இருந்ததாக அவர் கூறியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் இயேசுவின் கற்பனைகளின்படி வாழ்ந்தார்கள் மற்றும் தங்களுக்கு மரணம் இல்லை என்றும் நம்பினார்கள். அவர்கள் தங்கள் மரணத்தை வெறுத்து தன்னார்வத்தோடு தங்களை தனித்துவப்படுத்திக்கொண்டு, உலகப்பொருட்களை உதறித்தள்ளினார்கள்.

மாறா பார்-செராபியோன் (Mara Bar-Serapion) என்பவர் இயேசு ஞானவானாகவும் நற்பண்புள்ள மனிதனாக இருந்தார் என்று உறுதிச் செய்கிறார். மேலும் அநேகரால் இஸ்ரவேலின் ராஜா என்றும் கருதப்பட்டு, யூதரால் மரணத்துக்கு ஒப்புவிக்கப்பட்டார், அவருடைய போதனைகளில் அவரது சீஷர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்று உறுதிபடுத்தினார்.

அறிவுசார்ந்த கொள்கைக்காரர்கள் எழுத்துக்கள் யாவும் இயேசுவைக் குறித்து கூறுகிறது. (சத்தியத்தின் சுவிசேஷம், யோவானின் எழுத்துக்கள், தோமாவின் சுவிசேஷம், உயிர்த்தெழுதல் நூல், மற்றும் பல.)

உண்மையில் பார்ப்போமானால் நாம் சுவிசேஷத்தை கிறிஸ்தவரல்லாதவர்கள் கூறிய மூலக்காரணத்திலிருந்தே தொகுத்து விட முடியம். இயேசு, கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார் (ஜொசிபஸ்), ‘அற்புதம்’ செய்து புதிய உபதேசங்களைப் போதித்து யூதேயாவில் பஸ்காவின் போது கொல்லப்பட்டார் (பாபிலோனியன் தல்மூது), தன்னை கடவுள் என்று சொல்லி மறுபடி வரப்போவதாகவும் கூறினார் (எலியேசர்), அதை அவருடைய சீஷர்கள் நம்பி அவரை தேவனாக வணங்கினார்கள் (பிளினி).

இயேசு கிறிஸ்து ஜீவித்திருந்ததற்கான திரளான சான்றுகள் வேதாகமத்திலும் வேதாகமத்திற்கு வெளியேயும் உள்ளன. மேலும் எல்லாவற்றையும்வி்ட மிகப்பெரியச்சான்று என்னவென்றால் பன்னிரண்டு சீஷர்கள் உள்பட முதல் நூற்றாண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவுக்கு இரத்த சாட்சிகளாக மரிக்கவும் தயாராக இருந்தார்கள். ஜனங்கள் தாங்கள் நம்புகிற உண்மைக்கு ஜீவனைக் கொடுப்பார்களே தவிர பொய்க்காக ஒருபோதும் மரிக்க துணியமாட்டார்கள்.

English



முகப்பு பக்கம்

இயேசு மெய்யாகவே ஜீவித்திருந்தாரா? இயேசு ஜீவித்திருந்தார் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதேனும் உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries