settings icon
share icon
கேள்வி

வேற்றுக்கிரகவாசிகள் அல்லது யுஎஃப்ஓக்கள் (UFOs) என்பவர்கள் இருக்கிறார்களா?

பதில்


முதலாவது வேற்றுகிரகவாசிகள் ஒழுக்கநெறிகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றளுள்ளவர்கள், அறிவுத்திறன், உணர்வு மற்றும் விருப்பத்தை உடையவர்கள் என்று வரையறுக்கப்பட்ட பின்னர். அடுத்து சில அறிவியல் உண்மைகளையும் காண்போம்:

1. மனிதன் நம் சூரிய மண்டலத்திலுள்ள கிட்டதட்ட அனைத்து கிரகத்திற்கும் விண்கலத்தை அனுப்பியிருக்கிறான். இந்த கிரகங்ளை உற்றுக்கவனித்த பின்பு செவ்வாய் கிரகம் மற்றும் வியாழன் கிரகத்தின் சந்திரன் ஆகியவைகளைத் தவிர்த்து மற்ற எந்த கிரகங்களிலும் ஜீவராசிகள் வாழ்வதற்கு தகுந்த இடமாக இருக்கவில்லை.

2. 1976ம் ஆண்டு அமெரிக்க தேசம் செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நபர்களை அனுப்பினார்கள். செவ்வாய் கிரகத்தின் மணலை தொட்டுப்பார்த்து அதில் உயிரினம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள அவர்கள் ஒவ்வொருவரிடமும் கருவிகள் இருந்தது. ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இதற்கு முரணாக நீங்கள் பூமியின் மிகவும் தரிசான பாலைவனத்தின் மணலை அல்லது அண்டார்டிகாவின் மிக உறைந்த அழுக்கு மிகுந்த மணலை ஆய்வு செய்தால்கூட அது நுண்ணிய உயிரினங்கள் பெருக்கம் உடையதாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம். 1997ல் அமெரிக்கா பாதை கண்டுபிடிப்பவர்களை செவ்வாய் கிரகத்தின் மேற்ப்பரப்பிற்கு அனுப்பியது. இவர்கள் அலைந்து திரிந்து அநேக மாதிரிகளையும் இன்னும் பல சோதனைகளையும் மேற்கொண்டனர். அவர்களும் உயிர்களுக்கான எந்த அடையாளத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நேரம் முதல் செவ்வாய் கிரகத்திற்கு இன்னும் பலர் பிரயாணப்பட ஆரம்பித்தனர். எத்தனை பயணங்கள் மேற்கொண்டபோதும் எப்பொழுதுமே முடிவு ஒரே மாதிரியாக தான் உள்ளது.

3. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொலைவில் உள்ள சூரிய மண்டலத்தில் புதிய கிரகங்களை தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர். சிலர் இந்த பிரபஞ்சத்தில் அநேக கிரகங்கள் இருக்கிறபடியால் எங்காவது எதிலாவது உயிரினங்கள் ஜீவிக்கலாம்/ஜீவிப்பதற்கான சாத்தியம் உண்டு எனக்கருதிக்கொண்டு அதற்கான ஆதாரத்தைத் தேடுகின்றனர். இவைகளில் எந்த கிரகமும் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதே உண்மை. பூமிக்கும் இந்த கிரகங்களுக்கும் இடையே உள்ள இந்த மிகப்பெரிய இடைவேளியே இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமிருக்கிறது என்பதை தீர்மானிக்க சாத்தியமில்லாததாக மாற்றுகிறது. சூரிய மண்டலத்திலுள்ள இந்த பூமியில்மட்டும் தான் உயிரினங்கள் வாழ சாத்தியமாக இருப்பதை அறிந்து பரிணாமவாதிகள் இந்த உயிர் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை ஆதரிக்கும்வண்ணமாக வேறொரு சூரிய மண்டலத்தில் உயிர்வாழ சாதகமான கிரகத்தைத் தேடுகின்றனர். எண்ணற்ற கிரகங்கள் அங்கு இருக்கின்றன. ஆனால் அவைகளில் உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கேதுவான சாத்தியம் இருக்கிறதா என்கிற ஆய்வில் போதுமான ஆதாரங்கள் இல்லை.

இப்படியிருக்க, வேதாகமம் இதைக்குரித்து என்ன சொல்லுகிறது? பூமியும் மனிதனும் தேவனுடைய படைப்பிலே தனித்தன்மை வாய்ந்தவர்கள். தேவன் சூரியன், சந்திரன், அல்லது நட்சத்திரங்களை படைப்பதற்கு முன்னதாகவே பூமியை படைத்தார் என்று ஆதியாகமம் 1ம் அதிகாரம் போதிக்கிறது. அப்போஸ்தலர் 17:24, 26 ஆகிய வசனங்கள் இப்படியாக சொல்லுகிறது: “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை…மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.”

ஆதியில் மனிதன் பாவமற்றவனாகவும் மற்றும் இந்த உலகத்திலுள்ள எல்லாம் “மிக நன்றாகவே” இருந்தது (ஆதியாகமம் 1:31). முதல் மனிதன் பாவம் செய்தபோது (ஆதியாகமம் 3) அதனுடைய விளைவாக வியாதி, மரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. விலங்குகள் (அவைகள் தார்மீக ரீதியில் மனிதர்கள் போலல்ல) தேவனுக்கு முன்பாக எந்த பாவமும் செய்யாத போதும் அவைகளும் பாடுபட்டு மரிக்கின்றன (ரோமர் 8:19-22). நும்முடைய பாவங்களுக்காக நாம் அடையவேண்டிய தண்டனையை இயேசு தமது சிலுவை மரணத்தின் மூலம் நீக்கினார். அவர் திரும்ப வரும்போது ஆதாம் முதல் இருந்துவருகிற சாபங்களை நீக்கிவிடுவார் (வெளிப்படுத்தல் 21-22). ரோமர் 8:19-22 சொல்கிறது எல்லா ஜீவராசிகளும் இந்த நேரத்திற்காக காத்திருக்கின்றன என்று. நாம் எல்லோரும் கவனிக்க வேண்டியது இயேசு மனுகுலத்திற்காக மரிப்பதற்காகவே வந்தார் அவர் ஒரேதரம் மட்டுமே மரித்தார் (எபிரெயர் 7:27; 9:26; 10:10).

சிருஷ்டிப்புகள் யாவும் சபிக்கப்பட்டதன் விளைவாக பாடு அனுபவித்தால், இந்த பூமிக்கு அப்பாற்பட்ட உயிரினங்களும்; பாடு அனுபவிக்கவேண்டும். மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கிறது என்று விவாதத்திற்காக எடுத்துக்கொள்வோமானால் அவைகளும் நிச்சயம் பாடு அனுபவிக்க வேண்டும். ஒருவேளை இப்பொழுது இல்லையென்றாலும் வானங்கள் மடமடவென்று அகன்று, பூதங்கள் வெந்து உருகிப்போகும் நாளில் (2 பேதுரு 3:10) அவைகளும் பாடு அனுபவிக்க வேண்டும். அவர்கள் பாவம் செய்யவே இல்லை என்றால் அவர்களை தண்டிப்பதன் மூலம் தேவன் அநீதி செய்தவராகிறார். அவர்கள் பாவம் செய்திருந்தால், கிறிஸ்து ஒரேதரம் மட்டுமே மரிக்க முடியும் (அதை அவர் இப்பூமியில் செய்தார்), எனவே அவர்கள் பாவத்தில் இருப்பார்கள் அது தேவனுடைய குணாதிசயத்திற்கு முரண்பாடானது ஆகும் (2 பேதுரு 3:9). நிச்சயமாக பூமிக்கு அப்பால் உயிரினங்கள் இருக்குமே ஆனால் இது நமக்கு தீர்க்க முடியாத முரண்பாடாகவே இருக்கிறது.

பிற கிரகத்தில் உள்ள அறநெறியில்லாத மற்றும் உணர்வற்ற வடிவமுள்ள உயிரினங்களை குறித்து என்ன சொல்வது? பாசிகள், நாய்கள், மற்றும் பூனைகள் அறியப்படாத அந்த கிரகத்தில் இப்பொழுது இருக்குமா? தோரயமாக இது வேதாகமத்தின் வசனங்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. ஆனால் இது “எல்லா சிருஷ்டிகளும் பாடு அனுபவிப்பதனால், தொலைவிலுள்ள அறிந்திராத பிற கிரகத்தில் உள்ள அறநெறியில்லாத மற்றும் உணர்வற்ற உயிரினங்கள் பாடுகளை அனுபவிக்க வைப்பதில் தேவனுடைய நோக்கம் என்ன?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது இது மிகுந்த பிரச்சனையாக இருக்கும்.

முடிவாக, பிரபஞ்சத்தில் மற்ற இடங்களில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதை விசுவாசிப்பதற்கான காரணத்தை வேதாகமம் நமக்கு தரவில்லை. உண்மையில் மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்பதற்கு வேதாகமம் சில காரணங்களை தருகின்றன. ஆம் அநேக விசித்திரமான மற்றும் விளக்கமுடியாத காரியங்கள் நிறைவேறியிருக்கின்றன. அதனால் இவைகள் வேற்றுக்கிரகவாசிகள் அல்லது யுஎஃப்ஓக்களால் தான் நடந்தன என்று கூற காரணங்கள் கிடையாது. நடந்த நிகழ்வுகளுக்கு காணக்கூடியதான காரணங்கள் இருக்குமேயானால், அது சிறிய அளவில் ஆவிக்குரியதான தோற்றத்தோடு இருக்கும் மேலும் குறிப்பாக இது சாத்தானிடத்தில் இருந்தே தோன்றியதாக இருக்கும்.

English



முகப்பு பக்கம்

வேற்றுக்கிரகவாசிகள் அல்லது யுஎஃப்ஓக்கள் (UFOs) என்பவர்கள் இருக்கிறார்களா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries